<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-36234289</id><updated>2012-02-02T15:07:38.639+05:30</updated><category term='இசை'/><category term='ஆங்கில நாவல்'/><category term='பெண்ணியம்'/><category term='அமெரிக்கன்'/><category term='மூலநூல்'/><category term='சிறுகதை'/><category term='Debugging.'/><category term='பெரல்மான்'/><category term='பன்னிரண்டாம் இரவு'/><category term='சுஃபியிசம்'/><category term='தழுவல்'/><category term='இசுலாம்'/><category term='குழந்தை இலக்கியம்'/><category term='காதல் படிக்கட்டுகள்'/><category term='சமூகம்'/><category term='களஞ்சியம்'/><category term='ஜூ.வி.'/><category term='ஆ.வி.'/><category term='மேலாண்மை'/><category term='கதை'/><category term='ஷிட்னி ஷெல்ட்டன்'/><category term='ஷேக்ஸ்பியர்'/><category term='முதல் புதினம்.'/><category term='வலைப்பதிவு'/><category term='வடமொழி'/><category term='தத்துவம்.'/><category term='வலைத்தளம்'/><category term='அலை ஓசை'/><category term='மொழிபெயர்ப்பு'/><category term='ஆதவன்'/><category term='கு.அழகிரிசாமி'/><category term='அறிவியல்'/><category term='ஜூல்ஸ் வெர்ன்'/><category term='படைப்பாக்கம்'/><category term='தமிழ்'/><category term='ரஷ்யன்'/><category term='கணிதம்'/><category term='சடையர்'/><category term='நகைச்சுவை'/><category term='வரலாற்றுக்கதை்'/><category term='வாழ்க்கை வரலாறு'/><category term='கல்கி'/><category term='பாடல்'/><category term='சாகித்திய அகாதமி'/><category term='பிரதாப முதலியார் சரித்திரம்'/><category term='நாவல்'/><category term='சோவியத் யூனியன்'/><category term='கம்யூனிசம்'/><category term='மலையாளம்'/><category term='சுயமுன்னேற்றம்'/><category term='இந்தி'/><category term='திரைப்படம்'/><category term='மாயூரம் வேத நாயகம்பிள்ளை'/><title type='text'>புரட்டிப் போட்டப் படைப்புகள்</title><subtitle type='html'>புரட்டிப் பார்ப்போம் என்று ஆரம்பித்து படித்து முடித்ததும் நம்முடைய வாழ்க்கையையே  புரட்டிப் போட்டு விட்டப் படைப்புகள் பற்றியும் அவை  ஏற்படுத்திய தாக்கங்களைப் பற்றியுமான பதிவுகள்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://bookimpact.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://bookimpact.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>75</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-36234289.post-3017681342692168918</id><published>2012-01-26T04:19:00.000+05:30</published><updated>2012-01-26T04:19:02.828+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>துரைப்பாண்டி (சாமியாட்டம் - பாலபாரதி)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;ஒரு வலைப்பதிவருக்கும் எழுத்தாளருக்கும் என்ன வேறுபாடு? ஒரு வலைப்பதிவுக்கும் சிறுகதைக்கும் என்ன வேறுபாடு? சாமியாட்டம் சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் போது 'துரைப்பாண்டி'யைப் படிக்கும் போது தோன்றிய கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;'துரைப்பாண்டி' ஒரு சிறந்த பதிவு என்பதைத் தாண்டி போகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எடுத்துக் கொண்ட, கிடைத்த கனமான விஷயத்தின் அனைத்து பரிமாணங்களையும் ஊடுருவாமல் ஒற்றைக் கோட்டில் நகர்ந்து முடிந்து விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'தொறப்பாண்டி' கதை சொல்லியை விட சிறியவன், பரிதாபத்துக்குரியவன் என்பதற்கு 'பதினொரு வயது நிரம்பியவன், கட்டையான உருவம், மெலிந்த தேகம், ஏக்கம் வழியும் கண்களுடையவன்' என்பதும் 'பால் முகம் மாறாத அவனது பருவமும் உருவமும்' என்பதும் நிச்சயம் போதுமானதாக இருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியில் துரைப்பாண்டி சொல்லச் சொல்ல எழுதப்பட்ட கடிதத்தைப் படிக்கும் போதுதான் அவனது அறியா பருவமும் குழந்தை மொழியும் தெரிகிறது. அதுவரை நடக்கும் உரையாடல்கள் எல்லாம் ஏதோ, இரண்டு சகவயதினர் டீக்கடையில் சந்திக்கும் போது தமது வாழ்க்கையைப் பற்றி அலுத்துக் கொள்ளும் விதத்தில்தான் பாதிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கடிதம் எழுதிய பிறகு அவன் கண்களில் தெரியும் 'தான் எப்படியும் மீட்கப்பட்டு விடுவோம்' என்ற நம்பிக்கைக்குத் தேவையான அழுத்தம் அதற்கு முன்பு ஏற்பட்டிருக்கவில்லை. அதனால், பதினெட்டு வயது இளைஞனோடு துரைப்பாண்டி நடக்கத் தொடங்கியதும் அவன் 'சமுத்திரத்தால் விழுங்கப்படுவது' போன்ற சோகம் ஏற்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணில் பட்ட, காதில் விழுந்த சம்பவங்களை பதிவு செய்வது வலைப்பதிவு. அவற்றுக்குள் புகுந்து தனது அனுபவங்களையும் வாசிப்பையும் வைத்து மறைந்திருக்கும் உணர்வுகளையும், திரை மறைவு நிகழ்வுகளையும் கண்டுபிடித்துச் சொல்வது சிறுகதை என்று சொல்லலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bookimpact.blogspot.com/2012/01/blog-post.html"&gt;கோட்டிமுத்து&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://bookimpact.blogspot.com/2012/01/blog-post_20.html"&gt;பாரதியின் ஒரு பாட்டு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://bookimpact.blogspot.com/2012/01/blog-post_24.html"&gt;பொம்மை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://bookimpact.blogspot.com/2012/01/blog-post_25.html"&gt;கடந்து போதல்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://bookimpact.blogspot.com/2012/01/blog-post_7634.html"&gt;தண்ணீர் தேசம்&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36234289-3017681342692168918?l=bookimpact.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookimpact.blogspot.com/feeds/3017681342692168918/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36234289&amp;postID=3017681342692168918' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/3017681342692168918'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/3017681342692168918'/><link rel='alternate' type='text/html' href='http://bookimpact.blogspot.com/2012/01/blog-post_26.html' title='துரைப்பாண்டி (சாமியாட்டம் - பாலபாரதி)'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36234289.post-6817121622388329392</id><published>2012-01-25T18:43:00.004+05:30</published><updated>2012-01-25T18:45:31.818+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>தண்ணீர் தேசம் (சாமியாட்டம் - பாலபாரதி)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;ஒன்பது வருடங்களுக்குப் பிறகு சொந்த ஊருக்குத் திரும்பி வந்து ஊர் எப்படி முன்னேறியிருக்கிறது என்று ஆர்வமாக தேடிப்பார்க்கிறார். ஊரில் 'முன்னேற்றங்களுக்கான' அறிகுறிகள் நிறைய தென்படுகின்றன. ஊர் மாறிப் போனது போலவே வீடும் மாறிப் போய் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சந்திராயனை விண்வெளிக்கு அனுப்பி விட்ட நிலைக்கு வந்து விட்ட பிறகும் பல கிராமங்களுக்கு குடிதண்ணீர் வசதி மட்டும் இன்னும் வாய்க்கவில்லை. சிறு வயது நண்பனின் குடிசைக்குப் போனால், குடி தண்ணீர் தீர்ந்து போயிருந்தது. அரைப்பாவாடை கட்டிய 5 வயது சிறுமி கடைக்குப் போய் வந்த போது அவள் கையில் வியர்த்து வழிந்தபடி இருந்தது பெப்ஸி பாட்டில்.&lt;br /&gt;&lt;br /&gt;மகஇகவினரின் பாடல் ஒன்றில் சொல்வது போல நாடு முன்னேறுதுங்குறவனை செருப்பால் அடிக்கும் சிறுகதை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: xx-small;"&gt;நாடு முன்னேறுதுங்குறான் அட மினுமினு மினுக்கா ஜிலுஜிலு ஜிலுக்கா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: xx-small;"&gt;ஜெர்மன் அமெரிக்கா ஜப்பானு கணக்கா நம்ம நாடு முன்னேறுதுங்குறான்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: xx-small;"&gt;தாகம் தீர கோக்க கோலா, போதை ஏற பாரின் சீசா,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: xx-small;"&gt;மிக்சு பண்ணிக்கோ பெப்சி லெஹரு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: xx-small;"&gt;மிச்ச வேலைக்கெல்லாம் மினரலு வாட்டரு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: xx-small;"&gt;குடிக்கத் தண்ணி இல்ல கொப்புளிக்க பன்னீரு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: xx-small;"&gt;அட்றா செருப்பால வீங்கிப்புடும் செவுளு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: xx-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://bookimpact.blogspot.com/2012/01/blog-post.html"&gt;கோட்டிமுத்து&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://bookimpact.blogspot.com/2012/01/blog-post_20.html"&gt;பாரதியின் ஒரு பாட்டு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://bookimpact.blogspot.com/2012/01/blog-post_24.html"&gt;பொம்மை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://bookimpact.blogspot.com/2012/01/blog-post_25.html"&gt;கடந்து போதல்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36234289-6817121622388329392?l=bookimpact.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookimpact.blogspot.com/feeds/6817121622388329392/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36234289&amp;postID=6817121622388329392' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/6817121622388329392'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/6817121622388329392'/><link rel='alternate' type='text/html' href='http://bookimpact.blogspot.com/2012/01/blog-post_7634.html' title='தண்ணீர் தேசம் (சாமியாட்டம் - பாலபாரதி)'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36234289.post-4252355114424639830</id><published>2012-01-25T09:52:00.004+05:30</published><updated>2012-01-25T09:52:43.399+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>கடந்து போதல் (சாமியாட்டம் - பாலபாரதி)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;தூங்கிய பிறகு எளிதில் எழுந்து விடாதவரையும் எழுப்பி விடும் ஓலம். ஒரே அலுவலகத்தில் வேலை செய்து காதல் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியினர். &amp;nbsp;மும்பைக்கு மாற்றலாகி வந்ததும் ஊர்க்கார அண்ணாச்சிக்கு சொந்தமான வீட்டு வாடகைக்கு கிடைத்து விட்ட நிம்மதியில் இருந்தவர்களை நடு இரவில் எழுப்பி உட்கார வைக்கிறது பயங்கரமான அந்த அலறல்.&lt;br /&gt;&lt;br /&gt;அலறல் மர்மமாக இல்லை, இவர்களைத் தவிர குடியிருப்பில் வேறு யாரும் கவலைப் பட்டதாக தெரியவில்லை. மும்பையில் பணிக்குப் போக வர செலவாகும் நேரத்தையெல்லாம் தாண்டி அடுத்த நாள் மாலையில் விசாரிக்கப் போகிறார்கள். வாட்ச்மேன், வீட்டு சொந்தக்கார அண்ணாச்சி என்று சுற்றி வந்து உண்மை தெரிந்து கொள்கிறார்கள். எப்படிப்பட்ட உண்மை!&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய தினசரி வாழ்க்கை, போக்குவரத்து கவலைகள், இரவில் நிம்மதியாகத் தூங்கக் கூட விடாத சத்தத்தின் மீது வரும் கோபம், கணவன்/மனைவி விவாதங்கள், இரவுச் சமையலுக்கு காய்கறி வாங்குதல் இவற்றை எல்லாம் தாண்டி இன்னொரு உலகம் இயங்குகிறது. நாம் அமைதியாக உட்கார்ந்து இணையத்தை மேய்ந்து கொண்டிருக்கும் போது நான்காவது வீட்டில் நமக்குத் தொடர்புடையை வடுக்கள் ஆழமாக பதிந்திருக்கலாம் என்ற உண்மையை உறைக்கச் சொல்லும் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;படிக்க ஆரம்பிக்கும் போது ஆரம்பிக்கும் மர்மம், கதாநாயகர்களுடனேயே நம்மை பயணிக்க வைத்து மறக்க முடியாத பதிவை மனதில் ஏற்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bookimpact.blogspot.com/2012/01/blog-post.html"&gt;கோட்டிமுத்து&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://bookimpact.blogspot.com/2012/01/blog-post_20.html"&gt;பாரதியின் ஒரு பாட்டு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://bookimpact.blogspot.com/2012/01/blog-post_24.html"&gt;பொம்மை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36234289-4252355114424639830?l=bookimpact.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookimpact.blogspot.com/feeds/4252355114424639830/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36234289&amp;postID=4252355114424639830' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/4252355114424639830'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/4252355114424639830'/><link rel='alternate' type='text/html' href='http://bookimpact.blogspot.com/2012/01/blog-post_25.html' title='கடந்து போதல் (சாமியாட்டம் - பாலபாரதி)'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36234289.post-1902530774334674131</id><published>2012-01-24T10:23:00.002+05:30</published><updated>2012-01-24T10:23:21.529+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>பொம்மை (சாமியாட்டம் - பாலபாரதி)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;உழைக்கும் வர்க்க வாழ்க்கைப் போராட்டங்களின் சித்தரிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'பிரபல' நிறுவனத்தில் வேலை பார்த்தாலும், அந்த சம்பளத்தில் அமைத்துக் கொள்ளும் வாழ்க்கைக்கு உத்தரவாதம் இல்லை. &amp;nbsp;ஆட்குறைப்பில் வேலை போன எதிர்த்து போராடும் வழிகள் &amp;nbsp;பலன் தரப் போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;குறைவான சம்பளத்தில் ஜவுளிக் கடையில் 'பொம்மை'யாக நிற்கும் மாற்று வேலை. மனைவியின் தம்பிக்கு சொந்தமான வீட்டில் குடியிருப்பதால்&amp;nbsp;வாடகை கொடுக்கத் தேவையில்லை.&amp;nbsp;ஓரளவு சமாளிக்க முடிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் மனைவியின் தம்பி ஊரிலிருந்து வரும் வைபவம். 'குறைந்த பட்சம் கறி எடுத்து சமைக்க வேண்டாமா? மச்சான் வருகைக்காக ஒரு நாள் லீவு எடுத்து வீட்டில் இருக்க வேண்டாமா?'&lt;br /&gt;&lt;br /&gt;குடும்பச் சூழல், உரையாடல்கள், குழந்தை வளர்ப்பு, பொருளாதார நிலை, வேலை விபரங்கள் என்று பன்னீரின் உலகத்துக்குள் நுழைந்து அவனது கவலைகளிலும் திட்டமிடலிலும் நாமும் மூழ்குகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைக்கார சேட்டிடம் சம்பள முன்பணம் கேட்க வேண்டும். வேலை முடிந்து கடை முதலாளி உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு வருகிறான். கோரிக்கை சேட்டின் புத்திசாலித்தனத்தால் மழுங்கடிக்கப்பட்டு முதலாளித்துவ நிலையில் நிராகரிக்கப்படுகிறது. &amp;nbsp;சேட்டின் பணம் வேறு இடத்தில் சரணடைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'சாலை விளக்குகள் மஞ்சள் ஒளியை உமிர்ந்தபடி இருக்க' வயதான பிச்சைக்காரர்கள் மூடப்பட்ட கடை வாசல் இருளில் படுக்கை விரிக்கிறார்கள். இருப்பவர்களின் உலகமும் இல்லாதவர்களின் உலகமும் அருகருகே, எந்த உறுத்தலும் ஏற்படுத்தாமல் இயங்குகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பின் குறிப்பு :&lt;br /&gt;கதைக்குள் ஒரு கதையாக ஒரு நிகழ்ச்சி. கரடி வேடம் போடும் பன்னீரின் 3 வயது குழந்தைக்கு பொம்மையை விட உள்ளே இருக்கும் அப்பாதான் வேண்டும். அது ஒரு தனிக்கதையாக இந்த சிறுகதைக்குள் ஒட்டாமல் நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bookimpact.blogspot.com/2012/01/blog-post.html"&gt;கோட்டிமுத்து&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://bookimpact.blogspot.com/2012/01/blog-post_20.html"&gt;பாரதியின் ஒரு பாட்டு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36234289-1902530774334674131?l=bookimpact.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookimpact.blogspot.com/feeds/1902530774334674131/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36234289&amp;postID=1902530774334674131' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/1902530774334674131'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/1902530774334674131'/><link rel='alternate' type='text/html' href='http://bookimpact.blogspot.com/2012/01/blog-post_24.html' title='பொம்மை (சாமியாட்டம் - பாலபாரதி)'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36234289.post-7361448665689805395</id><published>2012-01-20T09:57:00.000+05:30</published><updated>2012-01-20T09:57:45.828+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>பாரதியின் ஒரு பாட்டு (சாமியாட்டம் - பாலபாரதி)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;a href="http://bookimpact.blogspot.com/2012/01/blog-post.html"&gt;முதல் கதை - கோட்டி முத்து&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது கதை - பாரதியின் ஒரு பாட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;1. சிறு சிறு சம்பவங்களின் மூலம் சிறு சிறு விபரங்கள் மூலம் ஜெயாவைப் பற்றிய முழுமையான சித்திரம் கிடைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul style="text-align: left;"&gt;&lt;li&gt;ஜெயா படிப்பதை முற்றிலும் உள்வாங்கிக் கொண்டு நடைமுறையுடன் பொருத்திப் பார்க்கும் இயல்புடையவள் என்று தெரிகிறது.&amp;nbsp;&lt;/li&gt;&lt;li&gt;ஜெயா ஒன்பதாவது படித்தாலும் வளர்ந்த பெண் என்று தெரிந்து விடுகிறது.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;வயதுக்கு வந்த பிறகு போராடி தந்தையின் விருப்பத்துக்கு மாறாகத்தான் படிப்பைத் தொடர்கிறாள் என்று தெரிகிறது.&amp;nbsp;&lt;/li&gt;&lt;li&gt;ஜெயாவின் குடும்பம் கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தது, அப்பாவும் அம்மாவும் தினமும் உழைத்து குடும்பத்தை நடத்துகிறார்கள் என்று புரிந்து விடுகிறது.&amp;nbsp;&lt;/li&gt;&lt;li&gt;வெளியில் ஏதாவது பிரச்சனைகள் என்றால் பள்ளிக்குப் போவதே நிறுத்தப்படும் வாய்ப்புகள் இருப்பது புரிகிறது.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;ஜெயா தாவணி கட்டினாலும் சராசரி தமிழ்ப் பெண் போல அடங்கி ஒடுங்கி ஒதுங்கிப் போகும் இயல்பினள் அல்ல என்று தெரிகிறது.&amp;nbsp;&lt;/li&gt;&lt;li&gt;ஜெயா பாதகம் செய்பவரைக் கண்டால் பயம் கொள்வதில்லை, மோதி மிதித்து விடுபவள் என்று தெரிகிறது.&amp;nbsp;&lt;/li&gt;&lt;li&gt;ஜெயா உழைத்து படிப்பவள், ஆசிரியர்களுக்கு செல்லம் என்றும் தெரிந்து கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;கதையின் இறுதிக் காட்சி நடக்கும் சாலைச் சூழல் நன்கு அறிமுகமாகி விடுகிறது.&amp;nbsp;&lt;/li&gt;&lt;li&gt;மற்றவர்க்கு உதவி செய்யும் ஜெயாவின் குணமும் முன்கூட்டியே தெளிவாகிறது.&amp;nbsp;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;2. கடைசியில் அவளுக்கு 'மீறி வந்த அழுகை' தான் கதையின் உச்சம். அதை வந்து சேர, கதை முழுக்க விரவிக் கிடக்கும் விவரிப்புகளை திரட்டி சரியான வரிசையில் கோர்த்துக் கொண்டே வர வேண்டும். முத்துக்களை கோர்த்து மாலை செய்யும் தனது வேலையை ஆசிரியர் வாசகரிடமே விட்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;3. மும்பை வாசகர்களுக்காக வெளியிடப்பட்டபோது ஹிந்தி வசனங்கள் இயல்பானதாகவும் பொருத்தமானதாகவும் இருந்திருக்கலாம். ஆனால், இந்தி தெரியாத தமிழ் வாசகர்கள் கொஞ்சம் திகைப்படைவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கதை மும்பையில் மட்டுமில்லை எங்கு வேண்டுமானாலும் நடக்கக் கூடியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul style="text-align: left;"&gt;&lt;li&gt;பையாக்களும், 60 வயது பெரியவரும் இந்தி பேசாமல் தமிழ் பேசுபவர்களாகவும், ஜெயா அசாமீஸ் பேசுபவளாகவும் இருந்து கதை சென்னையில் கூட நடந்திருக்கலாம்.&amp;nbsp;&lt;/li&gt;&lt;li&gt;ஜெயா புலம் பெயர்ந்த சூழலில் வாழும் பெண்ணாக இல்லாமல் சொந்த கிராமத்திலேயே வாழ்பவளாகக் கூட இருக்கலாம்.&amp;nbsp;&lt;/li&gt;&lt;li&gt;அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிக்கும் பெண் கூட இத்தகைய உலக 'நடைமுறை'யை சந்திக்கலாம்.&amp;nbsp;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;எனவே மொழி சார்ந்த அடையாளம் கதையின் நோக்கத்துக்கு தேவையற்றது என்றே தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36234289-7361448665689805395?l=bookimpact.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookimpact.blogspot.com/feeds/7361448665689805395/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36234289&amp;postID=7361448665689805395' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/7361448665689805395'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/7361448665689805395'/><link rel='alternate' type='text/html' href='http://bookimpact.blogspot.com/2012/01/blog-post_20.html' title='பாரதியின் ஒரு பாட்டு (சாமியாட்டம் - பாலபாரதி)'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36234289.post-4815637710822785648</id><published>2012-01-20T05:50:00.002+05:30</published><updated>2012-01-20T05:50:47.457+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>கோட்டிமுத்து (சாமியாட்டம் - யெஸ் பாலபாரதி)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;பாலபாரதியின் சாமியாட்டம் சிறுகதைத் தொகுப்பில் வெளியாகியுள்ள ஒவ்வொரு சிறுகதையைப் பற்றியும் தனித்தனியாக விமர்சனம் எழுதுவதாக உத்தேசம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் கோட்டி முத்து.&lt;br /&gt;&lt;br /&gt;1. கோட்டி முத்து நமக்கு அன்னியமான ஒரு கதாபாத்திரம் இல்லை. நமது கிராமத்தில் நாம் பார்த்த வேலையாள் ஒருவரை மனதில் கொண்டு வருகிறது இந்த எளிய மொழியிலான பாத்திரப் படைப்பு. டால்ஸ்டாயின் போரும் அமைதியும் அல்லது அன்னா கரனீனா அல்லது சிறுகதைகளைப் படிக்கும் போது பாத்திரங்களை உயிருள்ள மனிதர்களாக (ரத்தமும் சதையுமாக மட்டும் அல்ல!) நம் மனக்கண் முன் பார்க்கிறோம். &amp;nbsp;அத்தகைய உயிரோட்டம் நிறைந்த பாத்திரங்களில் ஒன்று கோட்டிமுத்து.&lt;br /&gt;&lt;br /&gt;2. கோட்டி முத்து எந்த நாட்டைச் சேர்ந்தவரும் அடையாளம் கண்டு கொள்ளும் பாத்திரம். கோட்டிமுத்துவில் நாடு, மொழி கடந்த மனிதப் பொதுமை வெளிப்படுகிறது. கோட்டிமுத்துக்கள் தமிழ்நாட்டு கிராமங்களில் மட்டுமில்லை, உலகம் முழுக்க எல்லா கிராமங்களிலும் இருக்கிறார்கள். 20ம் நூற்றாண்டின் முதல் பாதியில் வாழ்ந்த சீன எழுத்தாளர் லூஷ்யுன்(Luxun) எழுதிய&lt;a href="http://en.wikipedia.org/wiki/The_True_Story_of_Ah_Q"&gt; ஆQவின் உண்மைக் கதை&lt;/a&gt;யில் ஒரு கோட்டிமுத்து (ஆQ), வருகிறார். அது ஒரு 'அழியா வரம்' பெற்ற கதையாக இன்றும் பேசப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;3. மனிதன் விலங்கிலிருந்து வளர்ந்து சமூகமாக பரிணமித்திருக்கிறான். ஒரு இலக்கியப் படைப்பு மனிதனின் விலங்குப் பக்கத்தை &amp;nbsp;குடைந்து 'இருப்பதைத்தானே எடுத்துக் காட்டுகிறோம்' என்று முன் வைக்கலாம். சாருநிவேதிதா மற்றும் அவரது சீடர்களின் எழுத்துக்கள் இப்படி சிரங்கைச் சொறிந்து கொடுக்கும் வகையினவை. அவற்றைப் படிக்கும் போது ஒருவர் சமூக வாழ்க்கையிலிருந்து ஒரு படி பின்னடைந்து விலங்காக பின்நோக்கி பரிணமிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதனின் சமூக இயல்பை சித்திரப்படுத்தி வாசிப்பவரை மேல்நோக்கி எடுத்துச் செல்வது இன்னொரு வகை படைப்பு. டால்ஸ்டாய், லூஷ்யுன் போன்றவர்களின் படைப்புகள் இந்த வகையைச் சேர்ந்தவை.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பொறுத்த வரை நான் முதல் வகை படைப்புகளை ஒரு முறைக்கு மேல் படிக்க விரும்புவதில்லை, இரண்டாவது வகை படைப்புகளை பல நூறு முறைகள் படிக்கவும் சலிப்பதில்லை. பாலபாரதியின் கோட்டிமுத்து இரண்டாவது வகையைச் சேர்ந்தது, புத்தக அலமாரியில் இடம் பெற்று திரும்பத் திரும்பப் படித்து நம்மை உயர்த்திக் கொள்ள உதவுவது.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்மறை விமர்சனங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1. 'அண்ணே, எங்க ஊர்ல கோட்டி முத்துன்னு ஒருத்தன் இருந்தாண்ணே' என்று பாலபாரதியின் குரலில் ஆரம்பித்து நேர்கோட்டில் போய் ஒரு சம்பவத்தில் முடிந்து விடுகிறது கதை. சிறுகதை ஒன்றில் எதிர்பார்க்கும் முடிச்சு, அதன் அவிழ்ப்பு போன்ற உத்திகள் இந்தக் கதையில் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;2. கோட்டிமுத்துவைத் தவிர்த்த சூழலைப் பற்றிய விபரங்களும் விவரிப்புகளும் ஆழமாக, உயிரோட்டத்துடன் இல்லை. பள்ளிக்குழந்தைகளும், வாத்தியார்களும், மளிகைக்கடை சுரேஷ் அண்ணாச்சியும், அப்பாவும், உமையனன் வாத்தியாரும், &amp;nbsp;கல்யாணி அக்காவும், கதை சொல்லியும், அவரது படையும், கோணக்குஞ்சானும், மைக் செட்டுக் காரரும் ஒரே வரியில் அறிமுகம் ஆகி கதைக்குள் நுழைந்து விடுகிறார்கள். இன்னும் &amp;nbsp;ஆழம் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. கோட்டிமுத்துவின் மீது இன்னும் பாரத்தை ஏற்றலாம். கோட்டிமுத்துவைத் தாண்டி கோட்டி முத்துவின் மீது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் இயல்புகளை ஏற்றி சித்தரிக்கும் போது அது படிப்பவர் தன்னைத்தானே விமர்சனம் செய்து கொள்வதாகவும் அமைந்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. எழுத்துப் பிழைகளும் இலக்கணப் பிழைகளும் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். பாயாசத்தில் இடறும் கற்களாக அவை படுத்துகின்றன. அடுத்த பதிப்புக்கு ஒரு கறாரான தமிழாசிரியரிடம் கொடுத்து பிழை திருத்தம் செய்து வாங்கிக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36234289-4815637710822785648?l=bookimpact.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookimpact.blogspot.com/feeds/4815637710822785648/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36234289&amp;postID=4815637710822785648' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/4815637710822785648'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/4815637710822785648'/><link rel='alternate' type='text/html' href='http://bookimpact.blogspot.com/2012/01/blog-post.html' title='கோட்டிமுத்து (சாமியாட்டம் - யெஸ் பாலபாரதி)'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36234289.post-8237493043166027871</id><published>2011-11-28T10:22:00.001+05:30</published><updated>2011-11-28T10:26:54.249+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கம்யூனிசம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சோவியத் யூனியன்'/><title type='text'>உலகைக் குலுக்கிய 10 நாட்கள் - ஜான் ரீட்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;நவம்பர் 7. மனித வரலாற்றின் ஒரு மாபெரும் முன்னேற்ற பாய்ச்சலான ரஷ்ய சோஷலிசப் புரட்சியில் முக்கியமான ஒரு நாள் 1917ஆம் ஆண்டின் நவம்பர் 7.&lt;br /&gt;&lt;br /&gt;நவம்பர் புரட்சி பற்றிய விபரங்கள் நமக்கு - ஒட்டு மொத்த மனித குலத்திற்கு - ஒரு வாழும் ஆவணமாக இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;உழைக்கும் மக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய சூழ்நிலை என்ன?&lt;br /&gt;புரட்சி எப்படி நடந்தது?&lt;br /&gt;அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு காலமும் இடமும் எப்படி அமைந்தன?&lt;br /&gt;&lt;br /&gt;இவை எல்லாவற்றையும் நமது காலத்திற்கு நமது சமூகத்திற்கு எப்படிப் பொருத்திப் பார்க்க வேண்டும் என்று நடைமுறை பாடமாக அது திகழ்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1. 1905க்கு முன் ரஷ்யாவின் சமூக அமைப்பு&lt;br /&gt;2. 1905ல் ஏற்பட்ட புரட்சியும் சமரச அரசியல் அமைப்பும்&lt;br /&gt;3. 1905 முதல் 1917 வரை ஏற்பட்ட மாற்றங்கள்.&lt;br /&gt;4. 1917 மார்ச் (பிப்ரவரி) மாதம் ஜார் மன்னர் தூக்கி எறியப்படுதல்.&lt;br /&gt;5. 1917 மார்ச் முதல் நவம்பர் வரையிலான நிகழ்வுகள்&lt;br /&gt;6. 1917 நவம்பருக்குப் பின் 1923 வரை சோவியத் அரசாங்கம் நடத்த வேண்டியிருந்த போர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;டால்ஸ்டாயின் போரும் அமைதியும், அன்னா கரனீனா அல்லது சிறுகதைகளைப் படித்தால் அந்த நூற்றாண்டு ரஷ்ய சமூகத்தின் நெடுக்கு வெட்டுத் தோற்றத்தைப் புரிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;19ஆம் நூற்றாண்டில் ரஷ்யாவில் ஜார் மன்னரின் தலைமையில், அரச குடும்பத்தினர், நிலபிரபுக்கள் என்ற சமூக அடுக்குகளை உழைக்கும் மக்கள், விவசாயிகள், போர்வீரர்கள் சுமக்க வேண்டியிருந்தது. ஆளும் வர்க்கத்தின் வரிசைகளில் இருந்து மதகுருக்கள், படைத் தளபதிகள் உருவானார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐரோப்பாவில் ஆதிக்க சக்திகளுக்கிடையே நடக்கும் போர்களில் ரஷ்யா கலந்து கொள்வது 18ஆம் நூற்றாண்டின் நெப்போலியனிக் போர்களிலேயே ஆரம்பித்த ஒன்று. பெரும் அளவிலான ரஷ்ய படைகள், பிரபுக்களை படைத் தலைவர்களாகக் கொண்டு, விவசாயிகளையும் உழைக்கும் மக்களையும் பெரும் அளவில் போர் முனையில் பலி கொடுப்பது என்ற வகையில்தான் ஜார் மன்னர்களின் வெளியுறவுக் கொள்கை அமைந்தது. ஐரோப்பிய சமூகத்தில் தான் ஒரு முக்கிய பங்கை வகிக்க வேண்டும் என்ற ஜார் மன்னனின் கற்பனை செருக்குக்கு இந்த போர்கள் உதவி புரிந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;அரச குடும்பத்தினர், பிரபு குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக ஆதிக்க உரிமைகளை பெற்று வந்தார்கள். அரச குடும்பத்தினரும், பிரபு குடும்பத்தினரும் படைகளில் தலைமை பொறுப்பு, அரசு அதிகாரிகளாக நேரடியாக உட்காரும் வாய்ப்பு பெற்றிருந்தார்கள். பிரெஞ்சு மொழி உயர் தட்டு மக்களின் மொழியாக இருந்தது. ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலிருந்தும் அறிவுஜீவிகளும், தொழில்முறை வல்லுனர்களும் ஜார் மன்னரின் அவையில் அரசியல் செய்து கொண்டிருந்தார்கள். விவசாயிகள் நிலப்பிரபுக்களுக்கும் சேர்த்து உழைத்தார்கள். சீமான்களும் சீமாட்டிகளும் சாப்பிடுவதும், நடனமாடுவதும், வேட்டைக்குப் போவதும், குடிப்பதுமாக பொழுதை கழித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிலாந்தில் தோன்றிய தொழிற்புரட்சி ரஷ்யாவிலும் மாற்றங்களை கொண்டு வருகிறது. விவசாயத்தில் நவீன கருவிகளை பயன்படுத்துதல், தொழில்துறையின் ஆரம்ப கட்டங்களில் மக்களிடையே மாற்றங்களுக்கான விழிப்புணர்வு ஏற்பட்டு, போராட்டங்கள் ஆரம்பிக்க ஆட்சி முறையில் தேர்தல் முறை அறிமுகப்படுத்துதல் போன்ற சீர்திருத்தங்கள் தோன்ற ஆரம்பித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;மனித குலத்தின் சமூக விடுதலைக்கான மார்க்சிய அணுகுமுறையும் ரஷ்யாவுக்குள் பரவி பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான போராட்ட சங்கத்தை 1895ல் லெனின் ஏற்படுத்தியிருந்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ரஷ்யாவின் சமூக-ஜனநாயக தொழிலாளர் கட்சி அமைக்கப்பட்டது. அந்த கட்சியிலிருந்துதான் போல்ஷ்விக்குகள், மென்ஷ்விக்குகள் உருவானார்கள். 1903ல் நடந்த கட்சியின் இரண்டாவது காங்கிரசில் பெரும்பான்மை பெற்றிருந்த கோஷ்டி போல்ஷ்விக் என்றும் சிறுபான்மையினர் மென்ஷ்விக்குகள் என்றும் அழைக்கப்பட்டனர். பொதுவாக போல்ஷ்விக்குகள் உழைக்கும் மக்களை பிரதிநிதிப்படுத்தினார்கள். தொழிற்சாலைகளிலும், கிராமங்களிலும், போர்வீரர் பாசறைகளிலும் தமது பிராச்சாரத்தை செய்து வந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1905ல் ஜார் மன்னர், டூமா என்ற தேர்ந்தெடுக்கப்பட்ட அவைகள் மூலம் ஆட்சி செய்யும் சீர்திருத்தம் ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு நகரங்களிலும் டூமாக்கள் வாக்களிப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு நிர்வாக பணிகளில் பங்குபெற்றனர். 1905 முதல் 1917 வரையிலான கால கட்டத்தில் மக்கள் எதிர்பார்த்த, அவர்கள் வாழ்க்கையில் அடிப்படை மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டு விடவில்லை. மேலும் மேலும் ஏகாதிபத்தியங்களின் அழுத்தமும் ஜார் மன்னராட்சியின் கீழ் நிலப்பிரபுத்துவத்தின் சுரண்டலும் மேலும் மேலும் மக்களை கடுமையான கொடுமைக்குள்ளாக்கின.&lt;br /&gt;&lt;br /&gt;கம்யூனிச அரசியல் அடிப்படைகள் உருவாக்கப்பட்டு விட்ட உலக சமூகத்தில் ரஷ்யாவில் பாட்டாளி வர்க்க விழிப்புணர்வு வேகமாக பரவியிருந்தது. சோஷலிச கட்சி மக்களிடையே வேலை செய்து தொழிலாளர்கள், படைவீரர்கள், விவசாயிகள் சோவியத்துகளை ஏற்படுத்தியிருந்தனர். சோவியத் என்பது உழைக்கும் மக்கள் தமக்குத் தாமே ஏற்படுத்திக் கொண்டிருந்த பிரதிநிதித்துவ அரசியல் அமைப்புகள்.&lt;br /&gt;&lt;br /&gt;1917 நவம்பர் புரட்சியின் போது உலகைக் குலுக்கிய 10 நாட்கள் நூலை எழுதிய அமெரிக்க பத்திரிகையாளர் ஜான் ரீட் பெட்ரோகிராடுக்கு அடுத்த புரட்சியாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்த பெட்ரோகிராடைத் தாக்க எதிர்ப் புரட்சிப் படைகள் வந்து விட்டதாக சொல்லப்பட்ட ட்சார்கோயே செலோ நகருக்கு ரயிலில் போகிறார். அங்குதான் தற்காலிக அரசின் தலைவர் கெரென்ஸ்கி கசாக் குதிரைப்படை வீரர்களைத் திரட்டி எதிர் புரட்சியை தலைமை வகித்து நடத்த தயாராகி வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ரயில் நிலைய உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வெளியில் வருகிறார் ஜான் ரீட்.&lt;br /&gt;&lt;br /&gt;ரயில்நிலைய வாசலில் இரண்டு படைவீரர்கள் துப்பாக்கியுடன் காவலுக்கு நிற்கிறார்கள். அவர்களை நூற்றுக்கணக்கான வணிகர்கள், அரசு அதிகாரிகளும் மாணவர்களும் சூழ்ந்து கொண்டு கேள்விகளால் தாக்கிக் கொண்டிருந்தனர். இரண்டு சிப்பாய்களும் மனதளவில் நெளிந்து கொண்டிருந்தார்கள். மாணவர் சீருடை அணிந்த ஒரு இளைஞன்&lt;br /&gt;&lt;br /&gt;"உங்கள் சகோதரர்களுக்கு எதிராக ஆயுதம் எடுப்பதன் மூலம் நீங்கள் கொலைகாரர்கள் மற்றும் துரோகிகளின் கைக்கூலிகளாகி விட்டீர்கள் என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை அண்ணே, உங்களுக்குப் புரியவில்லை, இரண்டு வர்க்கங்கள் இருக்கின்றன- பாட்டாளி வர்க்கம், சுரண்டும் வர்க்கம். நாங்கள் ....."&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ, எனக்குப் புரிந்து விட்டது. யாரோ சொன்ன சில வெற்று வார்த்தைகளை பிடித்துக் கொண்டு முட்டாள் விவசாயிகளான நீங்கள் அது என்னவென்று புரிந்து கொள்ளாமலேயே கிளிகள் போல பேசிக் கொண்டிருக்கிறீர்கள். நான் மார்க்சியம் படித்திருக்கிறேன். நீங்கள் போராடுவது சோசலித்துக்காக இல்லை, ஜெர்மானிய ஆதரவு அராஜகத்துக்குத்தான் என்று நான் சொல்கிறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாமா, அது சரிதான், நீங்க படிச்ச ஆளு, அதனால் எளிதாக புரிகிறது. நான் ஒரு சாதாரண ஆளு, ஆனா என்னைப் பொறுத்த வரை ....." படைவீரரின் முகம் வேர்த்து விட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"லெனின் பாட்டாளி மக்களின் உண்மையான நண்பர் என்று சொல்றீங்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா" - சங்கடத்துடன் படைவீரர் பதில் சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"லெனின் ஜெர்மனியிலிருந்து மூடப்பட்ட காரில் அனுப்பி வைக்கப்பட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா? லெனின் ஜெர்மானியர்களிடமிருந்து காசு வாங்கினார் என்பது தெரியுமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"அதைப் பற்றி எனக்கு விபரங்கள் தெரியாதுதான். ஆனால், அவர் சொல்வதுதான் எங்களைப் போன்ற சாதாரண மக்கள் கேட்க விரும்பும் மாற்றம் என்று எனக்குத் தோன்றுகிறது. இரண்டே வர்க்கங்கள்தான் இருக்கின்றன, பாட்டாளி வர்க்கம், சுரண்டும் வர்க்கம் ....." விடாப்பிடியாக தொடர்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீ ஒரு முட்டாள், நண்பா. நான் இரண்டு ஆண்டுகள் ஆஸ்திரியாவில் புரட்சி பணிகளுக்காக செலவிட்டிருக்கிறேன். அப்போ எல்லாம் நீங்க புரட்சியாளர்களை எதிர்த்து சுட்டுக் கொன்று விட்டு, ஜார் மன்னரின் புகழ் பாடிக் கொண்டிருந்திருப்பீர்கள். என் பெயர் வசீலி ஜார்ஜியோவிச் பான்யின். என்னைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா?"&lt;br /&gt;&lt;br /&gt;"மன்னிச்சுக்கோங்க, கேள்விப்பட்டதேயில்லை. நான் படிக்காத ஆளு, நீங்க ஒரு பெரிய ஹீரோ" என்று அடக்கத்துடன் பதில் அளிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"உண்மைதான், நான் போல்ஷ்விக்குகள் ரஷ்யாவை அழிக்கிறார்கள், நமது புரட்சியை அழிக்கப் பார்க்கிறார்கள் என்று சொல்கிறேன். அதற்கு என்ன சொல்கிறீர்கள்?"&lt;br /&gt;&lt;br /&gt;படைவீரர் தலையைச் சொறிந்தார். "அதற்கு என்னிடம் விளக்கம் இல்லைதான், என்னைப் பொறுத்த வரை ரொம்ப சிம்பிள் பிரதர். நான் அதிகம் படிச்சவனில்லை. ஆனால் என்னைப் பொறுத்த வரை, இரண்டே வர்க்கங்கள்தான் இருக்கின்றன. பாட்டாளி மக்கள், சுரண்டும் வர்க்கம்...."&lt;br /&gt;&lt;br /&gt;"திரும்பவும் அந்த முட்டாள்தனமான சூத்திரத்தை ஆரம்பித்து விட்டீங்க" கடுப்பாகி விட்டார் மாணவர்.&lt;br /&gt;&lt;br /&gt;"--இரண்டு வர்க்கங்கள் மட்டும்தான்," விடாப்பிடியாக தொடர்கிறார் படைவீரர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட வாக்குவாதங்கள், வாழ்வா சாவா போராட்டங்கள் ரஷ்யா முழுவதும் தெருக்களிலும், தொழிற்சாலை குழுக்களிலும், போர்ப்படை அணிகளிலும், விவசாயிகள் அமைப்புகளிலும் நடந்து வந்தன. உழைக்கும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். படித்தவர்கள், அறிவுஜீவிகள் என்னதான் குழப்பினாலும், குழம்ப தயாராக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் ஜான் ரீடின் புத்தகத்துக்கு வருவோம். மாஸ்கோவில் கிரெம்ளின் மாளிகையை எதிர்ப் புரட்சிப் படையினர் கைப்பற்றியிருக்க, செம்படையினர் பீரங்கித் தாக்குதலை ஆரம்பித்து விட்டார்கள், நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள், பெண்கள் தாக்கப்படுகிறார்கள், வரலாற்றுச் சின்னங்கள் அழிக்கப்படுகின்றன என்ற வதந்திகள் பெட்ரோகிராடில் பரவின. நிலவரத்தைத் தெரிந்து கொள்ள ஜான் ரீட் மாஸ்கோவுக்குப் போகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;புரட்சி தலைமையகத்திலிருந்து அனுமதிச் சீட்டு வாங்கிக் கொண்டு புறப்படுகிறார்கள். ரயில் நிலையத்துக்குள் ரயில் நுழைந்ததுமே, அழுக்கான ஒரு படைவீரர் கூட்டம், உணவு மூட்டைகளை தூக்கிக் கொண்டு எல்லா கதவுகளையும் மொய்த்தார்கள். ஜன்னல்களை உடைத்து உள்ளே புகுந்து எல்லா பெட்டிகளையும் ஆக்கிரமிக்க ஆரம்பித்தார்கள். நடைபாதைகளிலும் கூரையிலும் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள். ஜான் ரீடும் அவருடன் 2 பேரும் ஒரு பெட்டிக்குள் நெருக்கி அடித்துக் கொண்டு நுழைந்தார்கள். உடனேயே 20 படைவீரர்களும் நுழைந்து விட்டார்கள். நான்கு பேருக்குத்தான் இடம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்களும் ரயில் அதிகாரியும் அவர்களுடன் விவாதம் புரிந்தோம், அவர்கள் சிரித்தார்கள். 'ஒரு பூர்ஷ்வா கூட்டத்தின் வசதியைப் பற்றி எங்களுக்கு என்ன கவலை?'. ஸ்மோல்னியிலிருந்து பெற்ற அனுமதிச் சீட்டை காட்டிய உடனேயே அவர்கள் மாறி விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"வாங்க தோழர்களே, இவர்கள் அமெரிக்க பத்திரிகையாளர்கள், 30,000 மைல்கள் தாண்டி வந்து நமது புரட்சியை பார்க்க வந்திருக்கிறார்கள், இயல்பாகவே களைப்பாக இருப்பாங்க" என்று ஒருவர் சத்தம் போட, நட்புடன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு படைவீரர்கள் கிளம்பி விட்டார்கள். சிறிது நேரத்தில் இரண்டு தடித்தடியான ரஷ்ய பணக்காரர்கள் லஞ்சம் கொடுத்து கதவை தாழ் போட்டு வைத்திருந்த பெட்டிக்குள் அவர்கள் நுழையும் சத்தம் கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மாலை 7 மணி வாக்கில் ரயில் புறப்பட்டது, எங்கும் ஒரே நெரிசல், புகை மூட்டமாகவும், கூச்சலாகவும் இருந்தது. இரவு முழுவதும் தூக்கமில்லாமல் ரஷ்யாவின் கட்சிகள், புரட்சி, இங்கிலாந்தில் என்ன நடக்கிறது என்று பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதங்கள் நடந்து கொண்டே இருந்தன. அடுத்த நாள் முழுவதும் கடும் குளிரில் ரயில் நின்று போன நிலையங்களில் பசியில் தவித்த பெருங்கூட்டம் இறங்கி கிடைத்த உணவுப் பொருட்களை திணித்து பசியாற முயற்சித்தார்கள். மாஸ்கோ போய் சேருவதற்கு முன்பு ஒவ்வொரு பெட்டியிலும் உணவுப் பொருட்களை வாங்கி வினியோகிக்க ஒரு கமிட்டி ஏற்படுத்தியிருந்தார்கள். இந்த கமிட்டிகளும் அரசியல் குழுக்களாக பிரிந்து விவாதித்துக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி உழைக்கும் மக்களின் அரசியல் அறிவும் தம்மைத் தாமே அமைப்பு மயமாக்கிக் கொள்ளும் போக்கும் உச்சத்தில் இருந்த ரஷ்யாவில் நிகழ்வுகள் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;1914ஆம் ஆண்டு செர்பிய மாணவன் ஒருவன் ஆஸ்திரிய இளவரசரை செர்பிய தலைநகரான சாரயேவில் சுட்டுக் கொன்றான். ஒரு பக்கத்தில் ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, துருக்கி மறுபக்கத்தில் பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா போரில் இறங்கின.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு நாடும் போரில் இறக்கிய படைவீரர்களின் எண்ணிக்கையை பார்த்தால் ரஷ்யாவின் பங்கு என்ன என்று புரிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;1. ஜெர்மனி - 38 லட்சம், &amp;nbsp;ஆஸ்திரியா/ஹங்கேரி - 23 லட்சம், துருக்கி - 18 லட்சம்&lt;br /&gt;2. பிரிட்டன் - 10 லட்சம், பிரான்ஸ் - 37 லட்சம், ரஷ்யா - 53 லட்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐரோப்பிய யுத்தங்களில் ரஷ்யாவின் பங்கு இப்படி பீரங்கி குண்டுகளுக்கு முன்பு இரையாக பெருமளவு படைகளை அனுப்பி வைப்பதாக இருப்பதை நெப்போலியன் காலத்து போர்களிலும், முதலாம் இரண்டாம் உலகப் போரிலும் பார்க்கலாம். ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பரந்து விரிந்திருக்கும் ரஷ்யாவின் பலம் அதன் ஆழமான நிலப்பரப்பும், கணிசமான மக்கள் தொகையும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹிட்லர் பிரான்சை பிடிப்பதற்கு ஒரு சில மாதங்கள்தான் தேவைப்பட்டன. ஆனால், இது வரை வரலாற்றில் எந்த அன்னிய சக்தியும் ரஷ்யாவை பிடித்து ஆள முடிந்ததே இல்லை. அவ்வளவு பெரிய நிலப்பரப்பை படையெடுத்து சென்று ஆதிக்கம் செலுத்துவது என்றது ஒரு சராசரி ஐரோப்பிய ஆதிக்க சக்திக்கு சாத்தியம் இல்லாததாகவே இருந்து வந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் ரஷ்யா நிலப்பரப்பை ஒரு தாக்குதலை நீர்த்துப் போகச் செய்யும் செயல் தந்திர நடவடிக்கைக்கும், ரஷ்ய படைவீரர்களை போர்க்களத்தில் பலியாடுகளாக அனுப்பும் உத்திக்கும் அன்றைய ஐரோப்பிய ஆளும் சக்திகள் பயன்படுத்திக் கொண்டன. ஜார் மன்னருக்கு போர் என்பது அவரது புகழையும் செல்வாக்கையும் பரவச் செய்யும் ஒரு நடைமுறை. அதில் மக்கள் கொல்லப்படுவதும், துன்பப்படுவதும் சமாளிக்கப்பட வேண்டிய ஒரு சிக்கல் அவ்வளவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் விழிப்பு பெற்றிருந்த உழைக்கும் மக்களின் மீதான சுமை முதலாம் உலகப்போரின் விளைவால் பல மடங்கு அதிகரித்தது. பிரிட்டனும், ஜெர்மனியும் தமது ஏகாதிபத்திய விரிவாக்கப் போட்டியால் உருவான இந்த யுத்தத்தின் சுமையை எல்லா நாடுகளின் உழைக்கும் மக்களைப் போல ரஷ்ய உழைக்கும் மக்களும் பெருமளவு சுமந்தனர். அரசாங்கமோ இன்னமும் மேல் தட்டு மக்களின் ஆடம்பர வாழ்க்கையைத் தாங்கிப் பிடிப்பதாகவே தொடர்ந்தது. பொருளாதாரத்தின் அன்னிய முதலீடு பல மடங்கு அதிகரித்திருந்தது. விலைவாசி பல மடங்கு உயர்ந்தது, உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு அதிகரித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நெருக்கடிகளின் மத்தியில் 3 ஆண்டுகள் போரில் ரஷ்யா ஈடுபடுத்தப்பட்டிருந்தது. சரியான சாப்பாடு, உடைகள் இல்லாமல் போர் முனையில் அவதியுற்றுக் கொண்டிருந்த போர்வீரர்கள் "யாருக்காக போரிட்டு சாகிறோம்" என்று கேள்வி எழுப்ப ஆரம்பித்தார்கள். போர்க்கால பொருளாதார நெருக்கடியால் தொழிலாளர்களும் விவசாயிகளும் மேலும் மேலும் அவதிகளுக்கு ஆழாகிக் கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1917ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளின் தினம் அன்று ஆயிரக்கணக்கான பெண்கள் பெட்ரோகிராடில் திரண்டு 'உணவு கொடு, யுத்தம் ஒழிக, பெண்களுக்கு வாக்குரிமை கொடு' என்று முழங்கினார்கள். பெண்களை ஆதரித்து 1 லட்சத்து 28 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். போல்ஷ்விக்குகள் இந்த போராட்டங்களுக்கு அரசியல் தலைமையும் கட்சி அமைப்பையும் வழங்கினார்கள். அடுத்த நாள் வேலை நிறுத்தம் செய்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 14 ஆயிரமாக உயர்ந்தது. மூன்றாவது நாள் (மார்ச் 10) &amp;nbsp;பொது வேலைநிறுத்தம் நகரத்தையே முடக்கிப் போட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று மாலை கலவரத்தை அடக்கும்படி ஜார் மன்னர் நகரத்தின் படைத் தளபதிக்கு ஆணையிட்டார். நான்காவது நாள் தொழிலாளர்களுக்கும் போலீஸ்-ராணுவத்துக்கும் ரத்தக் களறியான சண்டைகள் பல பகுதிகளில் நடந்தன. ஐந்தாவது நாள் (மார்ச் 12) 1 லட்சம் படைவீரர்கள் தொழிலாளர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். ஆறாவது நாள், 1 லட்சத்து 27ஆயிரம் பேர் ஆனார்கள். மார்ச் 12 மாலையில் தொழிலாளர்களும் படைவீரர்களும் பெட்ரோகிராட் சோவியத்தை தேர்ந்தெடுத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜார் மன்னரின் கீழ் இயங்கி வந்த நகர டூமா உறுப்பினர்கள் அன்று மாலையே தற்காலிகக் குழு என்று அமைத்து அதிகாரத்தைக் கைப்பற்ற தயாரானார்கள். தொழிலாளர், படைவீரர் எழுச்சியை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பெட்ரோகிராட் சோவியத்தின் ஆதரவோடு ஜார் மன்னரை பதவியிறக்கி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;புதிய அரசாங்கத்தில் பெருமுதலாளிகளும், நிலப்பிரபுக்களும், தொழிலாளர்களை ஒடுக்கும் ஆலை அதிபர்களும், ஏகாதிபத்திய போரில் ரஷ்யா விடாமல் போரிட வேண்டும் என்ற கொள்கையுடையவர்களும் அதிகாரத்தில் அமர்ந்தார்கள். இப்படியாக, அடிப்படை முரண்பாடுகள் கொண்ட பெட்ரோகிராட் சோவியத் ஒரு பக்கமும், மேல் தட்டு மக்களின் தற்காலிக அரசு இன்னொரு பக்கமும் அதிகாரம் கொண்டிருந்தன. மென்ஷ்விக்குகளின் ஆதிக்கத்தால் சோவியத்துகளின் மத்திய கமிட்டி மேல்தட்டு மக்களிடம் விட்டு வைத்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களின் எதிர்ப்பு போராட்டங்கள் வலுக்க தற்காலிக அரசாங்கமும் பல முறை மாற்றியமைக்கப்பட்டு சோசலிச சமரச வாத குழுக்கள் அதிகாரத்தில் அமர்ந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், படைப்பிரிவுகள் இடையேயும், தொழிலாளர்களிடையேயும் சோசலிச சீர்திருத்த நடவடிக்கைகள் சோவியத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டன. 1917 ஏப்ரல் 16ஆம் தேதி நாடு கடத்தப்பட்டிருந்த லெனின் நாடு திரும்பி, போருக்கு எதிரான போல்ஷ்விக்குகளின் நிலைப்பாட்டை அறிவித்தார். தற்காலிக அரசாங்கத்துடன் வெளிப்படையான முரண்பாடாக அது அமைந்தது. ஏற்கனவே பார்த்தது படி தற்காலிக அரசாங்க தலைவர்கள் வெற்று கோஷங்களுடன் போரை தொடர்ந்து நடத்தும் நிலைப்பாட்டில் இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நிலச் சீர்திருத்தம், தொழிலாளர்களின் கோரிக்கை எப்போது நடக்கும் என்று கேட்டால், விரைவில் அரசியல் அமைப்பு அவையைக் கூட்டப் போவதாகவும், அதில் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உருவாக்கப்படும் என்று சமாதானம் சொல்லி வந்தார்கள். மக்களைப் பொறுத்த வரை, தற்காலிக அரசாங்கம், அரசியல் அமைப்பு சபை, சோவியத் என்று அமைப்புகளைப் பற்றிக் கவலைப்படாமல் கிராமங்களில் நிலங்களை பங்கிடுதலையும், தொழிற்சாலைகளில் நிர்வாகத்தைக் கைப்பற்றுவதிலும் ஈடுபட ஆரம்பித்திருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;போருக்கு எதிரான மக்களின் எழுச்சிப் போராட்டங்களுக்கு எதிராக அடக்குமுறையை அவிழ்த்து விட்டனர். ஜூலை 17 அன்று அமைதியாக கூடியிருந்த 5 லட்சம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 56 பேரைக் கொல்லவும் 650 பேர் படுகாயமடையவும் காரணமாக இருந்தனர். புரட்சிக்குத் தலைமை வகித்த லெனின் தலைமறைவாக வேண்டி ஆனது. ஆகஸ்டு இரண்டாவது வாரத்தில் போல்ஷ்விக்குகளின் பெட்ரோகிராடில் ரகசியமாக கூட்டப்பட்டது. ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபடுவதென்றும் ஆட்சி அதிகாரத்தை மக்கள் கைப்பற்ற வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தற்காலிக அரசாங்கத்தின் பிரதம மந்திரியாக கேரென்ஸ்கியும், தலைமை ராணுவ தளபதியாக கர்னீலவும் இருந்தார்கள். செப்டம்பர் முதல் வாரத்தில் ஜெனரல் கர்னீலவ் பெட்ரோகிராடின் மீது படையெடுத்த வந்ததை புரட்சிகர படைவீரர்கள் எதிர்த்து ஒடுக்கினார்கள். போல்ஷ்விக்குகளின் செல்வாக்கு நாடு முழுவதும் உயர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அக்டோபர் மாத மத்தியில் லெனின் பெட்ரோகிராடுக்குத் திரும்பி ஆயுதம் தாங்கிய எழுச்சிக்கான செயல்திட்டத்தை உருவாக்கினார். அக்டோபர் 23ஆம் தேதி கட்சி அந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பெட்ரோகிராடில் புரட்சி அணிகள் இப்படி இருந்தன:&lt;br /&gt;&lt;br /&gt;1. பால்டிக் கடற்படை மாலுமிகள்&lt;br /&gt;2. தொழிற்சாலைகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த செங்காவலர்கள்&lt;br /&gt;3. படையணிகளில் இருந்த புரட்சிகர படையாட்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெட்ரோகிராட் சோவியத்தின் முதல் காங்கிரசில் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய கமிட்டி உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் ஆளும் வர்க்கத்துடன் சமரசம் செய்து கொள்பவர்களாக இருந்தனர். நாடெங்கிலும் உள்ள சோவியத்துகளில் போல்ஷ்விக்குகளின் செல்வாக்கு அதிகரித்திருந்த நிலையில் இரண்டாவது காங்கிரசைக் கூட்டுவதில் மென்ஷ்விக்குகள் முதலான சமரச சோசலிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்திய மத்திய கமிட்டி, &amp;nbsp;ட்சாய் ஈ கா, நாடு முழுவதுக்குமான சோவியத் காங்கிரசைக் கூட்டி புதிய மத்திய கமிட்டி அமைப்பதைத் தள்ளிப் போட முற்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;'விரைவில் அரசியல் அமைப்புச் சபை கூடி புதிய அரசாங்கம் அமைய இருப்பதால், அதன் பிறகு சோவியத்துகளுக்கு தேவை இல்லை ஆதலால் இப்போது காங்கிரசு கூட்ட வேண்டியதில்லை' என்று வாதிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் போல்ஷ்விக்குகள் நவம்பர் மாதம் அனைத்து ரஷ்ய தொழிலாளர், படைவீரர் சோவியத்துகளின் காங்கிரசு பெட்ரோகிரேடில் கூடும் என்று அறிவித்தார்கள். அதில் கலந்து கொள்ள நாடெங்கிலுமிருந்த பிரதிநிதிகள் வந்தனர். அதன் மூலம் புதிய மத்திய கமிட்டி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதில் நிச்சயம் போல்ஷ்விக்குகளின் பெரும்பான்மை இருக்கும் என்ற நிலை உருவாகியிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;தற்காலிக அரசாங்கம் பெட்ரோகிராட் படைப்பிரிவை போர் முனைக்கு அனுப்ப முயற்சித்தது. பெட்ரோகிராட் படைப்பிரிவில் போல்ஷ்விக்குகள் பெரும்பான்மையாக இருந்தார்கள். போர்முனையிலிருந்து வந்த போர்ப்படை பிரதிநிதிகளும் பெட்ரோகிராடில் புரட்சிக்கு படைப்பிரிவு தேவை என்று சொன்னார்கள். படைப்பிரிவு அரசாங்கத்தின் ஆணையை செயல்படுத்த மறுத்தது. ஒரு ராணுவ புரட்சி கமிட்டியை ஏற்படுத்தினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சோவியத் பிரதிநிதிகளின் காங்கிரசில் போல்ஷ்விக்குகள் பெரும்பான்மை பெற்றிருந்தாலும் மற்ற சோசலிச குழுக்களும் கலந்து கொள்வார்கள். ஒட்டு மொத்த காங்கிரசையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும். காங்கிரசு 7ஆம் தேதி கூடுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;போல்ஷ்விக்குகள் எப்போது அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று லெனின் சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;'நவம்பர் 6 சீக்கிரமாகி விடும். அனைத்து ரஷ்ய அடிப்படை நமக்கு இல்லாமல் போய் விடும். நவம்பர் 6 அன்று எல்லா சோவியத் பிரதிநிதிகளும் வந்து சேர்ந்திருக்க மாட்டார்கள். ஆனால், நவம்பர் 8 தாமதமாகி விடும். அதற்குள் காங்கிரசு அமைக்கப்பட்டு விடும், அமைப்பு ரீதியான ஒரு அவை விரைவான இறுதியான முடிவுகளை எடுப்பது சாத்தியமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் காங்கிரசு கூடும் நவம்பர் 7ஆம் தேதி செயலில் இறங்க வேண்டும். "இதோ அதிகாரம் நம் கையில், இதை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று காங்கிரசின் முன்பு நாம் சொல்ல முடிய வேண்டும்.'&lt;br /&gt;&lt;br /&gt;நவம்பர் 6ஆம் தேதி போல்ஷ்விக்குகளின் பத்திரிகை அலுவலகம் மீது அரசாங்கத்தின் ராணுவ நடவடிக்கையை கப்பல்படை புரட்சியாளர்கள் தடுத்து நிறுத்தினார்கள். தற்காலிக அரசாங்கம் ராணுவ பிரிவுகளையும், ஊர்க்காவல் படைகளையும் திரட்ட ஆரம்பித்து நகரத்தில் அணிவகுக்க வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;புரட்சியில் ராணுவத் தலைமையகமாக சோவியத் காங்கிரசு கூடும் இடம் ஸ்மோல்னி இன்ஸ்டிடுயூட். புரட்சிக்கு முன்பு மேல்தட்டு இளம்பெண்களின் கல்விநிலையமாக இருந்தது. நகருக்கு வெளியே நகர எல்லையில் இருந்தது. பெண்களுக்கு பிரெஞ்சு மொழி பேசவும், பியானோ வாசிக்கவும், நடனம் ஆடவும் கற்றுக் கொடுக்க பயன்படுத்தப்பட்ட வகுப்பறைகள் புரட்சியின் பாசறையாக மாறியிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;தற்காலிக அரசாங்கத்தின் பாசறையாக குளிர்கால அரண்மனையில் பிரபு குலத்தைச் சேர்ந்த போர் வீரர்களும், தற்கொலைப் படையினர் என்று அழைக்கப்பட்ட பெண்கள் படையினரும் இருந்தார்கள். ஜான் ரீடை சுற்றிக் காண்பித்த படை வீரர், அமெரிக்காவுக்கு எப்படி குடிபெயர்வது என்ற விபரங்கள் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;புரட்சியின் தலைமையகமான ஸ்மோல்னியிலோ, இரவும் பகலும் தூங்காமல் பணி புரிந்து கொண்டிருக்கும் தலைவர்களும், இளைஞர்களும், தொழிலாளர்களும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நவம்பர் 7ஆம் தேதி அதிகாலையில் புரட்சியாளர்கள் நகரத்தின் முக்கிய பகுதிகளைக் கைப்பற்றினார்கள். தற்காலிக அரச அமைச்சர்கள் குளிர்கால அரண்மனையில் கலந்தாய்வு நடத்திக் கொண்டிருந்த போது கப்பற்படை கப்பலின் துப்பாக்கி முழக்கம் கேட்டது. அதைக் கேட்டதுமே கதி கலங்கிய தலைவர்கள், போர்வீரர்கள் சரணடைந்து விட செம்படையினர் குளிர்கால அரண்மனையையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது சோவியத்துகளின் காங்கிரசு ஆரம்பமாகிறது. போல்ஷ்விக்குகள் அதிகாரக் கைப்பற்றலை அறிவித்ததும், பல உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவிக்கிறார்கள். 'இது அராஜகத்தில்தான் கொண்டு போய் விடும், போல்ஷ்விக்குகள் நாட்டை ஜெர்மனிக்கு அடிமையாக்கி விடுவார்கள்' என்று பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் புலம்ப ஆரம்பித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களை எதிர்த்து படைவீரர்கள், தொழிலாளர் பிரதிநிதிகள் உழைக்கும் மக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் தேவையை ஆதரித்துப் பேசுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கட்டத்தில் லெனின் மேடையில் ஏறி நிற்கிறார். பெரும் கைத்தட்டல் நின்று கூட்டம் அமைதியாவது வரை காத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;'சோஷலிச கட்டமைப்பு உருவாக்கத்தை நாம் ஆரம்பிக்கலாம்' என்று சொல்கிறார். பெரும் முழக்கங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1. ஆக்கிரமிக்கும் நாட்டைச் சேர்ந்த மக்களை அனைவருக்கும் சோவியத் கொள்கைப்படி அமைதி ஒப்பந்தத்தை அறிவிக்கிறோம் - பிரதேச இணைப்பில்லாத, பிணைத் தொகை இல்லாத, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமாதானம். "நவம்பர் 6,7ல் நடந்த புரட்சி சோஷலிச புரட்சி யுகத்தை ஆரம்பித்திருக்கிறது. அமைதியின் பெயராலும், சோசலிசத்தின் பெயராலும் தொழிலாளர் இயக்கம் வெற்றி பெற்று தனது கடமையை நிறைவேற்றும்"&lt;br /&gt;&lt;br /&gt;2. நிலத்தின் மீதான தனி உடைமை எந்த விதமான இழப்பீடும் இல்லாமல் ரத்து செய்யப்படுகிறது. நிலப்பிரபுக்களின் பண்ணைகளும், அரசாங்கத்தின், மதகுருக்களின் நிலங்களும் அந்தந்த பகுதி நில கமிட்டிகளின் கட்டுப்பாட்டுக்கு வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;3. தொழிற்சாலைகளின் நிர்வாகம் தொழிலாளர் கமிட்டிகளின் பொறுப்பிற்கு வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தொடர்ந்து சோவியத் மத்திய அரசின் அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் இதன் விளைவுகள் அலை அலையாக பரவின. புரட்சியாளர்களும் எதிர் புரட்சியாளர்களும் கடும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தொழிற்சாலைகளை தொழிலாளர்களுக்கு விட்டுக் கொடுக்க மனமில்லாத முதலாளிகள் இயந்திரங்களை உடைத்து சேதப்படுத்த ஏற்பாடுகள் செய்தனர். போர்முனையில் படைவீரர் கமிட்டி எடுக்கும் முடிவை செயல்படுத்துவதை விட ஜெர்மானியர்களை வெற்றி பெறச் செய்யலாம் என்று ரஷ்ய தேச பக்தர்கள் என்று பேசி வந்த படைத்தளபதிகள் பணியாற்றினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு வங்கி ஊழியர்கள், தொலைபேசி இணைப்பக ஊழியர்களான பெண்கள், நகராட்சி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். புதிய அரசின் பிரதிநிதிகளை மதிக்க மறுத்து அமைச்சகங்களில் ஊழியர்கள் முரண்டு பிடித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெட்ரோகிரேடில் இருந்து தப்பிச் சென்ற தற்காலிக அரசின் பிரதம மந்திரி கெரென்ஸ்கி கொசாக் குதிரைப்படையினரை வைத்து பெட்ரோகிராடை தாக்க முயற்சிகள் செய்து வந்தார். விவசாயிகள் புரட்சி அரசாங்கத்தை ஆதரிக்க வில்லை என்று எதிர்புரட்சியாளர்கள் பிரச்சாரம் செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் உலகப்போரில் ஈடுபட்டிருந்த ஆதிக்க சக்திகளின் இரு பக்க பகை நாடுகளும் புரட்சியை எதிர்ப்பதற்காக போரை முடிவுக்குக் கொண்டு வந்து ரஷ்யாவில் எதிர் புரட்சிக்கு ஆதரவாக களத்தில் இறங்கினார்கள். பல லட்சக்கணக்கான பவுண்ட் செலவில் வெள்ளைப் படைகள் ரஷ்யாவுக்குள் கலகம் செய்ய அனுப்பப்பட்டன. தேசிய இனங்களின் பகுதிகளில் உள்ளூர் குட்டி முதலாளிகள் சோவியத்துகளை எதிர்த்து முதலாளித்துவ கைபொம்மை அரசுகளை நிறுவினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த 6 ஆண்டுகளுக்கு இவற்றை எல்லாம் எதிர்த்து தீரத்துடன் போராடி, தமது புரட்சியை வெற்றிகரமாக காப்பாற்றித் தொடர்ந்தார்கள் ரஷ்யாவின் உழைக்கும் மக்கள். 1923ல் எதிர் புரட்சி கலகங்கள் அடக்கப்பட்டு, சோவியத்துகளின் கூட்டமைப்பான சோவியத் யூனியன் வலுவான ஒரு அமைப்பாக உருவாகியிருந்தது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36234289-8237493043166027871?l=bookimpact.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookimpact.blogspot.com/feeds/8237493043166027871/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36234289&amp;postID=8237493043166027871' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/8237493043166027871'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/8237493043166027871'/><link rel='alternate' type='text/html' href='http://bookimpact.blogspot.com/2011/11/10.html' title='உலகைக் குலுக்கிய 10 நாட்கள் - ஜான் ரீட்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36234289.post-1606354094792781429</id><published>2011-11-21T20:38:00.001+05:30</published><updated>2011-11-21T20:44:19.689+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கம்யூனிசம்'/><title type='text'>கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;17ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் நிகழ்ந்த முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்புகளும் அதைத் தொடர்ந்து பொருள் உற்பத்தி முறையில் ஏற்பட்ட வேகமான மாறுதல்களும் முதலாளித்துவ பொருளாதார கட்டுமானத்தை உருவாக்க ஆரம்பித்திருந்தன. அதன் தவிர்க்க முடியாத விளைவாக ஒன்றாக திரட்டப்பட்ட, படிப்பறிவு உள்ள, போராடும் அமைப்பாக உருவெடுக்கும் குணமுள்ள பாட்டாளி வர்க்கமும் உருவாகியது.&lt;br /&gt;&lt;br /&gt;தொழிலாளர்களின் பல்வேறு போராட்டங்களின் பகுதியாக சர்வதேச தொழிலாளர்களின் அமைப்பான கம்யூனிஸ்டு கழகம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி உழைக்கும் மக்கள் மூலம் தமது அதிகாரத்துக்கும் ஆட்சிக்கும் வரும் ஆபத்தைக் கண்டுணர்ந்த ஐரோப்பிய ஆட்சியாளர்கள் கம்யூனிச 'பூதத்துக்கு' எதிராக தமது நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டனர். 20ம் நூற்றாண்டில் மேற்கு நாடுகளில் நடந்த பிரச்சாரங்கள் தமக்கு முன்னோடியாக 19ம் நூற்றாண்டின் ஆட்சியாளர்களைக் கொண்டிருக்கின்றன என உணரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் மூலம்&lt;br /&gt;&lt;br /&gt;அ. கம்யூனிசம் என்பது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களால் எதிர்க்கப்பட வேண்டிய அளவுக்கு வலுவாக வளர்ந்திருக்கிறது என்பதும்&lt;br /&gt;&lt;br /&gt;ஆ. கம்யூனிச இயக்கம் பற்றிய அவதூறுகளுக்கு முறையான பதில் அளிக்கப்பட வேண்டியது தேவை என்பதும்&lt;br /&gt;&lt;br /&gt;உணரப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தொடர்ந்து பல்வேறு தேசங்களைச் சேர்ந்த கம்யூனிஸ்டுகள் லண்டனில் கூடி இந்த அறிக்கையை வெளியிட்டார்கள். இந்த அறிக்கையை தயாரித்தவர்கள் காரல் மார்க்சும், பிரடெரிக் எங்கெல்சும் ஆவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;முதலாளிகளும் பாட்டாளிகளும்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதிவு செய்யப்பட்ட வரலாறு அனைத்துமே சுரண்டுபவர்களுக்கும் சுரண்டப்படுபவர்களுக்கும் இடையேயான நேரடியான அல்லது மறைமுகமான போராட்டங்களாகவே இருந்திருக்கின்றன. வரலாற்றுக்கு முற்பட்ட ஆதி சமவுடமை சமூகம் இதற்குள் அடங்காது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த போராட்டங்கள் சமூகத்தை புத்தமைப்பதிலோ, போராடும் இரு தரப்பினரது அழிவிலோதான் முடிந்திருக்கின்றன. புத்தமைக்கப்பட்ட சமூகங்கள் அடுத்தக் கட்ட போராட்டம், புத்தமைப்பு நோக்கி நகர்ந்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;முதலாளித்துவத்தின் வளர்ச்சி&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலாளித்துவம் பிரபுத்துவ சமூகத்தின் அழிவிலிருந்து உருவானது. ஆனால் முந்தைய வர்க்க சமூகங்களைப் போல சமுதாய படிநிலைகளைக் கொண்டிருக்காமல் முதலாளித்துவம் வர்க்கப் பகைமைகளை சுருக்கி எளிமையாக்கியுள்ளது. முதலாளித்துவ வர்க்கமும் பாட்டாளி வர்க்கமுமாக சமுதாயம் பிளவுண்டு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;16,17ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவிலிருந்து மேற்கு திசையில் அமெரிக்காவுக்கும், கிழக்கு திசையில் இந்தியா சீனாவுக்கும் கடல் வழியில் முன்னேற்றங்கள் ஏற்பட்டதால் முதலாளித்துவ உற்பத்திக்கான சந்தைகளும் விரிவடைந்தன. பிரபுத்துவ அமைப்புடன் போட்டி போட்டு அதை அழித்துக் கொண்டிருந்த முதலாளி வர்க்கத்திற்கு இவை கூடுதல் பலமாக அமைந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபுத்துவ முறையில் தொழிற் பண்டங்களின் உற்பத்தி கைவினைச் சங்கங்களின் ஏகபோகமாக இருந்தது. வளர்ந்து வந்த சந்தைகளின் தேவைகளுக்கு அவை ஈடு கொடுக்க முடியாமல் பட்டறை தொழில் முறை வளரலாயிற்று. கைவினை சங்கங்களுக்கிடையேயான உழைப்புப் பிரிவினை, பட்டறை தொழிலகத்தினுள் ஏற்பட்ட உழைப்புப் பிரிவினைக்கு ஈடு கொடுக்க முடியாமல் அழிய ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே நீராவி இயந்திரங்கள் தொழில் முறை உற்பத்தியில் அடுத்தக் கட்ட புரட்சியை உருவாக்கின. பட்டறைத் தொழில் சிறு முதலாளிகளின் இடத்தில் பெரு முதலாளிகளும் கோடீஸ்வரர்களும் உருவானார்கள். இந்த தொழில் துறை வளர்ச்சி போக்குவரத்து சாதனங்களை வெகுவாக மேம்படுத்தியது. மேம்பட்ட போக்குவரத்து சாதனங்கள் இன்னும் சந்தையை விரிவுபடுத்த உதவின.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி நவீன முதலாளித்துவ வர்க்கம் தொடர்ச்சியான புரட்சிகர மாற்றங்களின் மூலம் முன்னேற்ற வர்க்கமாக உருவெடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வளர்ச்சிக்கு ஏற்ப அரசியல் அதிகாரத்தையும் கைப்பற்றியது. முதலில் ஒடுக்கப்பட்ட வகுப்பாகவும், பிரபுக்களுக்கு எதிராக முடியாட்சிக்கு ஆதரவு பிரிவாகவும், உலகச் சந்தை நிறுவப்பட்ட பிறகு ஆட்சியில் நேரடி அதிகாரம் செலுத்துவதாகவும் வளர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாளித்துவம் ஆதிக்க நிலை பெற்றதும் பழைய பிரபுத்துவ விழுமியங்களை அழித்தொழித்து, பணத்தின் பரிமாற்றத்தின் அடிப்படையிலான ஒற்றை சூத்திரத்துக்கு எல்லாவற்றையும் மாற்றி அமைத்தது. வாணிபச் சுதந்திரம், போட்டி போடும் சுதந்திரம் என்பதைத் தவிர மற்ற எல்லா மனித மாண்புகளையும், உறவுகளையும் ஒழித்துக் கட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;தொழில் முறை மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் போன்றவர்களை கூலியுழைப்பாளர்கள் ஆக்கியது, குடும்பத்தை காசு பண உறவாய சிறுக்கச் செய்தது என்பது ஒரு பக்கம் இருக்க அதுவரை இருந்த வரலாற்றில் செய்த சாதனைகளை எல்லாம் தூக்கிச் சாப்பிடும வண்ணம் பெரும் சாதனைகளை செய்து காட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;முதலாளித்துவத்தின் சிக்கல்கள்&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முந்தைய தொழில் உற்பத்தி முறைகள் தமது உற்பத்தி முறைகளைக் கட்டிக் காத்துக் கொள்வதை அடிப்படையாகக் கொண்டிருந்தன. முதலாளித்துவ தொழில் உற்பத்தி முறையில் தொடர்ச்சியாக இடைவிடாமல் உற்பத்தி முறைகள் மாறி வருகின்றன. புதிய முறைகளுக்கு ஒவ்வாதவர்கள் இரக்கம் இல்லாமல் தீர்த்துக் கட்டப்பட்டு, வேறு புதியவர்கள் அவர்கள் &amp;nbsp;இடத்தைப் பிடித்துக் கொள்கிறார்கள். இப்படி ஈவு இரக்கமில்லாத ஒரு சமூக அராஜகம் வழக்கமாக ஆகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிச்சயமின்மை காரணமாக சந்தை விரிவடைந்து கொண்டே செல்வது ஒரு தவிர்க்கமுடியாத தேவையாகிறது. அது எல்லா நாடுகளுக்கும் தனது கடையை பரப்புகிறது. தேசிய தொழில்களை உலகமயமாக்குகிறது. ஒவ்வொரு தொழிலும் மூலப்பொருட்களை உலகெங்கிலுமிருந்து பெறுகின்றன, அதன் விளைபொருட்கள் உலகமெங்கும் நுகர்வுக்காக அனுப்பப்படுகின்றன. அறிவு துறையிலும் அறிவுப் படைப்புகள் எல்லா நாடுகளுக்கும் சொந்தமாக மாறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா தேசங்களையும் முதலாளித்துவ அமைப்பு அவற்றின் கூடுகளிலிருந்து வெளியில் இழுக்கிறது. நாட்டுப்புறத்தை நகரங்களுக்கும், அநாகரிக நிலையிலுள்ள நாடுகளை நாகரிக நாடுகளையும், விவசாய நாடுகளை முதலாளித்துவ நாடுகளையும், கிழக்கு நாடுகளை மேற்கு நாடுகளையும் சார்ந்திருக்க செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாளித்துவம கட்டமைப்பு சிதறிக் கிடக்கும் மக்களை ஒரே இடத்தில் வாழ வைக்கிறது. சொத்துக்களை சிலரது கைகளில் குவிக்கிறது. அரசியல் அதிகாரத்தையும் மையப்படுத்தச் செய்கிறது. பல தேசங்களில் பல அரசாங்கங்கள் இருப்பது மாறி தேசங்களின் கூட்டமைப்புகள் உருவாகின்றன (உதாரணம் : அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய யூனியன், இந்தியா, ஆசியான் போன்றவை).&lt;br /&gt;&lt;br /&gt;பொருளுற்பத்தி சக்திகளை பிரமாண்டமாக வளர்த்து இது வரை கண்டிராத உற்பத்தி சாதனைகளைப் புரிகிறது முதலாளித்துவம். பிரபுத்துவ சமூகத்தில் உதித்த உற்பத்தி மற்றும் பரிவர்த்தனை பொருட்கள் பிரபுத்துவ அமைப்பில் பிறந்தவை. பிரபுத்துவ அமைப்பு வளர்ச்சிக்குத் தடையாக இருந்ததால் அதை உடைத்துக் கொண்டு முதலாளித்துவ அமைப்பு உருவானது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு பெரிய சக்திகளை பாதாள உலகிலிருந்து வெளிப்படச் செய்த முதலாளித்துவ அமைப்பு அவை தனது கட்டுப்பாடுகளை மீறி பூதமாக எழுந்திருப்பதைக் காண்கிறது. இந்த வளர்ச்சியின் காரணமாக வளர்ந்துள்ள உற்பத்தி சக்திகள் தமது தொடர்ந்த வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் முதலாளித்துவ அதிகார அமைப்புகளை எதிர்த்து போராடுகின்றன. இதுதான் கடந்த 2 நூற்றாண்டுகளின் வரலாறாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு பத்தாண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. அபரிதமான உற்பத்தி வளர்ச்சிக்கு இடம் கொடுக்கும்படி முதலாளித்துவ சொத்துரிமை அதிகார கட்டமைப்புகள் இடம் கொடுப்பதில்லை. இதனால் குழப்பங்கள் ஏற்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பிரச்சனையைத் தீர்க்க முதலாளித்துவ அதிகார வர்க்கம் வலுக்கட்டாயமாக உற்பத்தி சக்திகளை வளர்ப்பதையும், புதிய புதிய சந்தைகளில் விரிவடைந்து செல்வதையும் கடைப்பிடிக்க வேண்டியதாகிறது. பழைய சந்தைகளை இன்னும் மேலும் மேலும் அழுத்திப் பிழிந்து அதிக உற்பத்தி சக்திக்கு ஈடுகொடுக்க முயல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;பாட்டாளி வர்க்க உருவாக்கம்&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலாளித்துவ அமைப்பு தன்னை எதிர்க்கும் ஆயுதங்களை உருவாக்கியதோடு அல்லாமல் அவற்றை செலுத்துவதற்கான போர்ப்படையினராக பாட்டாளி வர்க்கத்தையும் உருவாக்கியிருக்கிறார்கள். பாட்டாளி வர்க்கத்தினர் தமது உழைப்பை விற்று கூலிக்கு வேலை பார்க்கும் நிலையில் இருக்கின்றனர். இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதன் மூலமாகவும், வேலைப் பிரிவினை மூலமாகவும் வேலையில் சுவாரஸ்யம் குறைந்து கொண்டே வருகிறது. வேலை செய்யத் தேவையான திறமையும் குறைகிறது. அதனால் தொழிலாளி மீள் உற்பத்தி ஆவதற்கான செலவு குறைந்து அதன் விளைவான கூலியும் குறைந்து கொண்டே போகிறது. இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால் செய்ய வேண்டிய வேலைப்பளு அதிகமாகிறது. வேலை நேரம் அதிகமாக்கல், வேலை அளவை அதிகமாக்கல், அல்லது வேறு முறைகளின் மூலம் இது செய்யப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தொழிலாளர்கள் தொழிற்சாலைகளில் படைகள் போல அணிவகுக்கப்பட்டிருக்கின்றனர். முதலாளித்துவ அமைப்பிற்கும், அரசுக்கும், தொழிற்சாலை முதலாளிக்கும், மேலாளர்களுக்கு அவர்கள் அடிமைகளாக இருக்க வேண்டியிருக்கிறது. அது வெறுப்பைத் தூண்டுவதாயிருக்கிறது. உற்பத்திக்குத் தேவையான உடல் வலிமை குறைய ஆண்களின் இடத்தில் பெண்களும் குழந்தைகளும் மாற்றப்பட்டு கூலி குறைவும் போட்டியும் அதிகமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தொழிலாளி சுரண்டலுக்குப் பிறகு தனது கூலியைப் பெற்றுக் கொண்ட பின் கடைக்காரர், வீட்டுக் காரர், வட்டிக்கடைக்காரர் என்று சுரண்டப்பட ஆரம்பிக்கிறார். இப்படி மத்தளத்துக்கு இரு புறமும் இடியாக தொழிலாளி தனது உழைப்பை விற்கும் போதும் சுரண்டப்படுகிறார். அதன் மூலம் பெற்ற பணத்தைப் பயன்படுத்தி மற்றவர்களின் உழைப்பை வாங்கும் போதும் நடுவில் இருக்கும் இடைத்தரகர்களால் சுரண்டப்படுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கீழ் மத்தியதர வர்க்கத்தினர் படிப்படியாக தமது உடைமைகளை இழந்து பாட்டாளி வர்க்கத்தில் சேர்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டாளி வர்க்கம் ஆரம்பத்தில் தனிப்பட்டும் அடுத்த ஒரு தொழிற்சாலை அளவிலும், அடுத்து ஒரு வட்டார அளவிலும் போராடுகிறார்கள். தமக்கு எதிராக புலப்படும் உற்பத்திக் கருவிகளை இறக்குமதிப் பொருட்களை எதிர்த்துப் போராடுகிறார்கள். மத்திய கால உற்பத்தி முறையை மீட்டமைக்க முயல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாளித்துவம் தனது பகைவர்களாகிய நிலப்பிரபுக்கள், மன்னராட்சியையும், பிற முதலாளிகளையும், குட்டி முதலாளிகளையும் எதிர்க்க முதலாளிகள் தம்மைச் சேர்ந்த தொழிலாளிகளை நாடு தழுவி ஒன்று திரட்டி போராடுகிறார்கள். இதனால் தொழிலாளர்களுக்கிடையே நாடு தழுவிய ஒற்றுமை ஏற்படுகிறது. முதலாளித்துவம் இந்த வெற்றிகளை ஈட்ட ஈட்ட பாட்டாளி வர்க்கமும் அளவிலும் பலத்திலும், ஒற்றுமையிலும் வளர்ந்து கொண்டே போகிறது. கூலிக் குறைவு மோசமாகிக் கொண்டே போகிறது. முதலாளிகளுக்கு எதிரான போராட்டத்துக்காக கூட்டமைவுகள் - தொழிற்சங்கங்களை தொழிலாளர்கள் அமைத்துக் கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நவீனத் தொழில் துறையால் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் போக்குவரத்து சாதனங்களும் தகவல் தொடர்பு சாதனங்களும் போராடும் வர்க்கத்துக்கு ஒற்றுமையை ஏற்படுத்தும் கருவிகளாகப் பயன்படுகின்றன (டுவிட்டர், பேஸ் புக் மூலமான மக்கள் புரட்சி). இதன் மூலம் தொழிலாளிகள் முதலாளிகளிடமிருந்து பல சலுகைகளை பறித்தெடுக்கிறார்கள். (8 மணி நேர வேலை, தொழிலாளர் நலச் சட்டங்கள் போன்றவை).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சி&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கூடவே ஆளும் வர்க்கத்தின், குட்டி முதலாளிகளின் பிரிவினர் பாட்டாளி வர்க்கத்துக்குள் தள்ளப்படும் போது அவர்கள் பாட்டாளி வர்க்கம் அறிவொளி பெறுவதற்கும் முன்னேறுவதற்கும் காரணிகளை அளிக்கின்றன. இறுதியில் வர்க்கப் போராட்டம் முடிவு கட்டும் நிலைமை நெருங்கும் நேரத்தில் ஆளும் வர்க்கத்திலிருந்து ஒரு சிறு பிரிவும் பாட்டாளி வர்க்கத்துடன் சேர்ந்து கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டாளி வர்க்கம் மட்டும்தான் உண்மையான புரட்சிகர வர்க்கம் மற்ற வர்க்கங்கள் மறைந்து போய் விடுகின்றன. கீழ் மத்தியதர வர்க்கத்தினர் பழமைப் பற்றுள்ளவர்களே தவிர புரட்சியாளர்கள் அல்ல. சில சமூகக் கசடுகளும் புரட்சி இயக்கத்துள் இழுக்கப்பட்டு ஊழலின் ஊற்றுக்கண்ணாக அமையலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டாளி வர்க்கத்துக்கு சொத்துக்களோ, குடும்ப உறவுகளோ, மத, இன அடையாளங்களோ இல்லாமல் துடைத்தெறியப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;முந்தைய புரட்சிகளைப் போலில்லாமல், பாட்டாளி வர்க்கப் புரட்சி தனியார் சொத்துடைமையை முழுமையாக ஒழித்துதான் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும். பாட்டாளி வர்க்கப் புரட்சி பெரும்பான்மையினரில் நலனுக்கான புரட்சி. இந்தப் போராட்டம் உள்ளடக்கத்தில் இல்லா விட்டாலும், வடிவத்தில் தேசிய போராட்டமாகவே இருக்கிறது. ஒவ்வொரு நாட்டின் பாட்டாளி வர்க்கமும் தனது நாட்டின் முதலாளித்துவ வர்க்கத்துடன்தான் முதலில் கணக்கு தீர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாளித்துவ வர்க்கத்துக்கு முந்தைய சமூகங்களில் சுரண்டப்படுபவர்களின் வாழ்வாதாரம் அமைப்பினால் பாதுகாக்கப்பட்டு வந்தது. ஆனால் முதலாளித்துவக் கட்டமைப்பில் பாட்டாளிகளின் வாழ்க்கை மேலும் மேலும் சீர் குலைக்கப்படுவதால், முதலாளித்துவம் தனக்குத் தானே உலை வைத்துக் கொள்வதாகவே அமைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாளித்துவத்தின் அடிப்படை ஆதாரமான கூலியுழைப்பு மேலும் மேலும் எளிமைப்படுத்தப்பட்டு பாட்டாளிகளை ஒன்று பட வைக்கிறது. தனது அழிவுக்கான கருவிகளையும் போர்ப்படையினரையும் முதலாளித்துவம் தானே உருவாக்கிக் கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பாட்டாளிகளும் கம்யூனிஸ்டுகளும்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கம்யூனிஸ்டு கட்சிகள் பிற தொழிலாளி வர்க்கக் கட்சிகளை விட முன்னேறிய அரசியல் பிரிவினர். தொழிலாளர் போராட்டத்தின் தேசிய தன்மைகளைத் தாண்டிய உலக தன்மையைச் சுட்டிக் காட்டுவதும், போராட்டத்தின் வெவ்வேறு கட்டங்களில் பாட்டாளி வர்க்கத்துக்கு சரியான வழி காட்டிச் செல்வதும் கம்யூனிஸ்டுகளின் பணியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அ. நடப்பிலுள்ள சொத்துடைமைகளை ஒழிப்பது இதற்கு முந்தைய புரட்சிகளும் செய்துள்ளன. ஆனால் முதலாளித்துவ சமூகத்தில் சொத்து என்பது மிகச் சிறு பகுதியினரிடத்தில் குவிந்திருப்பதே ஆகும். எனவே பாட்டாளி வர்க்கம் புரட்சியின் மூலம் தனிச் சொத்துடைமையை ஒழிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆ. உழைப்பின் மூலம் உருவாகும் சமூகப் பொதுச் சொத்தை, மூலதனத்தை சிறுபான்மை நபர்கள் கைவசம் குவிக்கும் கட்டமைப்பை ஒழித்து சமூக மயமான மூலதன அமைப்பை உருவாக்குகிறார்கள். இதைத் தவிர்த்த சிறு உடைமையாளர்களின் சொத்து ஏற்கனவே முதலாளித்துவத்தால் அழிக்கப்பட்டு விட்டது&lt;br /&gt;(விட்டு வைக்கும் சிறு அளவு சொத்துக்கள் - நிலம், நகைகள், வீடு போன்றவை)&lt;br /&gt;&lt;br /&gt;இ. கூலியுழைப்பின் இழிவான நுகர்வை கம்யூனிஸ்டுகள் ஒழிக்கிறார்கள். தொழில் முதல் வளர்வதற்கு தமது உழைப்பை அளிக்கும் இழிவை, கடந்த காலத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் மூலதனம் நிகழ்காலத்தின் உழைப்பின் மீது ஆதிக்கம் செலுத்துவதை ஒழித்து, நிகழ்கால உழைப்புக்கு கடந்த கால மூலதனம் கட்டுப்பட்டு செயல்படுவதை கம்யூனிஸ்டு கட்சி ஏற்படுத்த வேண்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஈ. சுதந்திரமான வாணிகம், சுதந்திரமான பொருள் பரிமாற்றம் என்பதுதான் முதலாளித்துவ அமைப்பின் சுதந்திரமாக இருக்கிறது. பெரும்பான்மை மக்களுக்கு விற்பனை அல்லது பொருள் பரிமாற்றம் கூலிக்கு உழைப்பை விற்பதாக மட்டும் இருக்கும் போது (அதாவது சுரண்டலுக்குத் தன்னை ஆட்படுத்திக் கொள்ளும் சுதந்திரம்) அந்த விற்றல் வாங்கலை முழுதும் ஒழிப்பது இந்த சுரண்டை ஒழிப்பதாக அமைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உ. சொத்தை ஒழித்தால் உழைப்பதற்கான ஊக்கம் போய் விடும் என்று சொல்லப்படுகிறது. அப்படிப் பார்த்தால் சொத்தே இல்லாத பாட்டாளிகள்தான் அதிகமாக உழைக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊ. அறிவுத் துறை, கலாச்சாரத் துறையில் இருக்கும் அமைப்புகளை அழிப்பதாகச் சொல்லப்படுகிறது. பாட்டாளிகளை சுரண்டலுக்கு உட்படுத்தி வைக்கப் பயன்படும் மதம், கலாச்சாரம், தேசியம், கல்வி போன்றவற்றை அழிப்பதுதான் கம்யூனிஸ்டுகளின் நோக்கம். அதன் மூலம் பெரும்பான்மை மக்களின் சுதந்திரம் பெறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எ. குடும்பத்தை ஒழித்து ஒருவனுக்கு ஒருத்தி என்ற அமைப்பை அழித்து விடுவதாக சொல்லப்படுகிறது. இப்போதைய குடும்ப அமைப்பு பொருளாதார உறவுகளையும் பொருளாதார நலன்களையும் சார்ந்திருக்கிறது. அதை உடைத்து, ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் உண்மையான அன்பின் அடிப்படையில் சேர்ந்து வாழ்வதை கம்யூனிஸ்டு சமூகம் உறுதி செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏ. பாட்டாளி வர்க்கம் தேசத்தின் தலைமையாக வளர்வது வரை தேசியத் தன்மையைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அது முதலாளித்துவ தேசியத் தன்மை இல்லை. தனிமனிதர் பிறரைச் சுரண்டுவதை ஒழிப்பது போல ஒரு தேசம் மற்றொரு தேசத்தைச் சுரண்டுவதும் ஒழிக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐ. அறிவுத் துறையிலும் பாட்டாளி வர்க்கம் அமைக்கும் சோசலிச அமைப்புக்கு பொருத்தமான மாற்றங்கள் ஏற்படுவது இயற்கையானதே. கடந்த புரட்சிகளில் இந்த அமைப்புகள் வர்க்கச் சுரண்டலை ஒழித்துக் கட்டாமல் புது வடிவத்துக்கு மாற்றத் தேவைப்பட்டன. சுரண்டல் முற்றிலும் ஒழிக்கப்படும் போது இந்த அமைப்புகள் தேவையில்லாமல் போய் விடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;புரட்சி&lt;br /&gt;அ. அதிகாரத்தைக் கைப்பற்றுதல்&lt;br /&gt;ஆ. மூலதனத்தைக் கைப்பற்றுதல்&lt;br /&gt;இ. உற்பத்திக் கருவிகளைக் கைப்பற்றுதல்&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றை பாட்டாளி வர்க்கத்தின் பிரதிநிதி அரசின் கையில் மையப்படுத்துதல்.&lt;br /&gt;&lt;br /&gt;அ. நிலத்தில் சொத்துடமையை ஒழித்தல், நில வாடகையை சமூகத்துக்கு உரியதாக்குதல் (உழுபவனுக்கே நிலம் சொந்தம், ஆனால் விற்பதற்கு உரிமை இல்லை என்ற முறை)&lt;br /&gt;ஆ. கடுமையான வருமான வரி (இதன் மூலம் சமூகத்தில் உபரியை அரசின் கையில் கொண்டு வருதல்)&lt;br /&gt;இ. வாரிசு சொத்துரிமை ஒழிப்பு (உழைத்தவருக்கு அதன் பலன்கள், அவருக்குப் பிறகு அதன் அடிப்படையாக இருந்த சமூகத்துக்கு)&lt;br /&gt;ஈ. நாட்டை விட்டு வெளியேறுவோர், கலகம் செய்பவர்களது உரிமைகளைப் பறித்தல் (சுப்ரமணிய சாமி போன்றவர்கள்)&lt;br /&gt;உ. தேசிய வங்கியின் ஏக போகத்துடன் அரசு மூலதனமும் சேர்ந்து நிதி மூலதனத்தை அரசின் கையில் மட்டும் வைத்திருத்தல்&lt;br /&gt;ஊ. செய்தி தொடர்பு, போக்குவரத்து சாதனங்கள் பாட்டாளி வர்க்க அரசின் கையில் இருத்தல்&lt;br /&gt;எ. ஆலைகளையும் உற்பத்திக் கருவிகளையும் மேம்படுத்துதல், தரிசு நிலங்களை மேம்படுத்துதல்&lt;br /&gt;ஏ. எல்லோரும் உழைக்கும் முறையை ஏற்படுத்துதல் (ஜெயேந்திர சரஸ்வதி, ஜெயலலிதா, அழகிரி விவசாயத்தில் உழைப்பார்கள்)&lt;br /&gt;ஐ. விவசாயத்தையும் தொழில் துறையையும் ஒத்திசைந்து செயல்படச் செய்தல்.&lt;br /&gt;ஒ. பொதுப்பள்ளிகளில் இலவசக் கல்வி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சோஷலிச கம்யூனிச இலக்கியம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;பிற்போக்கு சோஷலிசம்&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;அ. பிரபுத்துவ சோஷலிசம்&lt;/u&gt; -&lt;br /&gt;&lt;br /&gt;பிரபுத்துவ சமூகத்தினர் இழந்த அதிகாரத்தைப் பிடிக்க, பாட்டாளிகளின் நலனுக்காக போராடுவதாக இறங்குதல்&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் பாஜக, ஆர்எஸ்எஸ் போன்றவை பேசும் எளிமை, நேர்மை போன்றவை முதலாளித்துவத்தின் கொடுமைகளை பேசி, நிலப்பிரபுத்துவத்துக்குத் திரும்பிப் போவதை நோக்கமாகக் கொண்டவை. அவர்களது பிரச்சாரங்களால் கவரப்பட்ட மக்கள் அவர்கள் பின்னால் போனாலும், அவர்களின் உண்மையான நோக்கங்களைத் தெரிந்ததும் நிராகரித்து விலகி விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் முதலாளித்துவத்தின் ஆதிக்கங்களை கடுமையாக எதிர்க்கும் போராட்டங்களில் இறங்குவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுரண்டப்படும் பாட்டாளி வர்க்கம் நிலப்பிரபுத்துவ அமைப்பில் இல்லை என்று சொல்லுகிறார்கள். முதலாளித்துவ வர்க்கமே தமது அமைப்பிலிருந்து உருவானதுதான் என்பதை மறந்து விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் முதலாளித்துவ சமூகத்தின் விளைபலன்களை தமக்கு எடுத்துக் கொள்கிறார்கள். பிரிட்டனில் நிலப்பிரபுக்களும், இந்தியாவில் சரத் பவார், மூப்பனார் போன்ற நிலப்பிரபுக்கள் வாய்ப்பு கிடைக்கும் போது முதலாளித்துவத்தின் அறுவடைகளை எடுத்துக் கொள்ளத் தயங்குவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல மதங்களும் சோசலிச, எளிமை வாத வேடம் பூண்டு கொள்கின்றன. ரமண மகரிஷியும், ராமகிருஷ்ண பரமஹம்சரும் சோசலிச வாதிகள் என்று பேச முடியும். ஏனென்றால் அவர்கள் சொத்து சேர்ப்பதில்லை, அடுத்தவரை சுரண்டுவதில்லை. ஆனால் உண்மையில் அவர்கள் பிற்போக்கு வாதத்தின் பிரதிநிதிகள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;ஆ. குட்டி முதலாளித்துவ சோஷலிசம்&lt;/u&gt;&lt;br /&gt;குட்டி முதலாளி பிரிவினர் தமது சலுகைகள் பறிபோவதை தாங்க முடியாமல் இறங்கி போராடுதல், ஆனால் உண்மையான புரட்சி கொள்கை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் ஊசலாட்டத்திலேயே இருக்கிறார்கள். இழந்து கொண்டிருக்கும் தமது வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ள போராடுவதுதான் முதன்மை நோக்கமாக இருக்கிறது. அதற்கு பாட்டாளி வர்க்க புரட்சியை இன்னும் ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாளித்துவத்தின் இயங்குமுறையை நுணுக்கமாக ஆராய்ந்து பாட்டாளி வர்க்கப் போராட்டத்துக்கு சித்தாந்த இலக்கியத்தை அளிக்கிறார்கள். ஆனால், இவர்களது நோக்கம் முதலாளித்துவத்தை மாற்றி ஒரு சீர்திருத்தப்பட்ட முதலாளித்துவ கட்டமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் தமது நடுத்தர வர்த்த வசதிகளை மீட்டமைப்பதும் பாதுகாப்பதுமே ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;உற்பத்திக்கு தர்மகர்த்தா முறையிலான பெருநிறுவனங்கள் (டாடா, இன்போசிஸ் போன்றவை), அன்பான தந்தையின் கீழ் விவசாயம் என்பதுதான் அதன் தீர்வாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;இ. ஜெர்மானிய சோஷலிசம்&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரான்சில் முதலாளித்துவ புரட்சிக்குப் பிறகு முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிரான போராட்ட இலக்கியங்களை இறக்குமதி செய்து மொழி பெயர்த்து ஜெர்மனியில் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். ஆனால், ஜெர்மனியில் அப்போது நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து போராடும் நிலையில் முதலாளி வர்க்கம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வேறொரு நாட்டில் உருவான முற்போக்கு கருத்துகளை அந்த நாட்டு யதார்த்தத்தோடு தொடர்பில்லாத இன்னோரு நாட்டுக்கு இறக்குமதி செய்து, மொழி பெயர்ப்புகள் மூலமும் அடிக்குறிப்புகள் மூலமும் தாம் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு விட்டதாக குரல் கொடுப்பது ஜெர்மானிய சோசலிசத்தின் பொது வரையறை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் மாவோயிசம், கம்யூனிசம் என்று பேசும் புரட்சிகரக் கட்சிகளில் பல இந்த வகையில் சேருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;ஈ. பழமை வாத அல்லது முதலாளித்துவ சோசலிசம்&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரசு கட்சி பேசும் சோசலிசம். முதலாளித்துவ அமைப்பில் புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தினருக்கு சலுகைகள், சில சமாதானங்கள் அளிப்பதன் மூலம் பிரச்சனைகளை சமாளித்து வளர்த்துச் செல்லும் முயற்சி. காங்கிரசு, ராம் மனோஹர் லோகியா போன்றவர்களின் சோசலிசம்.&lt;br /&gt;&lt;br /&gt;சீர்திருத்த வாதிகள் (சிபிஐ, சிபிஎம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;ஊ. கற்பனாவத சோஷலிசமும் கம்யூனிசமும்&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கற்பனாவாத சோசலிசம் மேற்சொன்னவற்றை விட நேர்மையானது. முதலாளித்துவ கட்டமைப்பின் கொடுமைகளை அலசி, அதற்கு மாற்றாக உழைக்கும் மக்களின் அதிகாரம் ஏற்பட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தாலும் அதை அடைவதற்கான வழிமுறையில் தவறிழைப்பது கற்பனாவாத சோசலிசம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓவன், ்பூரியே, செயின்ட் சிமோன். பாட்டாளி வர்க்க வளர்ச்சி முதிர்சி பெறாத கால கட்டத்தில் அவர்களது அணுகுமுறை இவ்வளவுதான் வளர முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;எதிர்க்கட்சிகள் குறித்த கம்யூனிஸ்டுகளின் நிலை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு நாட்டின் நிலைமைக்கும் ஏற்ப அந்த ஊர் கட்சிகளுடன் கைகோர்த்துக் கொள்கின்றனர் கம்யூனிஸ்டு கட்சியினர்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36234289-1606354094792781429?l=bookimpact.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookimpact.blogspot.com/feeds/1606354094792781429/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36234289&amp;postID=1606354094792781429' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/1606354094792781429'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/1606354094792781429'/><link rel='alternate' type='text/html' href='http://bookimpact.blogspot.com/2011/11/blog-post_21.html' title='கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36234289.post-8554911079506295732</id><published>2011-11-21T20:34:00.001+05:30</published><updated>2011-11-21T20:36:31.765+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கம்யூனிசம்'/><title type='text'>மார்க்சிய மெய்ஞ்ஞானம் - ஜார்ஜ் பொலிட்சர் (2)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;எல்லாவற்றுக்கும் மூல முதலானது பொருளே என்று சொல்லும் தத்துவம் பொருள்முதல்வாதம் எனப்படுகிறது. மார்க்சியம் பொருள்முதல்வாதத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. அதைப் பயில்வது ஒரு கம்யூனிஸ்டின் போராட்டங்களுக்கு அடிப்படையான தேவையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தத்துவம் இல்லாமல் நடைமுறை மட்டும் பழகிக் கொண்டிருந்தால் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் திரும்பத் திரும்ப செயல்படும் எந்திரமாகத்தான் மனிதன் இருக்க முடியும். நடைமுறையில் இணைந்திருக்காமல் வெறும் தத்துவம் மட்டும் பேசிக் கொண்டிருப்பது ஏட்டுச் சுரைக்காயாகவே நின்று விடும். எனவே தத்துவமும் நடைமுறையும் இணைந்து ஒன்றுக் கொன்று சார்பாக செயல்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தத்துவத்தை பயில்வதற்கு குறிப்பிட்ட முயற்சி எடுக்க வேண்டியிருக்கிறது. அத்தகைய முயற்சி மூலம் தத்துவத்தை புரிந்து கொள்வதில் இருக்கும் சிக்கல்களை வெற்றி கொண்டு விடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தத்துவம் என்பது இயற்கையை, உலகத்தை விளக்க முயற்சிப்பது ஆகும். எல்லா பிரச்சனைகளிலும் பொதுவாக பொதிந்துள்ள அம்சங்களை ஆராய்வது தத்துவம் ஆகும். மார்க்சிய தத்துவம் எல்லா பிரச்சனைகளுக்கும் விடை அளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதி மனிதன் இயற்கைக்கும் பிரபஞ்சத்துக்கும் விளக்கம் தர முயற்சிக்கும் போது போதுமான தகவல்கள் அறிவு வளர்ச்சி இல்லாமையால் தோல்வியடைந்தான். மனிதனின் வாழ்க்கைக்கு அப்படி ஒரு விளக்கம் - உலகப் பார்வை - தேவைப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவியல் பூர்வமான விளக்கம் இல்லாத இடத்தில் மதம், கடவுள் நம்பிக்கைகள் வளர்ந்தன. மதங்கள் அறிவியலுக்கு அப்பாற்பட்ட சக்திகளைக் கொண்டு உலகை விளக்க முயற்சிக்கின்றன. அறிவியல் வளர வளர ஏற்கனவே மதத்தை நம்பி இருந்த நடைமுறைகளுக்கு அறிவியல் பூர்வமான விளக்கம் கிடைக்க ஆரம்பித்தது. இதன் மூலம் மதத்துக்கான இடம் சுருங்க வேண்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே அறிவியல் பூர்வமான பொருள்முதல்வாதம் வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் மதம் முதலான கருத்து முதல்வாதத்துக்கு எதிராக போராடி வளர வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;19ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்புகளின் மூலம் அது வரை வளர்ந்து வந்திருந்த பொருள்முதல்வாதத்துக்கு புத்துயிர் கொடுத்து அறிவியல் பூர்வமாக வளர்த்தெடுத்தார்கள் மார்க்சும் எங்கெல்சும். இதுதான் இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்ற தத்துவம். &amp;nbsp;பொருள்முதல்வாத தத்துவமே மார்க்சியத்துக்கு அடிப்படை. அறிவியல் அணுகுமுறையில் உள்ள பொருள்முதல்வாதம் அறிவியல் வளர வளர தொடர்ந்து வளர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் முன்னரே பொருள்முதல்வாதம் பல வடிவங்களில் இருந்திருக்கின்றது. &amp;nbsp;பொருள்முதல்வாதத்துக்கு என்று ஒரு திட்டமான வரலாறு இருக்கிறது. அது மார்க்சும் எங்கெல்சும் திடீரென்று கண்டுபிடித்த ஒரு கோட்பாடு இல்லை. பண்டைக்கால பொருள்முதல்வாதம் தீதரோவின் துணை கொண்டு வளர்ந்திருந்தது. 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கலைக்களஞ்சிய குழுவினர் அதை வளர்த்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வர்க்கப் போராட்டத்தில் மூன்று பகுதிகள் இருக்கின்றன:&lt;br /&gt;&lt;br /&gt;1. சுதந்திரத்துக்கான தத்துவ போராட்டம். சரியான தத்துவ அணுகுமுறை இல்லாமல் பொருளாதார அரசியல் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றால் அவை காலப் போக்கில் தோற்கடிக்கப்பட்டு விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. சோற்றுக்காக பொருளாதாரப் போராட்டம். பொருளாதார நலன்களை முன்னெடுக்கா விட்டால் அரசியல் அல்லது தத்துவ போராட்டங்களுக்கு தேவையே இல்லாமல் போய் விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போராட்டம். தத்துவ போராட்டமும், பொருளாதார போராட்டமும் அரசியல் போராட்டத்தைக் கொண்டு வலுப்படுத்தப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தத்துவப் போராட்டத்தில் மார்க்சியவாதி தினமும் ஈடுபட வேண்டியிருக்கிறது. கருத்து முதல்வாதிகளின், மதவாதிகளின் பல கேள்விகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. இயக்கவியல் பொருள்முதல் வாதம் இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை அளிக்கும் ஒரு ஆய்வு முறையை நமக்கு தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மார்க்சியத்துக்கு எதிராக முதலாளித்துவம் ஒரு பெரிய இருட்டடிப்பு அல்லது திரித்தல் பிரச்சாரத்தை நடத்துகிறது. தத்துவம் பயின்று முனைவர் பட்டம் பெறும் ஒருவர் இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்பதைப் பற்றி படிக்காமலேயே இருந்து விட முடிகிறது. மார்க்சியம் என்பது ஒரு அரசியல் தத்துவம் மட்டும்தான் அல்லது மார்க்சியம் என்பது பொருளாதாரத் துறையில் ஒரு குறிப்பிட்ட கோட்பாடு மட்டும்தான் என்று ஒதுக்கி விட முயற்சிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மார்க்சியம் தரும் கண்ணோட்டம் சமூக, அரசியல், பொருளாதார பிரச்சனைகளை அணுக வேண்டிய முறையை தருகிறது. இது இயற்கை அறிவியலில் பயன்படுத்தப்படும் அதே நடைமுறைதான். இந்த முழுமையை நாம் உணர்ந்து புரிந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்பதில் இரண்டு கோட்பாடுகள் இருக்கின்றன. இயக்கவியல் என்பது ஒன்று பொருள்முதல்வாதம் என்பது ஒன்று. இரண்டின் வரலாற்றையும் தனித்தனியாகப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகத்தை விளக்குவதற்கு பல தத்துவங்கள் முன் வைக்கப்பட்டாலும் அவற்றை அடிப்படையில் இரண்டு பிரிவுகளில் வகைப்படுத்தலாம். அறிவியல் ரீதியிலான கண்ணோட்டம், அறிவியல் ரீதியில் அல்லாத கண்ணோட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் புலன்களால் உணர முடிகிற பொருட்கள் உலகில் இருக்கின்றன. நமது அறிவால் மட்டும் உணரக் கூடிய கருத்துக்கள் இன்னொரு பக்கம் இருக்கின்றன. விஷயங்களைப் பற்றி பொருட்களைப் பற்றி நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ளும் கருத்துக்களைத்தான் சிந்தனை என்கிறோம். சில கருத்துக்கள் நமது புலன் உணர்ச்சிகளின் மூலம் கிடைக்கின்றன - நம்மைச் சூழ்ந்துள்ள பொருட்கள். கடவுள் முதலான கருத்துக்கள் புலன் உணர்ச்சிக்கு அப்பாற்பட்ட கருத்துக்களாக திகழ்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் எங்கிருந்து வந்தோம், நாம் இறந்த பிறகு நமது சிந்தனைகள் என்ன ஆகின்றன, இந்த உலகம் எப்படி உருவானது, எப்போது அழியப் போகிறது என்று பல கேள்விகள் நமக்கு இருக்கின்றன. ஆன்மாவுக்கும் (உணர முடியாத்து) பொருளுக்கும் (ஐம்புலன்களால் உணரக் கூடியவை) என்ன உறவு? மூளைக்கும் (பொருள்) சிந்தனைக்கும் என்ன உறவு? சிந்தனைகள் எப்படி உருவாகின்றன?&lt;br /&gt;&lt;br /&gt;ஆதிகாலத்தில் தம்மால் புரிந்து கொள்ள முடியாதவற்றை எல்லாம் (கனவுகள், மின்னல், இறப்பு போன்றவை) இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளாக மனிதர்கள் நினைத்துக் கொண்டார்கள். ஆன்மா இருப்பதால்தான் உயிர் இருக்கிறது, ஒருவர் இறக்கும் போது ஆன்மா உடலை விட்டுப் பிரிந்து தன்னிச்சையாக சென்று விடுகிறது என்று நினைத்தார்கள். அதிலிருந்து அழிவற்ற ஆன்மா என்ற கருத்து உருவானது. இவை எல்லாம் நடந்தது பல ஆயிரம் ஆண்டுகள் மனித சிந்தனை வளர்ச்சியின் மூலம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் என்று ஒருவர் இருக்கிறார், அவர்தான் பெருமழையையும் இடியையும் உருவாக்குகிறார் என்று விளக்கமளித்துக் கொண்டார்கள். அதன் மூலம் கடவுள் என்ற கருத்து வளர்ந்தது. கடவுள்தான் இந்த உலகத்தைப் படைத்தார், ஒரு கட்டத்தில் அழிக்கவும் செய்து விடுவார் என்று நினைத்துக் கொண்டார்கள். இதன் மூலம் தாம் வாழும் உலகத்தைப் பற்றிய கேள்விகளுக்கு விடை கண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;காலப் போக்கில் ஆன்மாவும் கடவுளும் ஒன்றுதான், கடவுள்தான் ஆன்மாவைப் படைத்தார், அல்லது ஆன்மாவாக இருக்கிறார் என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக கருத்து முதல் வாதம் என்ற போக்கு வளர்ந்தது. அறிவியல் அணுகுமுறை ஏற்பட்ட பிறகு பொருட்களை உணர்வதன் மூலம் பல்வேறு நிகழ்வுகளுக்கு விளக்கம் அளிக்க முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி கருத்தை முன் வைத்த தத்துவம் அல்லது பொருளை முதன்மையாகக் கொண்ட தத்துவம் என்று இரண்டு பிரிவுகள்தான் இருக்கின்றன. நம்மைச் சுற்றி இருக்கும் பொருட்களை நாம் பார்க்கிறோம். அவற்றில் பலவற்றுக்கு ஆன்மா அல்லது உயிர் இல்லை. ஒருவர் வாழும் போதும் இறந்து போன பிறகும் அவரது உடலில் மூளையைப் பார்க்கிறோம், ஆனால் ஆன்மாவைப் பார்க்க முடியவில்லை. நாம் அறிந்ததிலிருந்து அறிவை விரித்துக் கொண்டு போகும் அறிவியல் அணுகுமுறை பொருள் முதல்வாதம்தான் சரி என்று நிலைநாட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்றில் அறிவியல் வளர வளர மனித அறிவு வளர வளர கருத்து முதல்வாதமான மதங்கள், கடவுள்களின் தேவை இல்லாமலேயே பல நிகழ்வுகளை விளக்க முடிந்தது. இதனால் கருத்து முதல்வாதிகள் தமது வாதங்களை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டி வந்தது. இவற்றில் முக்கியமானவர் 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த பெர்க்லி பாதிரியார். மற்ற எல்லா கருத்து முதல்வாத விவாதங்களை விட பெர்க்லி பாதிரியாரின் வாதம் வலுவாகவும் அதிலிருந்தே மற்ற வாதங்கள் வருவதாகவும் இருக்கிறது. அதனால் அந்த வாதத்தை விளக்கமாகத் தெரிந்து கொண்டு அதிலிருக்கும் பிரச்சனைகளை புரிந்து கொள்ள வேண்டும் (தீதரோ, லெனின்).&lt;br /&gt;&lt;br /&gt;நாம் இருப்பதாக நம்பும் பொருட்கள் எதுவும் உண்மையில் இல்லை. அவை அனைத்தும் நமது மனதின் படைப்புகளே. ஒரு பொருளின் நிறம், எடை, தொடுஉணர்வு மூலமாக அதற்கு ஒரு கருத்தை உருவாக்கி பெயர் அளிக்கிறோம். ஆனால் நிறம், எடை, தொடு உணர்வு என்பது மனிதர்களுக்கு மனிதர், இடத்துக்கு இடம், நேரத்துக்கு நேரம் மாறுபடுகின்றன. எனவே பொருள் என்பதே நமது உணர்வுகளின் ஒரு தொகுப்புதான். அதற்கு வெளியில் பொருள் இருக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது பொருட்களின் பண்புகள் என்று நாம் உணருவது உண்மை இல்லை, அதனால் பொருள் என்பதே இல்லை என்று முடிவு செய்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தத்துவத்தை ஏற்றுக் கொண்டால் என்ன நடக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;1. நான் ஒருவன்தான் இருக்கிறேன். மற்ற பொருட்கள், மனிதர்கள் எல்லாமே எனது சிந்தனைகளின் படைப்புதான் என்ற சோலிபிசத்தில் வந்து சேருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;2. ஆன்மாதான் பொருளை படைக்கிறது. ஒன்று, கடவுள் உலகைப் படைத்தார் என்று சொல்லலாம். அல்லது கடவுள் நமக்கு எண்ணங்களை அளிப்பது மூலம் உலகம் என்ற மாயையைப் படைத்தார் என்று சொல்லலாம். இரண்டுக்குமே கடவுள் தேவைப்படுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;3. நமது மனதுக்கு வெளியே உலகம் என்று ஒன்று இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;4. நமது எண்ணங்கள்தான் பொருட்களை உருவாக்கிக் கொள்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றுக்கு பொருள்முதல்வாதம் தரும் விடைகள் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்முதல்வாதம் மனித அறிவுடன் வளர்ந்து வந்தது என்று பார்த்தோம். குறிப்பிட்ட கட்டத்தில் அறிவியல் கோட்பாடுகள் கருத்துமுதல் வாதிகளை தடுமாறச் செய்தன. அதனால்தான் இயற்கை அறிவியலை தத்துவ ஞானத்திலிருந்து பிரித்துக் கொண்டார்கள். அறிவியல் பொருள்முதல்வாத அணுகுமுறையில் வளர்ந்து வந்த அதே நேரத்தில் அதன் தொந்தரவுகள் இல்லாமல் சமூக, அரசியல், பொருளாதார தளங்களில் தமது கருத்து முதல் வாத அணுகுமுறைகளை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். அதன் மூலம் ஆளும் வர்க்கத்தினர் தமது ஆதிக்கத்தை நீட்டித்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்தான் அடிப்படை, பொருட்களை புலன்களால் உணர்வதன் மூலம்தான் சிந்தனை பிறக்கிறது. சிந்தனை என்பது மூளை என்ற பொருளில் பிறப்பதுதான். இந்த உலகத்தை நாம் அறிந்து கொள்ள முடியும். பொருட்களை உணர்ந்து கொள்ளும் நமது திறன்களை வளர்ப்பதன் மூலம் உலகத்தைப் பற்றிய அறிவையும் வளர்த்துக் கொள்ள முடியும். புதிய கருவிகள், தொழில்நுட்பங்கள் மேலும் மேலும் பல பிரச்சனைகளுக்கு விளக்கங்களைத் தருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கருத்து முதல்வாதிகளுக்கும் பொருள் முதல்வாதிகளுக்கும் இப்படி ஒரு அடிப்படை முரண்பாடு இருக்கிறது? எது சரி? கருத்து முதல்வாதத்தின் அடிப்படை கோட்பாடுகளை ஆராய்வது மூலம் இதற்கு விடை காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;1. மனதுதான் பொருள் படைக்கிறது.&lt;br /&gt;அகநிலை நடைமுறை, புறநிலை நடைமுறை இரண்டையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு அமைப்புக்குள் நிலவும் நடைமுறை அகநிலை, அதற்கு வெளியில் நிலவுபவை புறநிலை. நமது சிந்தனைக்குள் இருப்பவை அகநிலை, வெளியில் இருப்பவை புறநிலை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உலகம் புறநிலையில் இல்லை, அகநிலையில்தான் இருக்கிறது என்பதுதான் இந்த கருத்து முதல்வாத கோட்பாட்டின் சாராம்சம். அவர்கள் சொல்வதுதான் சரி என்று வைத்துக் கொள்வோம். மனிதன் தோன்றுவதற்கு முன்பு இந்த உலகம் இருந்தது என்று அறிவியல் நிரூபிக்கிறது. அப்போது அது எந்த மனதுக்குள் இருந்தது? கடவுளிடன் குடியிருந்தன என்றுதான் சொல்ல முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் அல்லது அறிவியல் இரண்டில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க முடியும். அனுபவம், நடைமுறை இரண்டையும் கொண்டு உலகம் என்பது ஒரு புறநிலை யதார்த்தம்தான் என்று அறிவியல் நிரூபிக்கிறது. நடைமுறையில் அனுபவங்களை வைத்து நமது மனதுக்கும், சிந்தனைகளுக்கும், விருப்பங்களுக்கும் அப்பால் பொருட்கள் இருக்கின்றன, இயங்குகின்றன என்று நாம் நிரூபிக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. கடவுள்தான் உலகைப் படைத்தார்&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு ஆதாரங்களோ, அனுபவங்களோ முன்வைக்கப்படுவதில்லை. மதவாதிகள் சொல்வதை அப்படியே நம்புவதைத் தவிர வேறு வழியில்லை. பொருளை மனது படைக்க வேண்டுமானால், பொருள் &amp;nbsp;உருவாவதற்கு முன்பு மனம் அல்லது ஆன்மா தனியாக இருந்திருக்க வேண்டும். அப்படி ஒன்றை நாம் பார்க்கவே முடிவதில்லை. (ஆனால், மனம் இல்லாத பல பொருட்களை நாம் பார்க்கிறோம்).&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்கள்தான் மனதை உருவாக்குகின்றன. மனிதன்தான் கடவுளைப் படைத்தான் என்று பொருள்முதல்வாதம் நிறுவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி நெருக்கிப் பிடித்தால் கருத்து முதல்வாதிகளில் சிலர் மூன்றாவது ஒரு தத்துவத்துக்குள் தப்பிக்கப் பார்ப்பார்கள். இதுதான் சந்தேகவாதம். பொருட்கள் இருக்கலாம் (அல்லது இல்லாமல் போகலாம்), ஆனால் அவற்றை நாம் முற்றிலும் அறிந்து கொள்வது சாத்தியமில்லை. அறிவியல் மூலம் நம்மால் தெரிந்து கொள்பவற்றுக்கு அப்பால் பொருட்களை நாம் அறிந்து கொள்ள முடியாது. நாம் அறிந்த பொருள், தானே ஆகிய பொருள் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஹ்யூம் என்ற ஆங்கிலேயரும் கான்த் என்ற ஜெர்மானியரும் இந்த தத்துவத்தை முன் வைக்கிறார்கள். புறநிலையில் ஒரு உலகம் நமது சிந்தனைகளை சாராமல் இருக்கிறது ஆனால் உலகம் இருப்பது ஒரு யதார்த்தம் இல்லை. யதார்த்தம் என்பது நமது புலன்களின் பிரதிபலிப்பே!&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றையும் நாம் தெரிந்து கொள்ள முடியும் என்று பேசக் கூடாது. அறிவியலுக்கு உரித்தான தன்னடக்கத்தோடு இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவும் கருத்து முதல்வாதத்தின் ஒரு வெளிப்பாடுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;பொருட்களின் வெளித்தோற்றங்களைத்தான் அறிவியல் வெளிப்படுத்துகிறது. தானே ஆகிய பொருளைப் பற்றி அது சொல்வதில்லை, சொல்லவும் முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;Proof of pudding is in eating it தோசையைத் தின்று பார்த்தால் அது இருக்கிறதா அல்லது இல்லையா என்று தெரிந்து விடுகிறது. பேருந்தின் முன் விழுந்து பார்த்தால் அது குறித்தான சந்தேகம் தீர்ந்து விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் இல்லை, மாயை என்று சொல்வதற்கும், உலகம் இருக்கிறதா என்று உறுதியாகச் சொல்ல முடியாது என்று சொல்வதற்கும் அடிப்படையில் வேறுபாடு இல்லை. இரண்டு பேருமே கருத்து முதல்வாதத்தில்தால் கொண்டு விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36234289-8554911079506295732?l=bookimpact.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookimpact.blogspot.com/feeds/8554911079506295732/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36234289&amp;postID=8554911079506295732' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/8554911079506295732'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/8554911079506295732'/><link rel='alternate' type='text/html' href='http://bookimpact.blogspot.com/2011/11/2.html' title='மார்க்சிய மெய்ஞ்ஞானம் - ஜார்ஜ் பொலிட்சர் (2)'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36234289.post-1951208722035754434</id><published>2011-11-21T20:31:00.001+05:30</published><updated>2011-11-21T20:34:41.771+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கம்யூனிசம்'/><title type='text'>மார்க்சிய மெய்ஞ்ஞானம் - ஜார்ஜ் பொலிட்சர்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;ஜார்ஜ் பொலிட்சர் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைசிறந்த தத்துவப் பிரச்சாரகர்களில் ஒருவர். அவரது சொற்பொழிவுகளுக்குத் தயாரித்து வைத்திருந்த குறிப்புகளிலிருந்து இந்த நூல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1. தத்துவத்தை நாம் ஏன் பயில வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றிற்கும் முதலும் மூலமும் பொருளே என்று பறைசாற்றும் தத்துவம் பொருள்முதல்வாதம் எனப்படுகிறது. மார்க்சியம் இயக்கவியல் பொருள்முதல்வாதத்துடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. நடைமுறையுடன் தத்துவம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விஷயத்தை அல்லது தத்துவத்தை நடைமுறையில், வாழ்க்கை அனுபவத்தில் வெளியிடச் செய்யும் செய்கையை நடைமுறை என்கிறோம். தத்துவம் என்பது நடைமுறையில் நாம் மெய்ப்பித்துச் சாதிக்க விரும்புபவற்றைப் பற்றி நாம் பெற்றிருக்கும் அறிவு ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தத்துவம் இல்லாமல் செயல்படுவது முன்னேற்றத்தை தராது, செயல்பாடு இல்லாத தத்துவம் நடைமுறையில் வெற்றி பெற முடியாத ஏட்டுச் சுரைக்காயாக இருந்து விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;புரட்சிக்குரிய பணிகளைச் செய்து கொண்டு போக ஒரு சரியான ஆய்வு முறை தேவைப்படுகிறது. வறட்டுத் தத்துவமும் சூத்திரமும் தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;2. தத்துவத்தைப் பயில்வது கடினமா?&lt;br /&gt;&lt;br /&gt;கடினம்தான், ஆனால் முடியாத ஒன்று இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;3. தத்துவம் என்றால் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உலகம் எங்கிருந்து வந்தது, நாம் எங்கே போகிறோம், என்ற உலகத்தின் பிரச்சனைகளுக்கு பதில் அளிக்க முயல்வதுதான் தத்துவஞானியின் பணி. இயற்கையை உலகத்தை விளக்க விரும்புவது தத்துவம் எனப்படுகிறது. எல்லா விஷயங்களிலும் பொதிந்திருக்கிற பொதுவான பிரச்சனைகளை ஆராய்ந்து முடிவு கூறுவது தத்துவம்.&lt;br /&gt;&lt;br /&gt;மார்க்சீய தத்துவம் எல்லா பிரச்சனைகளுக்கும் விடையளிக்கிறது, அந்த விடைக்கு வேராக விளங்குவது இயக்கவியல் பொருள்முதல்வாதமே.&lt;br /&gt;&lt;br /&gt;4. பொருள்முதல்வாதம் என்றால் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;பொருள் முதல்வாதி என்றால் 'பொருள் ஈட்டுவதில் மட்டும் கவனம் செலுத்துபவன், உயர்ந்த லட்சியங்கள், குறிக்கோள்கள் இல்லாதவன்' என்று பொருள் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;தத்துவத்தின் வரலாற்றைப் பார்ப்போம். ஆதி மனிதன் இயற்கைக்கும் உலகத்துக்கும் விளக்கம் தருவதற்கு வெற்றி பெற முடியவில்லை. இயற்கையை ஆராய்ச்சி செய்வதற்கான முறைகள் இல்லாததால் அறியாமையின் காரணமாக மதங்கள், கடவுள்கள் தோற்றுவிக்கப்பட்டன. நூற்றாண்டுகள் செல்லச் செல்ல அறிவியல் வளர்ச்சி பெறப் பெற உலகை விளக்குவதற்கு தேவைப்படும் கடவுள்/மதத்தின் மீது &amp;nbsp;நம்பிக்கை அளவு குறைந்து கொண்டே வருகிறது. அறிவியல் மூலமாக உலகை விளக்குவதுதான் பொருள்முதல்வாதம்.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்றில், பொருள்முதல்வாதம் சிறிது சிறிதாக கடவுள்/மதம் என்ற கருத்துக்களின் தேவையைக் குறைத்துக் கொண்டே வருவதற்கு பெரும் போராட்டங்கள் &amp;nbsp;நடந்தன. ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பும் மதவாதிகளின் கடுமையான எதிர்ப்பை சந்தித்துதான் நிலைபெற முடிந்தது (பூமி சூரியனைச் சுற்றி வருகிறது, அணுவைப் பிளக்க முடியும், அண்ட பெருவெடிப்பு கோட்பாடு). இப்படி 19ஆம் நூற்றாண்டு வரை நீண்ட தத்துவ போராட்டத்தில்தான் மார்க்சும் எங்கெல்சும் தலையிட்டு 19ம் நூற்றாண்டின் மகத்தான கண்டுபிடிப்புகளை ஒருங்கிணைத்து இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்ற கோட்பாட்டை உருவாக்கினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கை அறிவியலிலிருந்து பெறப்பட்ட அந்த கோட்பாட்டை மனித சமூக, வரலாற்று, பொருளாதார மாற்றங்களுக்கும் பொருத்த முடியும் என்று நிரூபித்துக் காட்டினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;5. மார்கஸீயத்துக்கும் பொருள்முதல்வாதத்துக்கும் என்ன தொடர்பு?&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்முதல்வாதமே மார்க்சீயத்தின் அடிப்படை.&lt;br /&gt;மனித அறிவு வளர வளர அறிவியலும் விரிந்து செல்கிறது. மார்க்சியம் என்பது அறிவியல் ஆய்வு அணுகுமுறையை சமூக, வரலாற்று, பொருளாதார அறிவியல்களிலும் பயன்படுத்துவதே ஆகும். இயற்கை அறிவியலின் முன்னேற்றத்தை ஒட்டி மார்க்சியமும் முன்னேறிச் செல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சமூக,வரலாற்று, பொருளாதார துறைகளில் அறிவியல் ஆய்வுமுறையை புறக்கணித்ததால்தான் பெரு அளவிலான குழப்பங்கள், அழிவுகள், துன்பங்களை மனித சமூகம் சந்தித்து வருகிறது. வயிற்று வலிக்கு அம்மனுக்கு நேர்ந்து கொள்வது என்பது கருத்து முதல்வாத அணுகுமுறை. வயிற்றை பரிசோதித்து சரியான சிகிச்சை எடுத்துக் கொள்வது பொருள்முதல்வாத அறிவியல் அணுகுமுறை.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல பொருளாதார விதிகளை கருத்து முதல்வாத அடிப்படையில் அணுவதன் மூலம் திட்டமான முடிவுகளைப் பெற முடியாமல் பொருளாதார ஊசல்களில் மாட்டிக் கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வர்க்கப் போராட்டத்தில் மூன்று பகுதிகள் உள்ளன. 1. பொருளாதாரப் போராட்டம் 2. அரசியல் போராட்டம் 3. தத்துவ அறிவுப் போராட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;தத்துவ அறிவுப் போராட்டம் உண்மையான சுதந்திர வாழ்க்கையை உழைக்கும் மக்களுக்கு ஏற்படுத்தித் தருவதற்கான போராட்டம்.&lt;br /&gt;அரசியல் போராட்டம் உழைக்கும் மக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் மக்கள் குழுக்களுக்கிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான போராட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதாரப் போராட்டம் என்பது சோற்றுக்காக, வாழ்க்கை தேவைகளுக்காக போராடுவது.&lt;br /&gt;&lt;br /&gt;தத்துவப் போராட்டத்தில் நம் முன் வைக்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் நாம் பதில் அளிக்க வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் உண்டா இல்லையா, ஆன்மா என்ற அழிவில்லாத சக்தி இருப்பது உண்மையா, இந்த உலகம் எப்படித் தோன்றியது, உலகம் எப்போது அழியும் இது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளிப்பதற்கான ஆய்வு முறை நமக்குத் தேவைப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;6. மார்க்சியத்துக்கு எதிரான முதலாளித்துவத்தின் பிரச்சாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;மார்க்சியத்தைப் பற்றி மௌனம் சாதிப்பது அல்லது அரைகுறை உண்மைகளை தமக்கு சாதகமாக இருக்கும் படி கூறுவது முதலாளித்துவ அமைப்பின் மிகப்பெரும் ஆயுதமாக இருக்கிறது. தத்துவம் பயிலும் மாணவர்கள், பொருளாதாரம் படிக்கும் ஆய்வாளர்கள் யாரும் மார்க்சியத்தையும், இயக்கவியல் பொருள்முதல்வாதத்தையும் பற்றி தெரிந்து கொள்ளாமலேயே முனைவர் பட்டம் வரை பெற்றுக் கொள்ள முடியும் படி கல்வி நிலையங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கை அறிவியல் பாடங்களில் பயன்படுத்தும் ஆய்வு முறைகளை பொருளாதாரத்திலும், தத்துவப் படிப்பிலும் ஒதுக்கி விட்டு குழப்பமான தியரிகளையே முன்வைக்கிறார்கள். இதனால் மாணவர்கள், மக்கள் மார்க்சியம் அளித்த விஞ்ஞானப் பார்வையின் பலனைப் பெறாமலேயே வைக்கப்படுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;7. தத்துவஞானத்தை எப்படிக் கற்கத் தொடங்குவது?&lt;br /&gt;&lt;br /&gt;இயக்கவியல் பொருள்முதல்வாதத்தில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. பொருள்முதல்வாதம், இயக்கவியல். இந்த இரண்டுமே தனித்தனி வரலாறுகளை கடந்து வந்திருக்கின்றன. முதலில் பொருள்முதல்வாதம் பற்றி பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகத்தை விளக்குவதற்கு இரண்டு அணுகுமுறைகள் இருக்கின்றன. நூற்றுக்கணக்கான தத்துவவழிகளை இந்த இரண்டு பிரிவுகளில் ஒன்றில் வகைசேர்த்து விடலாம். முதலாவது அணுகுமுறை அறிவியல் பூர்வமானது, மற்றது அறிவியல்பூர்வமற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;8. நாம் ஐம்புலன்களால் உணரும் பருப்பொருட்கள் ஒரு பக்கம், நமது சிந்தனையில் தோன்றும் எண்ணங்கள் இன்னொரு பக்கம்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36234289-1951208722035754434?l=bookimpact.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookimpact.blogspot.com/feeds/1951208722035754434/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36234289&amp;postID=1951208722035754434' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/1951208722035754434'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/1951208722035754434'/><link rel='alternate' type='text/html' href='http://bookimpact.blogspot.com/2011/11/blog-post.html' title='மார்க்சிய மெய்ஞ்ஞானம் - ஜார்ஜ் பொலிட்சர்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36234289.post-3400023851549011973</id><published>2010-07-13T08:27:00.002+05:30</published><updated>2010-07-13T08:28:47.772+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><title type='text'>நகைச்சுவை சிகரம்</title><content type='html'>கல்யாண பரிசு - தங்கவேலு நகைச்சுவை&lt;br /&gt;&lt;a href="http://www.in.com/music/track-comedy-sequences-438087.html"&gt;http://www.in.com/music/track-comedy-sequences-438087.html&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36234289-3400023851549011973?l=bookimpact.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookimpact.blogspot.com/feeds/3400023851549011973/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36234289&amp;postID=3400023851549011973' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/3400023851549011973'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/3400023851549011973'/><link rel='alternate' type='text/html' href='http://bookimpact.blogspot.com/2010/07/blog-post_13.html' title='நகைச்சுவை சிகரம்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36234289.post-902619968625267811</id><published>2010-07-07T09:51:00.003+05:30</published><updated>2010-07-07T10:06:49.089+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமெரிக்கன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாவல்'/><title type='text'>ஆர்தர் ஹீலி</title><content type='html'>&lt;a href="http://en.wikipedia.org/wiki/Arthur_Hailey"&gt;ஆர்தல் ஹீலி &lt;/a&gt;ஒவ்வொரு துறையைப் பற்றி ஆராய்ச்சி செய்து அவற்றை சார்ந்து எழுதிய புனைவுகள் மிகவும் சிறப்பானவை.&lt;br /&gt;&lt;br /&gt;1. &lt;a href="http://en.wikipedia.org/wiki/Wheels_%28novel%29"&gt;Wheels&lt;/a&gt; என்று அமெரிக்க கார் உற்பத்தி மற்றும் விற்பனைத் துறை பற்றிய புனைவு. மூன்று பெரிய நிறுவனங்களுக்கு வெளியே நான்காவதாக ஒரு கற்பனை நிறுவனத்தை பின்னணியாக வைத்து&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt; வடிவமைப்பிலிருந்து,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;உற்பத்தித் தளத்தில் நடக்கும் அரசியல்கள், குழப்பங்கள்,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;சந்தைப்படுத்தும் அணுகுமுறைகள்,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;விற்பனை முகவர்கள் செயல்பாடு&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;என்று எல்லா பகுதிகளையும் தொட்டுச் செல்லும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு பகுதியிலும் ஒரு பாத்திரத்தை உருவாக்கி, எல்லா பாத்திரங்களும் உறவாடும்படியாக அமைத்து, அந்த உறவாடல்களின் உணர்ச்சி ததும்பல்களுக்கு நடுவே துறையைப் பற்றிய விபரங்களை தூவிக் கொண்டே போவார்.&lt;br /&gt;&lt;br /&gt;மருந்துக்கு சர்க்கரை பூசி கொடுப்பதற்கு இதை விட சிறந்த எடுத்துக்காட்டு சொல்ல முடியாது. நிறைய தகவல்களை நமது மூளை கிரகித்துக் கொள்ளும் படி கதையோடு கதையாக ஊட்டி விடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;2. அடுத்ததாகப் படித்தது, &lt;a href="http://en.wikipedia.org/wiki/Airport_%28novel%29"&gt;Airport&lt;/a&gt; என்று ஒரு அமெரிக்க நகரத்தின் விமான நிலையத்தில் நடக்கும் பதற்றங்களைப் பற்றிய நாவல். 200 பக்கங்களுக்கும் அதிகமான இந்தக் கதை ஒரு மாலையில் ஆரம்பித்து அந்த இரவிலேயே முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;விமான நிலைய நிர்வாகம்,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;விமான நிறுவனங்கள்,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;பயணிகள்,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;விமான நிலையத்துக்கு அருகிலான குடியிருப்பு,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;விமானத்தில் குண்டு வைத்து காப்பீட்டுத் தொகை சம்பாதிக்க முனையும் தோல்வியடைந்து தொழில் முனைவர் ஒருவர்,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;விமான கட்டுப்பாட்டு அறையில் நிலவும் அழுத்தம்,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;விமான விபத்து&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;என்று ஒரு விமான நிலையத்தை மையமாக வைத்து பறக்கும் துறையின் சிக்கல்களை விளக்கமாகச் சொல்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கும் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் அழுத்தமான உணர்ச்சி வடிவம் கொடுத்து அவர்களின் உறவாடலில் சிக்கல்களைக் காட்டி, அவர்கள் மூலமாகவே பல விபரங்களை தெரிவித்து விடுவார். பனிப்புயலினால் செயல்பாடு பாதிக்கப்பட்ட அந்த மாலையில் குண்டு வெடித்து ஒரு விமானம் திரும்பி வந்து இறங்குவது வரையிலான சில மணிநேரக் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;3. இன்னொரு கதை &lt;a href="http://en.wikipedia.org/wiki/In_High_Places"&gt;In High Places&lt;/a&gt; என்று கனடாவின் அரசியல், அரசாங்கம் பற்றிய கதை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;கனடா நாட்டின் பிரதம மந்திரி,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;எதிர்க் கட்சித் தலைவர்,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;பத்திரிகைகள், நீதிமன்றம்,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;அமெரிக்க குடியரசுத் தலைவர்,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;பிரிட்டிஷ் அரசி,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;குடியேற்றக் கொள்கை,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;அரசாங்கத்துக்குள் அரசியல்&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;என்று விறுவிறுப்பான நாவலாக உருவான ஒன்று. இங்கும் ரத்தமும் சதையும், உணர்வுகளும் கலந்து உருவான பாத்திரங்களின் உணர்வு பொங்கல்களுக்கு நடுவே கனடா நாட்டின் அரசியல் சூழலையும் அதன் வெளியுறவுக் கொள்கை செயல்பாடுகளையும் நோகாமல் உரித்து வாசகருக்குக் கொடுத்து விடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;4. நான்காவதாக, &lt;a href="http://en.wikipedia.org/wiki/The_Moneychangers"&gt;The Money Changers&lt;/a&gt; என்று வங்கித் துறை பற்றிய கதை.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவும் அமெரிக்காவின் சின்ன ஊர் ஒன்றில்&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;அந்த ஊரின் வங்கித் தலைமையகம்,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;அதன் பிரதான கிளை,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;அதில் பணிபுரியும் மேலாளர்களுக்கிடையேயான அரசியல்,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;வங்கி கடன் கொடுப்பதில் இருக்கும் அரசியல்,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;சமூக உணர்வுள்ள கடன், பெருநிறுவனக் கடன்களுக்கு இடையேயான இழுபறிகள்,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;வங்கித் துறை செயல்படும் முறைகள்&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;என்று வங்கித் துறைக்கு ஒரு பறவைப் பார்வையாக புத்தகத்தை உருவாக்கியிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;வங்கியின் தலைவர் ஆரம்ப அத்தியாயத்தில், தான் சில மாதங்களில் இறக்கப் போவதாக அறிவிப்பதோடு கதை ஆரம்பிக்கிறது.&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt; வங்கியின் மூத்த தலைமை அதிகாரிகளுக்கான அதிகாரப் போட்டி,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;யார் தலைவர் ஆகப் போகிறோம் என்று நடக்கும் இழுபறிகள்,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;பிரதான கிளையில் பணம் திருடு போய் அதைக் கண்டு பிடித்து தொடர்புள்ள ஊழியர் சிறைக்கு அனுப்பப்படுவது,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;நலிவுற்ற பிரிவினருக்கான வீட்டு வசதித் திட்டத்துக்கான பண வசதியைக் குறைக்கும் வங்கியின் நடவடிக்கைக்கு எதிரான போராட்டம்,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;பெரிய நிறுவனத்துக்குக் கடன் கொடுப்பதற்கு போட்டி போட்டு கடைசியில் அது பூதாகரமாக வந்து வங்கியின் கழுத்தை நெரிப்பது,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;அதன் பின்விளைவுகளை சமாளிப்பது&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;என்று பக்கத்துக்குப் பக்கம் சுவாரஸ்யம் குறையாமல் கதை நகரும்.&lt;br /&gt;&lt;br /&gt;வங்கித் தலைவர் போட்டியின் ஒரு தலைமை அதிகாரி அலெக்ஸ் வாண்டர்வூத், அவரது மனைவி மன நிலை சரியில்லாமல் காப்பகத்தின் வசிக்கிறார், அவரது பெண்தோழி வழக்கறிஞராக போராடுபவர், வங்கிக்கு எதிராகவும் போராட்டம் நடத்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு தலைமை அதிகாரி ரோஸ்கோ SuNatCo என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு கடன் கொடுக்கும் வகையில் வங்கியை ஈடுபடுத்துகிறார். அலெக்ஸ் சிறு சேமிப்பாளர்களிடமிருந்து சேமிப்பு நிதி திரட்டும் திட்டத்தைச் செயல்படுத்த முயற்சிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வங்கியின் பிரதான கிளையின் தலைமை மேலாளர் கிளையில் நிகழ்ந்த திருட்டை சரிவரக் கையாண்டு பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்ட தென்அமெரிக்கப் பெண்ணை மாட்ட வைக்க முயற்சித்த கெட்டிக்கார மேலாளரை சிறைக்கு அனுப்புகிறார்கள். அவன் சிறையில் அடிபட்டு, உதைபட்டு, நொந்து நூலாகி வெளியில் வந்து கள்ள நோட்டு, கள்ள கடனட்டை உருவாக்கி சுழற்சியில் வெளிவிடும் கும்பல்களை பின்தொடரும் வேலையில் இறங்க வைக்கப்படுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே கதை சூடு பிடித்து உணர்வு பூர்வமான நிகழ்வுகளுடன் தொடர்ந்து, அலெக்சின் அணுகுமுறைகள் வெற்றி பெற்று அவர் வங்கியின் தலைவர் ஆவதாக முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;5. ஐந்தாவதாக &lt;a href="http://en.wikipedia.org/wiki/Hotel_%28novel%29"&gt;Hotel&lt;/a&gt; என்று தங்கும் விடுதி பற்றிய கதை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;பல நகரங்களில் இயங்கும் ஓட்டல் தொடர்களில் ஐக்கியமாகி விடாமல் தன்னியல்புடன் இயங்கும் ஒரு விடுதியில் ஏற்பட்டுள்ள பண நெருக்கடி,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;அதன் உரிமையாளருக்கும் மேலாளருக்கும் இடையேயான இழுபறி,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;வேலை பார்க்கும் ஊழியர்களின் மோசடிகள்,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;பண நெருக்கடியைப் பயன்படுத்தி அதை வாங்க வந்திருக்கும் ஓட்டல் தொடர் முதலாளி,&lt;/li&gt;&lt;li&gt;ஓட்டலில் தங்க வந்திருப்பவர்களின் விபரங்கள் - ஓட்டல் திருடன், ஓட்டலில் கேளிக்கை நடத்தும் இளைஞர்கள், ஆண்டு தோறும் வரும் முதியவர்,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;இங்கிலாந்தை சேர்ந்த மேற்குடி தம்பதியினர், அவர்களால் நிகழ்ந்து விடும் சாலை விபத்து, அதை மறைக்க அவர்கள் ஆடும் நாடகம்,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;சரியாக பராமரிக்கப்படாத மின்தூக்கி,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;விடுதி கைமாறுவதில் நிகழும் நாடகங்கள்,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;தெற்கு அமெரிக்க மாநிலங்களின் நிறவெறிக் கொள்கையால் ஏற்படும் நெருக்கடி&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;இவற்றுக்கிடையே ஒரு தங்கும் விடுதியின் நடைமுறைகளை இட்டு நிரப்பியிருப்பார். கடைசியில் மின்தூக்கி ஒன்று அறுந்து விழுந்து பலர் உயிரிழக்கும் இறுதிக் கட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;6. ஆறாவதாக, &lt;a href="http://en.wikipedia.org/wiki/Overload_%28novel%29"&gt;overload&lt;/a&gt; என்று மின்சாரம் உற்பத்தி செய்து வினியோகிக்கும் நிறுவனம் ஒன்று சந்திக்கும் பிரச்சனைகள், அது சார்ந்த அரசியல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மின்சாரம் உற்பத்தி மற்றும் வினியோகம் தனியார் துறையில் ஒரே நிறுவனத்தின் ஏகஉரிமையாக இயக்கப்படுகிறது. அவர்கள் என்ன கட்டணம் வசூலிக்கலாம் என்பது மேற்பார்வைக் குழுவால் ஒழுங்குபடுத்தப்படுகிறது. புதிய மின் உற்பத்தித் திட்டங்களை சுற்றுச் சூழல் பாதுகாப்புக் குழுவினர், கம்யூனிச குழுக்கள் எதிர்க்கின்றன. மின்சாரம் தட்டுப்பாட்டினால் மின்வெட்டுகளை செயல்படுத்தும் கட்டாயம்.&lt;br /&gt;&lt;br /&gt;விபத்துக்கள், மின்தடை, மின்சாரத் திருட்டு, மின்சார நிறுவன அரசியல் இவற்றுக்கிடையே மின்வினியோகத் துறை குறித்து தனது ஆராய்ச்சியில் திரட்டிய தகவல்களை தளும்பத் தளும்பத் தந்திருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;7. ஏழாவதாக &lt;a href="http://en.wikipedia.org/wiki/Strong_Medicine_%28novel%29"&gt;Strong Medicine&lt;/a&gt; என்று மருந்துத் துறை குறித்த கதை.&lt;br /&gt;&lt;br /&gt;மருந்து ஆராய்ச்சி, மருந்து விற்பனை, நிறுவன அரசியல், மருந்து பயன்படுத்துவதில் சில மருத்துவர்கள் செய்யும் முறைகேடுகள் என்று அமெரிக்க மருந்து நிறுவனத்தை களமாக வைத்து கதை பின்னியிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;8. எட்டாவதாக &lt;a href="http://en.wikipedia.org/wiki/The_Final_Diagnosis"&gt;The Final Diagnosis&lt;/a&gt; என்று மருத்துவமனை நிர்வாகம், அரசியல், நோயாளிகளுக்கு சேவை அளிப்பது என்று ஒரு நாவல்.&lt;br /&gt;&lt;br /&gt;பகுப்பாய்வுத் துறையில்தான் இறுதி முடிவுகள் தெரிகின்றன என்பதுதான் Final Diagnosis என்று குறிப்பிடப் படுகிறது. நோயாளியின் மரணத்துக்குப் பிறகான பகுப்பாய்வு, நோய்க்கிருமி அடையாளம் காணுதல், புற்றுநோய் திசுக்களை உறுதிப்படுத்துதல், மருத்துவமனையின் சாப்பாட்டுக் கூடத்தில் தூய்மை பேணப்படுகிறதா என்று கண்காணித்தல் என்று மருத்துவமனையின் அதிமுக்கிய பணிகள் pathology என்று பொதுமக்கள் கண்ணில் படாத சோதனைக் கூடங்களில் நடைபெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;==========&lt;br /&gt;&lt;br /&gt;1. Airport என்ற கதையைத் தழுவி தமிழில் பயணிகள் கவனிக்கவும் என்று பாலகுமாரன் ஒரு நாவல் எழுதியிருந்தார். ஆனந்த விகடனில் தொடராக வெளி வந்து அதன் பிறகு புத்தகமாகவும் பதிப்பிடப்பட்டது.&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;விமான கண்காணிப்பு கோபுரம், &lt;/li&gt;&lt;li&gt;கடமை தவறிய குற்றவுணர்வால் மனநிலை பாதித்த ஊழியர்,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;விமான நிலைய பாதுகாப்பு, விமான சேவை நிறுவனம், விமான நிலைய நிர்வாகம் இவர்களுக்கு இடையேயான இழுபறிகள்&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;இவற்றுக்கு நடுவே காதல், கண்ணீர், சோகம், பதட்டம்&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;என்று கதை பின்னியிருப்பார். தமிழ்க் கதையில் பெரும்பாலான நிகழ்வுகள் சென்னையில் பொருந்தும்படி பாலகுமாரனின் கதை சொல்லும் திறனில் மிளிரும். ஆர்தர் ஹீலியுடன் ஒப்பிடும் போது விபரங்களை விட கதை ஓட்டத்தின் வீதம் அதிகமாக இருக்கிறது. தமிழ்க் கதையில் விபரங்கள் அதிகமாகச் சொன்னால் மக்கள் படிப்பார்களா என்று ஒரு தயக்கம் இருந்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;2. &lt;a href="http://enkathaiulagam.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D"&gt;சூரியன்&lt;/a&gt; என்ற பெயரில் என் கதையுலகம் என்ற பதவில் டி பி ஆர் ஜோசப் எழுதிய தொடர், தென் மாநிலங்களில் இயங்கும் தனியார் வங்கி ஒன்றை மையமாகக் கொண்டு வங்கித் துறை நடைமுறைகளை நிறைய பேசியது. 200 இடுகைகளாக வெளியிடப்பட்ட இந்தத் தொடரின் அடுத்த பாகங்கள் இனிமேல் வெளிவரும் என்று எதிர்பார்ப்போம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36234289-902619968625267811?l=bookimpact.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookimpact.blogspot.com/feeds/902619968625267811/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36234289&amp;postID=902619968625267811' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/902619968625267811'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/902619968625267811'/><link rel='alternate' type='text/html' href='http://bookimpact.blogspot.com/2010/07/blog-post_07.html' title='ஆர்தர் ஹீலி'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36234289.post-9141247624397082841</id><published>2010-07-02T09:36:00.002+05:30</published><updated>2010-07-02T09:45:38.079+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><title type='text'>மின்சாரக் கனவு</title><content type='html'>முன்னாள் முதலாளிக்குப் போட்டியாக எதிரிலேயே தொழிற்சாலை ஆரம்பித்தவர், முதலாளியின் பெண்ணுக்கும், முன்னாள் மேலாளர் மகனுக்கும் சின்ன வயதிலிருந்தே கொஞ்சம் பகைப் புயல் என்று ஆரம்பித்து, பிரியா என்ற முதலாளி மகள் கிருத்துவ கன்னியர் மடத்தில் படித்து வளர்ந்து விட, மேலாளரின் மகன் அமெரிக்க ஹார்வர்டில் படித்து விட்டுத் திரும்பி வருகிறான்.&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;போட்டி போடும் மேலாளராக எஸ்பி பாலசுப்பிரமணியன். தெற்கத்தி புதுப் பணக்கார தொழிலதிபர் வேடத்தில் கச்சிதமாக பொருந்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;பிரியாவாக காஜோல். தில் வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே பார்த்ததிலிருந்தே அவரது அழகுக்கு அடிமையாகி இருந்தேன். மின்சாரக் கனவு அதற்கு முன்பு பார்த்ததா என்று நினைவில்லை. இதுவும் இந்தப் பாத்திரத்துக்கு என்றே வளர்ந்து நடிகையானது போன்ற முக அமைப்பு, உடல் மொழி. தென் தமிழகத்தின் கிருத்துவ இளம் பெண்ணாக வாழ்ந்து காட்டுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;ராபர்ட்டாக அரவிந்த் சாமி. அமுல் பேபி, அமெரிக்கன் ரிட்டர்ன், பெண்களுடன் கலாய்த்தல், பிரியாவிடம் காதலைச் சொல்லாமல் சொதப்புதல் என்று ஒரு இளைஞனின் பாத்திரத்தைக் குறைவில்லாமல் செய்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;பிரியாவின் அப்பா கிரிஷ் கர்னாட். அவரும், கன்னியர் மடத்தின் தலைமைத் தாயும், பிரியா வீட்டு பணியாளராக வருபவரும் தத்தமது பாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;படத்தின் ஹீரோ யார் என்று கேட்டால் கொஞ்சம் குழப்பம் வரும். காஜோல் கதாநாயகி என்றால் கதாநாயகன் ரகுமானின் இசைதான். பாடல்களும் பின்னணி இசையும் மனதை என்னவோ செய்கின்றன. இன்னொரு முக்கிய பாத்திரம் ஒளிப்பதிவு.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;இவை எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து வெற்றிச் சித்திரமாக்கிய இயக்குனர் ராஜீவ் மேனன் கலைத்தாய்க்கு கொடுத்த ஒரு மகுடக் கல் இந்தத் திரைப்படம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி படம் ஆரம்பித்து&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;அரவிந்த் சாமி காதலைச் சொல்ல முடியாமல் அல்லாட,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;அவரது தந்தை  பழைய முதலாளி மகளை மகன் மணந்து கொண்டால் இரண்டு தொழிற்சாலைகளையும் இணைத்து விடலாம் என்று கணக்குப் போட, &lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;பிரியாவின் தந்தை தனது பரம்பரை மேட்டிமைத்தனத்தை முன்னாள் மேலாளரின் முகத்தில் எறிய,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;பிரியா கடவுளின் சேவையில் தன்னை அர்ப்பணித்து விடுவதாக சொல்ல,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;தலைமைத் தாய் கொஞ்ச நாள் வாழ்ந்து பார்த்து விட்டு இறுதி முடிவு எடுக்கும்படி அனுப்புகிறார்.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;மாரடைப்பு வந்து விட்டதாக நடித்து பிரியாவை நிறுவனப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வைக்கிறார் கிரீஷ் கனார்டு.&lt;br /&gt;&lt;br /&gt;வாடிக்கையாளரின் - அதுவும் காவல் துறை தலைமை அதிகாரியின் மனைவியின் - தலை முடியை தவறுதலாக வெட்டிப் போட்டு விட்ட சக பணியாள தோழிக்கு உதவியாக அந்த வாடிக்கையாளரின் முகம் இளமையாகும்படி தலை முடியை சீர் படுத்தி அவரை மகிழ்ச்சியின் உச்சத்தில் அனுப்பி வைக்கிறார் பிரபுதேவா. படத்திலும் பெயர் தேவாதான். அவரது நண்பர் பட்டாளமாக கண் தெரியாத நாசர் இசையமைப்பாளர் ஆகும் கனவுகளில், இன்னும் நான்கு இளைஞர், பையன்கள் பட்டாளம்.&lt;br /&gt;&lt;br /&gt;கைப்பிடிக்கப் போகும் கணவனிடம் சண்டை போட்டுக் கொண்டு கல்யாண வீட்டிலிருந்து ஓடிப் போய் உயரமான கட்டிடத்தில் தற்கொலை செய்ய ஏறி நிற்கும் அதே அழகு நிலையத் தோழியை மெதுவாக பேசிப் பேசி அவள் மனதைத் திருப்பி இறங்க வைக்கிறார். 'பெண்கள் மனதைத் தெரிஞ்சவன்' என்று சான்றிதழ் கொடுக்கப்படுவதைக் கேட்டு அரவிந்த் சாமி காஜோலின் மனதைத் திருப்ப இவரை உதவிக்கு அழைக்கிறார். நட்புக்காக செய்றேன் பாஸ் என்று களத்தில் இறங்குகிறார் பிரபு தேவா.&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டுப்பாடி காஜோலை வர்ணித்து ஆடும் போது 'அவரது மூக்கு கொஞ்சம் பெரிதாக இருக்கிறது' என்று சொல்லி விடுகிறார் தேவா. அது மனதைத் தைத்து விட, அவருடன் பாட்டாலேயே சண்டை போட ஆரம்பிக்கும் போது காஜோலின் மனதின் கதவு திறக்க ஆரம்பிக்கிறது. அடுத்தடுத்த நிகழ்வுகளில் அரவிந்த் சாமிக்காக தேவா முயற்சிகள் செய்து கொண்டிருக்க காஜோல் மெல்ல மெல்ல தேவாவை நேசிக்க ஆரம்பிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அரவிந்த் சாமியின் தயாள குணத்தைக் காட்ட நள்ளிரவில் அவர் உடை தானம் செய்யும் இடத்துக்கு காஜோலை வரச் சொன்ன தேவா வெண்ணிலவே வெண்ணிலவே என்று பாட ஆரம்பிக்க காஜோலின் காதல் வெளிப்படுகிறது. அதை உணர்ந்து திகைக்கும் தேவாவுக்கும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. இருந்தும், தனக்கும் அவளுக்கும் பொருத்தமில்லை என்பதை உணர்ந்து அரவிந்த் சாமி பக்கமாக அவள் மனதைத் திருப்புவதுதான் தனது கடமை என்று முடிவு செய்கிறார். ஆனால் காஜோலைப் பார்க்கும் போது காதலின் தாக்கம் எதுவும் செய்ய முடியாமல் போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியில் கொஞ்சம் நாடகத்தனமான இறுதிக் காட்சிகளுக்குப் பிறகு தேவாவும் பிரியாவும் திருமணம் செய்து கொள்கிறார்கள், அரவிந்த் சாமி மதபோதகர் ஆகி விடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடல்களும், காட்சிகளும், நடிகர்களும் மனதைக் கட்டிப் போட்டு விட்ட திரைப்படம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36234289-9141247624397082841?l=bookimpact.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookimpact.blogspot.com/feeds/9141247624397082841/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36234289&amp;postID=9141247624397082841' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/9141247624397082841'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/9141247624397082841'/><link rel='alternate' type='text/html' href='http://bookimpact.blogspot.com/2010/07/blog-post.html' title='மின்சாரக் கனவு'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36234289.post-4953287635090100080</id><published>2010-03-16T06:39:00.002+05:30</published><updated>2010-03-16T06:47:39.710+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமெரிக்கன்'/><title type='text'>The Fountainhead - 3</title><content type='html'>நான் முதன் முதலில் The Fountainhead பற்றி கேள்விப் பட்டது கல்லூரியில் படிக்கும் போது. ஏதேதோ பேசிக் கொணடிருக்கும் போது, எனக்கு எந்த மாதிரி புத்தகங்கள் பிடிக்கும், அவர்கள் படிக்கும் புத்தகங்கள் பற்றிய என்னுடைய கருத்து என்றெல்லாம் கேட்டு விட்டு, திடீரென்று,&lt;br /&gt;&lt;br /&gt;'இவனுக்கு ரோர்க்தான் பிடிக்கும். Fountainhead மாதிரியான நாவல்கள்தான் இவனுக்கு சரிப்படும்' என்று கொஞ்சம் இளக்காரமும் எள்ளலும் கலந்த தொனியில் சொன்னார் ஒருவர்.  அப்போது சென்னை அமெரிக்க நூலகத்தில் உறுப்பினராக இருந்தேன். அங்குதான் Fountaihead எடுத்து முதலில் படித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நாவலின் பெரும்பகுதி புரியவேயில்லை. பீட்டர் கீட்டிங் வரும் பகுதிகளுடன் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. ரோர்க் என்று ஒருவன் கதையில் உலாவுவதே ஏதோ கிளைப்பாத்திரமாகத்தான் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;என் வாழ்க்கையிலும், ஏன் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இரண்டு இழைகள் இருக்கின்றன. Fountainheadன் வெற்றிக்குக் காரணம், இந்த இரண்டு இழைகளின் இரு துருவங்களின் வடிவமாக ரோர்க்கையும் பீட்டர் கீட்டிங்கையும் காண்பித்து அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று காட்டியதுதான். நமது இரண்டு இழைகளுடன் அவர்களை அழகாக பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கதையில் எல்லா பாத்திரங்களுமே ஒரு துருவத்தில்தான் நின்று கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;எல்ஸ்வர்த் டூஹி போன்று எல்லாம் புரிந்து எல்லாம் தெரிந்து சக மனிதர்களின் பலவீனங்களை வளர்ப்பதன் மூலம் தனது அதிகாரத்தைப் பெருக்கிக் கொள்ளும் அரசியல்வாதி&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;கேல் வைனான்ட் போன்று எல்லாம் புரிந்து, எல்லாம் தெரிந்து ஆனால் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்தி சக மனிதர்களின் பலவீனங்களுக்கு இரை போட்டு பணம் சம்பாதித்துக் கொள்ளும் வியாபாரி&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;டொமினிக் ஃபிராங்கன் போன்று எல்லாம் தெரிந்து எல்லாம் புரிந்து ஆனால் எல்லாவற்றையும் வெறுத்து சகமனிதர்களின் பலவீனங்களை மூர்க்கமாக வெளிப்படுத்தும் பெண். &lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;பீட்டர் கீட்டிங் போன்று சக மனிதர்களை நம்பி, அவர்களின் கருத்துக்களுக்காகவே தனது வாழ்க்கையை செலுத்துக் கொள்ளும் தன்னம்பிக்கை ஒழித்த அப்பாவி&lt;/li&gt;&lt;li&gt;ஹோவார்ட் ரோர்க் போன்று சக மனிதர்களை முற்றிலும் பொருட்படுத்தாமல் தனது கோட்பாடுகளுக்காகவே வாழ்க்கையே செலுத்திக் கொள்ளும் தன்னம்பிக்கை நிறைந்த ஆதர்ச மனிதன்&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;ஆல்வா ஸ்காரட்&lt;/li&gt;&lt;li&gt;கீட்டிங் அம்மா&lt;/li&gt;&lt;li&gt;கய் பிராங்கன் இவர்கள் சராசரி மனிதர்களின் உருவகங்கள். &lt;/li&gt;&lt;/ul&gt;முதல் வகை  எல்லாம் தெரிந்தவர்களால் ஆட்டிப் படைக்கப்படுபவர்கள், இரண்டாவது வகை அப்பாவிகளை தமக்கு ஏற்றது போல பயன்படுத்திக் கொள்பவர்கள். மூன்றாவதாக சொன்ன ஆதர்ச மனிதனால் புறக்கணிக்கப்படுபவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு இருக்கும் தேர்வு - பீட்டர் கீட்டிங் போல இருப்பதா அல்லது ஹோவார்டு ரோர்க் போல இருப்பதா என்பதுதான். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு முடிவிலும் நாம் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது, 'நாம் நம்பும், நாம் கடைப்பிடிக்கும் கோட்பாடுகளுக்காக வாழ்வதா, அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள், அடுத்தவர்கள் எப்படி நம்மைப் பார்ப்பார்கள் என்ற கேள்விக்குப் பதிலாக வாழ்வதா'&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது தேர்வு கவர்ச்சியாகப் படுகிறது. சமூக விலங்காக வாழும் மனிதர்களாகிய நமக்கு சக மனிதர்களின் பாராட்டும் அங்கீகாரமும் இலட்சியமாக இருக்கின்றன. ஆனால், அதற்காக வாழ ஆரம்பிக்கும் போது ஒருவரது உண்மையான திறமைகள், எங்கு அவர் உருப்படியாக பங்களிக்க முடியும் என்பவை தொலைந்து போய் மற்றவர்களின் உழைப்பை உறிஞ்சும் ஒட்டுண்ணிகளாக மட்டும் மீந்து விடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பீட்டர் கீட்டிங்கின் நுண்கலை திறமைகள் அவனது அம்மாவின் ஆட்டிப்படைப்பில் புறக்கணிக்கப்பட்டு அவனுக்கு விருப்பமேயில்லாத  கட்டிடக் கலையில் வாழ்க்கையை செலுத்துகிறான். அடுத்தவர்களின் பணிகளை உறிந்து, அடுத்தவர்களின் கருத்துக்களை உருவாக்கி தனது வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்கிறான். ஏற்றி விடும் சமூக கருத்துப் போக்கு எதிர் திசையில் இறக்கி விடுவதற்கு அதிக நேரம் ஆவதில்லை. பொதுமக்களில் கருத்து திரும்பி தனது புகழ் மங்கும் போது தனது தனிமையை, தன்னைத் தானே எதிர் கொள்ள முடியாமல் மகிழ்ச்சி இழக்கிறான். புகழ் அலையில் மிதக்கும் போது கூட, தனித்திருக்கும் நேரங்களில் தன்னைப் பற்றிய உண்மைகளை எதிர் கொள்ள முடிவதில்லை. அப்படித் தனித்திருக்கும் நேரங்களை முற்றிலும் தவிர்த்து விடுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹோவார்ட் ரோர்க் பிறந்ததே கட்டிடக் கலைக்குத்தான். அவனது வாழ்க்கையில் வேறு எதையும் அவனால் சிந்திக்கத் தெரியாது. கட்டிக் கலைஞனாக செயல்பட முடியா விட்டால் என்ன செய்வான் என்ற ரோர்க் பற்றிய கேள்விக்கு 'அடுத்தவர்களின் பிணங்களின் மீது நடந்தாவது கட்டிடக் கலைஞனாக வாழ்வான் ரோர்க்' என்று பீட்டர் கீட்டிங் ஒரு கட்டத்தில் சொல்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரியிலிருந்து வெளியேற்றப்படலாம், வேலைக்குச் சேர்ந்தால் நல்ல சம்பளம் கிடைக்காமல் இருக்கலாம், அவனது படைப்புகளை யாருமே பாராட்டாமல் இருக்கலாம், கட்டிடம் கட்ட வாய்ப்புகள் கிடைக்காமல் கல்லுடைக்கும் கூலித் தொழிலாளியாகக் கூட வேலை பார்க்கலாம், உலகமே எதிர்த்து நின்று அவனை இகழலாம். எதுவுமே ஒரு குறிப்பிட்ட புள்ளி வரைதான் அவனை பாதிக்கும். அதற்கு மேல் எதுவுமே தொட்டு விட முடியாது. அந்த சுயத்துக்கு அவன் மட்டுமே அதிகாரி. அவனது இருப்பு, அவனது படைப்புத் திறமை இந்த இரண்டும்தான் அங்கு செல்லுபடியாகும். யார் என்ன நினைக்கிறார்கள், மற்றவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதற்கும் அந்த சுயத்துக்கும் எந்த சார்பும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சுயத்துக்காக வாழும் ரோர்க், அதே போன்று உறுதியான சுயம் கொண்ட சக மனிதர்களுடன் கூட்டு சேர முடியும். இரண்டு தரப்புமே தமது சுயத்துக்காக உன்னத நிலையை அடைந்து அந்த உயரத்திலிருந்து அதே உயரத்திலிருக்கும் சக மனிதர்களுடன் பரிமாற்றம் செய்து கொள்கிறார்கள். இங்கு ஒருவருக்கொருவர் முதுகு சொறிதலோ, பெரிய பெரிய முழக்கங்களோ இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;'நீ சிறந்த கட்டிட வடிவமைப்பாளன், நான் சிறந்த எழுத்தாளன். என்னுடைய வீட்டுக்கு நீ வடிவம் கொடு. நான் சம்பாதித்த பணத்தை உனக்கு நான் தருகிறேன்'&lt;br /&gt;'நீ சிறந்த சிற்பி. நான் சிறந்த கட்டிட வடிவமைப்பாளன். என்னுடைய கட்டிடத்துக்கு நீ சிலை வடித்துக் கொடு, நான் சம்பாதித்த பணத்தை உனக்கு நான் தருகிறேன்'&lt;br /&gt;&lt;br /&gt;'நான் சிறந்த வியாபாரி, என்னுடைய விற்பனைக்கு நீ பொருள் உற்பத்தி செய்து கொடு. நான் சம்பாதிக்கும் பணத்தை உனக்கு நான் தருகிறேன்.'&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி இயங்கும் மனிதர்கள்தான் இந்த உலகத்தின் உந்து சக்திகள். ஹோவார்டு ரோர்க்,  ஆஸ்டன் ஹெல்லர், ரோஜர் என்ரைட், கென்ட் லான்சிங், ஸ்டீவன் மல்லோரி,  மைக் ஓ டொன்னல் இவர்களெல்லாம் இந்த ஆதர்சத்தின் வடிவங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்ஸ்வொர்த் டூஹி அந்த ஆதர்சங்களை அழித்து எல்லோரையும், சக மனிதர்களை சார்ந்து கூட்டத்துக்கு கோவிந்தா போடும் இரண்டாம் தர மனிதர்களாக மாற்ற முயற்சிக்கிறார், அப்போதுதான் அவர்கள் அவரது ஆளுமையை ஏற்றுக் கொள்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;டொமினிக் பிராங்கன், இந்த ஆதர்சங்களை மதிக்காத உலகை வெறுத்து இரண்டாம் தர மனிதர்களைப் பற்றிய உண்மைகளை அவர்கள் முன்பே போட்டு உடைத்து நிறைவு காண்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கேல் வைனான்ட். இந்த ஆதர்சங்களை உடைத்து, இரண்டாம் தர மனிதர்களின் மனப்பசிகளுக்கு இரை போட்டு பணம் சம்பாதித்துக் கொள்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மனித வாழ்க்கை என்பது  சுயத்தின் அடிப்படையில்தான் இருக்க வேண்டும். சுயத்தைப் புறக்கணித்து அடுத்தவர்களுக்காக வாழும் வாழ முயற்சிக்கும் யாருமே உண்மையான மகிழ்ச்சியைக் காண முடியாது. அடுத்தவர் புகழும் போது மலரும் மனம், அடுத்த நிமிடமே அவர்கள் இகழ ஆரம்பித்தால் சுருங்கி விடும். தன்னைத் தானே எதிர் கொள்ள முடியாமல், ஓடிக் கொண்டே இருந்து விட்டு ஒரு கட்டத்தில் அடுத்தவர்களின் அபிமானங்களை தக்க வைத்துக் கொள்ளத் தெரியாமல் தனிமையை சந்திக்க நேரும் போது அவலமான மகிழ்ச்சியற்ற இருப்புக்குத் தள்ளப்பட்டு விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுயத்தை மட்டுமே உந்துசக்தியாகக் கொண்டு வாழ்பவர்களின் மனநிறைவும் மகிழ்ச்சியும் சார்பற்றவை. உயிரோடு இருப்பது வரை, உயிரோடு இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவர்களால் மகிழ்ச்சியாக நிறைவாக இருக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதர்ச மனிதர்கள் சமூக விரோதிகளா? சக மனிதர்கள் அவர்களுக்குத் தேவையே இல்லையா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;சுயத்தை மையமாகக் கொண்டு வாழ்வது மனிதனின் இயற்கை. அந்த இயற்கையை விட்டு விலகாதவர்கள்தான் உலகத்தை செலுத்துகிறார்கள். அடுத்தவர் கருத்துக்களுக்கு அடிமையாக வாழும் பெரும்பான்மையினருக்கு மத்தியில் குறிப்பிடக் கூடிய அளவில் ஒரு சிறுபகுதியினர் இருப்பதால்தான் உலகம் இயங்குகிறது. அந்த சிறுபகுதியினர் ஒருவரை ஒருவர் நாடி தத்தமது திறமைகளின் வெளிப்பாடுகளை பரிமாறிக் கொள்வது மனித இயற்கையின் இன்னொரு கூறு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கோட்பாடுகளின் வெளிப்பாடு The Fountainhead. இந்த சிறுபகுதியினரின் உழைப்பில், முன்முனைப்பில் இயங்கிக்கொண்டிருக்கும் உலகத்தில் அவர்களின் உழைப்பை உறிந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு நன்றியுணர்வு கூட இருக்காது. எல்லோருமே சுயம் சார்ந்து தத்தமது ஆக்க சக்தியை வெளிப்படுத்தி வாழும் சமூகம் எப்படி இருக்கும்? ஒட்டுண்ணிகளுக்கு இரத்தம் கொடுத்து கொடுத்து களைத்துப் போகாமல் சமூகம் முழுவதும் சுயநிறைவு பெற்ற மனிதர்களாக இருந்தால்  வாழ்க்கை எப்படி இருக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி உலகைத் தாங்கும் உழைப்பாளிகள் எல்லோரையும் ஒரு பள்ளத்தாக்குக்கு வர வைத்து தனி உலகம் படைக்கிறான் John Galt. அயன் ராண்டின் Atlas Shrugged நாவலில், அவரது ஆதர்ச மனிதர்கள் எல்லோரையும் ஒவ்வொருவராக சந்தித்து அவர்களது உழைப்பையும் படைப்பையும் எடுத்துக் கொண்டு பதிலுக்கு எதுவுமே கொடுக்காத உலகை துறந்து புதிய உலகத்துக்கு வரவேற்கிறார்கள் அவர்களுக்கு முன்பு அந்த பள்ளத்தாக்குக்கு போனவர்கள். ஒன்றன் பின் ஒன்றாக உலகைச் செலுத்தும் இயந்திரங்கள் இயக்கத்தை நிறுத்தி விட, பெரும்பான்மை ஒட்டுண்ணிகளின் வாழ்க்கை தூக்கிப் பிடிக்க ஆளில்லாமல் சிதற ஆரம்பிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பீட்டர் கீட்டிங் தருணங்கள், ஹோவார்டு ரோர்க் தருணங்கள் இரண்டுமே நமக்கு நிகழ்கின்றன. அதில் எதைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பது நமது மன நிறைவையும் மகிழ்ச்சியையும் தீர்மானிக்கின்றது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36234289-4953287635090100080?l=bookimpact.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookimpact.blogspot.com/feeds/4953287635090100080/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36234289&amp;postID=4953287635090100080' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/4953287635090100080'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/4953287635090100080'/><link rel='alternate' type='text/html' href='http://bookimpact.blogspot.com/2010/03/fountainhead-3.html' title='The Fountainhead - 3'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36234289.post-5340951234911787606</id><published>2010-03-13T08:57:00.000+05:30</published><updated>2010-03-13T08:58:10.641+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமெரிக்கன்'/><title type='text'>The Fountain Head - 2</title><content type='html'>டொமினிக் பிராங்கன் இந்த உலகில் வாழும் மனிதர்களை தீவிரமாக வெறுக்கிறாள். உயர் தரமான ஆற்றலை புறக்கணித்து, உண்மையான உருவாக்கத்தை போற்றத் தெரியாமல் ஒருவொருக்கொருவர் முதுகு சொறிந்து கொண்டு தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி மாடி அழியும் மனிதக் கூட்டத்தின் மீது கோபம். தினசரி வாழ்க்கையில் அலட்சியமும் அவளை அணுகுபவர்களை நோகடித்து துரத்தி விடும் சுட்டு விடும் உண்மைகள் பேசும் கடுஞ்சொற்களுமாக தன்னைச் சுற்றி ஒரு நெருப்பு வளையம் அமைத்துக்க கொண்டிருக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய நெருப்பு மழை பொழிந்து இந்த உலகில் இருக்கும் எல்லா மனிதர்களும் ஒரு மணி நேரத்தில் அழிந்து போய் விட்டால்தான் அவளது மனம் நிம்மதி அடையும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிராங்கன் தனது மகளுடன் உறவே இல்லாமல் இருக்கிறார். அவள் குழந்தையாக இருக்கும் போதே அவரும் அவள் தாயும் பிரிந்து விட்டிருந்தார்கள். அதன் பிறகு மகளுடன் எந்த ஒட்டுதலும் இல்லாமல் போய் விடுகிறது. படிப்பதற்காக போய்ச் சேரும் கல்வி விடுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு இடம் மாற்றி மாற்றி அவள் வளர்ந்திருந்தாள். தற்போது நியூயார்க் பேனர் என்ற தினசரி பத்திரிகையில் இல்ல அலங்கரிப்புகளைப் பற்றி எழுதும் பத்தி எழுத்தாளராக வேலை செய்கிறாள் டொமினிக்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் அம்மா வழியாகவும் பெருவாரியான சொத்துக்கள் அவளை சேர்ந்திருந்தன. அப்பாவிடமும் குவிந்திருக்கும் பணத்துக்கு அவள் வாழ்நாள் முழுவதும் சுட்டு விரலைக் கூட உயர்த்தாமல் வாழலாம். அவளுடன் நட்பு கொள்ள பலர் துடித்துக் கொண்டிருந்தார்கள். அவளுக்குத்தான் எல்லாவற்றின் மீதும் வெறுப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;நிறுவனத்தின் பங்குதாரராக வேண்டுமானால் பிராங்கனின் மகளிடம் நட்பு கொண்டு அவளையே மனைவியாகவும் ஆக்கிக் கொள்வது உதவியாக இருக்கும் என்று பீட்டரின் அம்மா அறிவுரை சொல்கிறார். எல்லாவற்றையும் வெற்றி கொள்ள வேண்டும் என்று ஓடிக் கொண்டிருக்கும் பீட்டருக்கும் அவளை சந்தித்து நட்பு கொள்ள வேண்டும் என்று ஆர்வம் ஏற்படுகிறது. பிராங்கன் ஏதேதோ சொல்லி மழுப்பி அவனை மகளுக்கு அறிமுகம் செய்து வைக்காமலே நாட்களை கடத்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றவர்களுக்கு மத்தியில் ரோர்க்கிடம் அதிகாரம் காட்டி வேலை வாங்குவதில் பீட்டருக்கு தனி நிறைவு. ரோர்க் எந்த மறுப்பும் காட்டாமல், தனக்கு இடப்பட்ட பணிகளை எல்லாம் செய்கிறான். அவ்வப்போது ஏதாவது வடிவமைப்பில் உதவி தேவைப்படும் போது மட்டும் மூன்றாம் நபருக்குத் தெரியாமல் தனியாக தனது அறைக்கு அழைத்து தனது வரைபடங்களை சரிபார்க்கச் சொல்கிறான். ரோர்க்கும் தூக்கம் துறந்து அந்த வரைபடங்களை மேம்படுத்த முயற்சிக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டிடங்கள் கட்டும் இடங்களுக்கு மேற்பார்வைக்கு அனுப்பப்படும் நாட்களை ரோர்க் உற்சாகமாக எதிர் நோக்குகிறான். அவன் கையாள முடியாத கட்டிடது துறை கருவிகள் எதுவுமே கிடையாது. பொதுவாக வெள்ளைச் சட்டை போட்டவர்களை மதிக்காத திறமை வாய்ந்த தொழிலாளர்களும் ரோர்க்கை மதிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பீட்டர் ஒரு வேலை நிமித்தமாக வெளியூர் போயிருக்கும் போது, பிராங்கன் ரோர்க்கை அழைத்து பணி ஒன்றை தருகிறார். ஒரு வாடிக்கையாளருக்கு கொடுத்த வடிவமைப்பு படங்களை எல்லாம் அவர் நிராகரித்து விட்டார். கேமரூனின் தேனா கட்டிடத்தைப் போல தனக்கும் வேண்டும் என்று கேட்கிறார். ரோர்க் கேமரூனிடம் வேலை செய்த அனுபவம் இருப்பதால், முதல் நிலை வரைபடங்களை ரோர்க் வரைந்து கொடுத்தால் அதற்கு மேல் அலங்காரங்களை தான் சேர்த்துக் கொள்வதாக சொல்கிறார். புதிதாக சேர்ந்த ரோர்க்குக்கு ஒரு பெரிய வாய்ப்பை அளிப்பதாக பெருந்தன்மை.&lt;br /&gt;&lt;br /&gt;தான் வடிவமைக்கும் படைப்புகளை வேறு யாரும் கை வைக்கக் கூடாது. தான் உருவாக்கிய அதே இறுதி வடிவில் கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்பது ரோர்க்கின் கோட்பாடு. வாடிக்கையாளரே கேமரூனின் அணுகுமுறையை விரும்பி கேட்கும் போது அதை செய்ய தன்னை அனுமதிக்கும்படி கேட்கிறான். வழக்கமாக நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு கட்டித் தரும் ஏமாற்று வேலைகளைப் பற்றி அவன் எதுவும் சொல்ல விரும்பவில்லை. இப்போது ஒரு வாடிக்கையாளரே இப்படி வேண்டும் போது ஏன் அதையும் நாசமாக்க வேண்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;பிராங்கனுக்கு அதிர்ச்சி. காலணாவுக்கு வழியில்லாத இந்த பயல் தனது நிறுவனத்தின் அணுகுமுறைகளைப் பற்றி இப்படியா நினைத்துக் கொண்டிருக்கிறான். ஏதோ போனால் போகிறது என்று ஒரு வாய்ப்பு கொடுக்க நினைத்தால் ஏதேதோ பேசுகிறான். இப்படி ஒரு எதிர்வினை உருவாகும் என்ற உணர்வே இல்லாமல் இருந்த ரோர்க்கை உடனேயே சீட்டு கிழித்து அனுப்பி விடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நகரின் மற்ற கட்டிடத் துறை வடிவமைப்பு அலுவலகங்களுக்கு படை எடுத்து வேலை கேட்கிறான் ரோர்க். பெரும்பாலானோர் நிராகரித்து விடுகிறார்கள்.  எதிர்பார்த்ததற்கு மாறாக அவனை உற்சாகமாக வரவேற்று வேலைக்குச் சேர்த்துக் கொள்கிறார் எரிக் ஸ்னைட். அவரது பாணி, நான்கைந்து வரைவாளர்களை வைத்துக் கொண்டு, ஒவ்வொருவரையும் ஒவ்வொரு பாணியில் வடிவமைக்க வைத்து, எல்லாவற்றையும் கலந்து இறுதி வடிவமைப்பு ஏற்படுத்துவது. கேமரூன் பாணிக்கு ஆள் கிடைத்ததும் நான்குடன் ஐந்தாக ரோர்க்கை வேலைக்கு வைத்துக் கொள்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வயிற்றுப் பாட்டுக்காக தான் வரையும் படம் என்ன ஆகப் போகிறது என்ற எண்ணத்தை மூட்டை வைத்து விட்டு பணியில் ஈடுபடுகிறான் ரோர்க்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்டன் ஹெல்லர் என்ற எழுத்தாளர் தனது வீடு கட்ட ஒரு பொருத்தமான கட்டிக் கலைஞரை தேடிக் கொண்டிருக்கிறார், பல நிறுவனங்களை அணுகி அவர்களது வடிவமைப்புகளில் எல்லாம் நிறைவடையாமல் நிராகரித்து விடுகிறார். எரிக் ஸ்னைடுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. எப்படியாவது ஹெல்லர் விரும்பும் வகையில் ஒரு வடிவமைப்பு கொடுத்து விட வேண்டும் என்று தனது வரைவாளர் கூட்டத்தை வீடு கட்ட வாங்கியிருந்த இடத்துக்கு அழைத்து செல்கிறார். ரோர்க் வழக்கம் போல ராப்பகலாக உழைத்து தனது சிறந்த படைப்பை வடிவமைப்பாக கொடுக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து வரைபடங்களையும் பிய்த்து பிடுங்கி இறுதி வரைபடம் செய்கிறார் ஸ்னைடு. அதில் பெரும்பகுதி ரோர்க்கின் படைப்பு தெரிகிறது. அதற்கு பொருத்தமே இல்லாமல் அல்ஙகாரங்களையும் கூடுதல் ஒட்டல்களையும் சேர்த்திருக்கிறார், அவ்வளவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்டன் ஹெல்லர் வரைபடத்தைப் பார்த்து குழப்பமடைகிறார். கிட்டத்தட்ட தான் எதிர்பார்த்தது போல இருக்கிறது ஆனால் ஏதோ ஒன்று இடறுகிறது. ரோர்க்கின் ஆதர்ச வாடிக்கையாளர்களில் ஒருவர் ஆஸ்டன் ஹெல்லர். ஸ்னைடு காட்டிக் கொண்டிருக்கும் வரை படத்தில் தேவையற்ற பகுதிகளை பென்சிலால் அடித்து ஹெல்லருக்குக் காட்டுகிறான். ஸ்னைடு கோபத்தில் அவனை வெளியே போகச் சொல்ல, ஹெல்லர் தனது வீடு கட்டும் பணியை ரோர்க்கிடம் தருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ரோர்க் தனது தொழிலை முறையாக தொடங்கி ஒரு அலுவலகமும் திறந்து கொள்கிறான். ஹெல்லரின் வீட்டு பணிகளுக்காக ஆட்களையும் வேலைக்கு அமர்த்திக் கொள்கிறான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36234289-5340951234911787606?l=bookimpact.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookimpact.blogspot.com/feeds/5340951234911787606/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36234289&amp;postID=5340951234911787606' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/5340951234911787606'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/5340951234911787606'/><link rel='alternate' type='text/html' href='http://bookimpact.blogspot.com/2010/03/fountain-head-2.html' title='The Fountain Head - 2'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36234289.post-8317328553406892409</id><published>2010-03-11T06:29:00.002+05:30</published><updated>2010-03-11T06:34:44.471+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமெரிக்கன்'/><title type='text'>The Fountain Head - by Ayn Rand</title><content type='html'>ஹோவார்டு ரோர்க் - அயன் ராண்டின் பிரபலமான படைப்பு. தான், தனது வேலை தனது படைப்புகள். தான் வகுத்த விதிகளின் கீழ் மட்டும்தான் வாழ்வான், அயன் ராண்டின் ஆதர்ச மனிதன்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவின் புகழ் பெற்ற கட்டிடக் கலை கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது கல்லூரியிலிருந்து வெளியேற்றப்படுகிறான். அவனுக்கு குடும்பம், சொந்த பந்தம் என்று யாரும் கிடையாது. நண்பர்கள் என்று சொல்லிக் கொள்ள யாரும் இல்லை. யாரிடமும் எப்போதும் பேசுவது அரிது. அவன் எண்ணமெல்லாம் மனமெல்லாம் கட்டிடங்கள்தான். எப்படி புதிய புதிய கட்டிடங்களை வடிவமைக்கலாம், குறிப்பிட்ட இடத்தில் என்ன மாதிரியான கட்டிடம் கட்டலாம், குறிப்பிட்ட பொருளை எப்படிப் பயன்படுத்தலாம் என்று மட்டும்தான் அவனால் யோசிக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டிங்களை வடிவமைப்பதற்கே பிறந்தவன் அவன். அதற்குத் தேவையான அறிவைப் பெற கட்டிடக் கலை கல்லூரியில் சேர்ந்து கொண்டான். முதல் ஆண்டுகளில் நுட்பங்களை கற்றுக் கொள்வதில் வித்தகனாக இருக்கிறான். கணக்கு, அறிவியல், கட்டிட பொறியியல் என்று எல்லாவற்றிலும் தேர்ச்சி பெறுகிறான். இந்தத் துறை பேராசிரியர்களின் மதிப்பையும் கவனத்தையும் ஈர்க்கிறான். ஆனால்,  தனது கட்டிடங்களை வடிவமைப்பதில் வேறு யாருடைய கருத்துக்களையும் எடுத்துக் கொள்ளத் தயாராக இல்லை. ரோமன் கட்டிடக் கலை, மறுமலர்ச்சிக் கால கட்டிடப் பாணி என்று எதிலிருந்தும் தான் கற்றுக் கொள்ள எதுவுமில்லை. கட்டிடம் கட்டப் போகும் இடம், அப்போது கிடைக்கும் பொருட்களின் தன்மை இவைதான் கட்டிடத்தின் அமைப்பைத் தீர்மானிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வாடிக்கையாளர்கள் கூட பிற்சேர்க்கைதான். ரோர்க் கட்டிடம் வடிவமைப்பதற்கான ஒரு வழி வாடிக்கையாளர்கள். ரோர்க்கை பொறுத்தவரை மிகப் பொருத்தமான கட்டிடம் ஒன்றை வடிவமைத்துத் தருவதுதான் ஒரே நோக்கம். அதனால் வாடிக்கையாளருக்கு என்ன மகிழ்ச்சி கிடைக்கும், என்ன ஆதாயம் கிடைக்கும் என்று ரோர்க் யோசிக்கப் போவதில்லை. இப்படி மிகப் பொருத்தமான கட்டிட வடிவமைப்பை நாடும் வாடிக்கையாளர்கள் ரோர்க்கை தேடி வருவார்கள். தமது கட்டிடம் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான் அவர்களுக்கு. மற்றவர்கள் அதைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று பொருட்படுத்தாதவர்கள் மட்டும்தான் ரோர்க்கின் வாடிக்கையாளர்களாக இருக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;முற்றிலும் தான் சார்ந்த தனிமனிதக் கோட்பாடு.&lt;br /&gt;&lt;br /&gt;படிக்கும் போது ஒரு வீட்டில் தங்கியிருக்கிறான். தனது செலவுகளுக்கு கோடை விடுமுறைகளில் கட்டிடப் பணிகளில் ஈடுபட்டுக் கொள்கிறான். சின்ன வயதிலேயே அப்பா அம்மா இறந்து போயிருக்கிறார்கள். ஒவ்வொரு அடியும் தனது முயற்சியால் எடுத்து நகர்ந்து கொண்டிருக்கிறான். அவன் தங்கியிருக்கும் வீடு கீட்டிங் குடும்பத்தினது. பீட்டர் கீட்டிங், அவனது அம்மா. இள வயதிலேயே கணவனை இழந்த அந்த அம்மா, தனது மகனுக்காகவே வாழ்ந்து அவனை கட்டிடக் கலை படிக்கும் வரை கொண்டு வந்திருக்கிறாள். பீட்டர் இறுதியாண்டு மாணவன்.&lt;br /&gt;&lt;br /&gt;ரோர்க் கல்லூரியை விட்டு வெளியேற்றப் பட்ட நாளில், பீட்டர் பட்டப் படிப்பு முடித்து பட்டமளிக்கும் விழா. நியூயார்க்கின் புகழ்பெற்ற கட்டிட வடிவமைப்பு நிறுவனத்தின் பார்ட்னர் கய் பிராங்கன் வருகை தந்து பட்டம் அளிக்கிறார். பீட்டர்தான் அந்த ஆண்டின் முதல் மாணவன். அதற்கான பரிசு அவனுக்குக் கிடைக்கிறது. அவன் முந்திச் சென்ற இரண்டாவது இடத்து மாணவனைப் பார்த்து பீட்டருக்கு மனம் நிறைகிறது. அவனை தோற்கடித்து விட்டோம் என்ற பெருமிதம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டு தோறும் தலை மாணவனாக தேர்ச்சி பெறுபவருக்கு தனது நிறுவனத்தில் வேலை அளிப்பதாக பிராங்கன் அறிவிக்கிறார். பீட்டருக்கு அந்த வாய்ப்பு வருகிறது, அந்த ஆண்டில். அவனுக்கு பாரிஸ் போய் நுண்கலைகளில் பயிற்சி பெற ஆர்வம். ஆனால், பிராங்கனின் நிறுவன வாய்ப்பை விட்டுக் கொடுக்கவும் மனதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி முதல்வர் ரோர்க்கை அழைத்து தனது வருத்தத்தையும், ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அவனை மீண்டும் சேர்த்துக் கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறுகிறார். இங்கு தான் படிக்க வேண்டியது எல்லாம் படித்தாகி விட்டது. இன்னும் ஒரு ஆண்டு இங்கிருந்து பழைய கட்டிடங்களை, அவற்றின் வடிவமைப்புகள் நகல் செய்து கொண்டிருப்பதில் தனக்கு ஆர்வம் இல்லை. அவனாகவே மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கல்லூரியை விட்டு விலகியிருக்க வேண்டும். அவர்கள் வெளியேற்றும் வரை காத்திருந்ததுதான் தவறு. திரும்பவும் கல்லூரியில் சேரும் எண்ணமே அவனுக்கு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முதல்வருக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் தாங்க முடியவில்லை. பழங்கால கட்டிடக் கலை அமைப்புகளை பற்றிய துறையில் அவற்றைப் பின்பற்றி வடிவமைப்புகளை உருவாக்க மறுத்ததால்தான் ரோர்க்கை வெளியேற்றும்படி நேர்ந்தது. அந்தத் துறை பேராசிரியர்களால் இவனைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று மாலை தான் தங்கியிருக்கும் பீட்டரின் வீட்டு முகப்பில் நின்று கொண்டிருக்கிறான் ரோர்க். பீட்டர் தனது பட்டமளிப்பு விழாவிலிருந்து திரும்புகிறான். வீட்டுக்குள் போய் அம்மாவிடம் பேசும் முன் ரோர்க்கிடம் ஒரு ஆலோசனை கேட்க வேண்டும் பீட்டருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;பாரிசுக்குப் போய் நுண்கலைகள் பயிற்சி பெறலாமா? அதற்கான உதவித் தொகையும் பீட்டருக்குக் கிடைத்திருக்கிறது, அல்லது பிராங்கனின் நிறுவன வாய்ப்பைப் பயன்படுத்தி தொழிலில் நேரடியாக இறங்கி விடலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று ஆண்டுகள் சேர்ந்திருந்த நெருக்கத்தில் ரோர்க் மற்ற யாரையும் விட பீட்டருடன் அதிகமாக பேசுகிறான். கடந்த மூன்று ஆண்டுகளில் கட்டிடக் கலை தொடர்பான படிப்பில் பீட்டருக்கு பல உதவிகளை செய்திருக்கிறான். இப்போது, இந்த கேள்விக்கு பதில் சொல்ல முயற்சிக்கிறான். பாரிசுக்குப் போனால் இன்னும் கொஞ்சம் கற்றுக் கொள்ளலாம். பிராங்கனின் அலுவலகத்தில் சேர்ந்தால் அத்தோடு பீட்டர் அதோ கதிதான் என்பது ரோர்க்கின் கருத்து. அதைப் பற்றி பேச ஓரிரு நிமிடங்கள் கூட ஆகும் முன்பு உள்ளிருந்து பீட்டரின் அம்மா வெளியில் வருகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;தன் மகன் என்னவாக ஆக வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்று உறுதியான திட்டங்கள் வைத்திருப்பவர் அந்த அம்மா. பீட்டர் அமெரிக்காவின் தலை சிறந்த கட்டிட கலைஞரான திகழ்வான் என்று ரோர்க்கிடம் பிற்பகலில் திட்டவட்டமாக கூறியிருந்தாள். மகனுக்கு வேறு ஆசைகள், விருப்பங்கள் இருப்பதை எல்லாம் தட்டி நிமிர்த்தி தனது விருப்பப்படி அவனை நடக்க வைக்கும் திறமையும் அவரிடம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னிச்சையாக விட்டிருந்தால் பாரிசுக்குப் போயிருக்கக் கூடிய பீட்டரை பிராங்கனின் நிறுவனத்தில் சேரும்படி முடிவெடுக்க வைக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;'நான் சொல்வதை எல்லாம் நீ ஏன் கேட்கப் போகிறாய். நான் ஒரு கிழட்டு அம்மாதானே. உனக்காக எவ்வளவு சிரமப்பட்டு வளர்த்து கல்லூரிக்கு அனுப்பி இந்த நிலைக்குக் கொண்டு வந்தாலும், நான் எதுவும் உனது வாழ்க்கையில் தலையிடவா முடியும்! என்ன இந்த வயசில் என்னை விட்டுப் பிரிந்து பிரான்சு போவாய். உனது இடத்தில் இரண்டாவதாக வந்த மாணவன் பிராங்கனின் நிறுவனத்தில் சேருவான். எல்லோரும் பீட்டரைப் பற்றி மறந்து விடுவார்கள். உங்கள் வகுப்பில் இரண்டாம் இடத்து மாணவன் பேர்தான் தலையெடுக்கும்'&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி சில நிமிட தேர்ந்த கையாளலில் மகனை முடிவெடுக்க வைத்து விடுகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பீட்டர் நியூயார்க்குக்கு வந்து பிராங்கனின் நிறுவனத்தில் சேரும் அதே நேரத்தில் ரோர்க்கும் நியூயார்க் வந்து காமரூன் என்ற கட்டிடக் கலை வல்லுனரிடம் வேலைக்குச் சேருகிறான். ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த காமரூனை இப்போது யாரும் சீண்டுவதே இல்லை. நியூயார்க்கின் வான் முட்டும் கட்டிடங்களுக்கான முன்னோடி இந்த காமரூன். பிராங்கன் கூட ஒரு காலத்தில் இவரிடம் வரைவாளராக வேலை பார்த்தவர்தான். அடுத்தவர்களை எப்படி கையாளுவது என்று தெரிந்திராத காமரூன் சில ஆண்டுகள் உச்சத்தில் இருந்து விட்டு துறையின் ஒரு விளிம்பில நாட்களைத் தள்ளிக் கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது அலுவலகத்தில் ரோர்க் வந்து வரைவாளராக வேலை கேட்கிறான். 'இங்கு வேலை ஏதும் இல்லை, வேறு யாரும் உன்னைச் சேர்த்துக் கொள்ளவில்லை என்று என்னிடம் வந்தாயா' என்று திட்டி விட்டு, ரோர்க்கின் வரைபடங்களை பார்த்ததும் அவனை சேர்த்துக் கொள்கிறார். இவ்வளவு நல்ல எண்ணங்களை ஏன் இப்படி கெடுத்து வைத்திருக்கிறாய் என்று செல்லமாக திட்டுகிறார். அவற்றை மேம்படுத்தத்தான் காமரூனிடம் கற்றுக் கொள்ள வந்திருப்பதாக ரோர்க் சொல்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;காமரூனுக்கு எதுவும் வேலைகள் அதிகமாக இல்லை. ஏதாவது மூன்றாம்தர, நான்காம் தர கட்டிட வேலைகள் வருகின்றன. பெரிய பெரிய கட்டிடங்களை எல்லாம் இவர் பக்கம் பார்த்து பல ஆண்டுகள் ஆகி விட்டிருக்கின்றன. அப்படியே ஓய்வு பெற்று கடைசி நாட்களை தள்ளும் நிலைக்கு நகர்ந்து கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிராங்கன் /ஹேயர் நிறுவனம் நியூயார்க்கின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று. பெரிய அலுவலகம், பல வரைவாளர்கள், பெரிய பெரிய கட்டிடப் பணிகள், செல்வத்தில் புரளுகிறார்கள். அங்கு இளநிலை வரைவாளனாக சேருகிறான் பீட்டர். பிராங்கன் வாடிக்கையாளர் பிடிப்பதில் மட்டும் ஈடுபடுகிறார். கட்டிடம் வடிவமைப்பது எல்லாம் மற்றவர் கையில் விட்டு விடுகிறார். இந்தச் சூழலில் உள்ளே வரும் பீட்டர், தனக்கு போட்டியாளராக, தனக்கு மேலே இருப்பவர்களை ஒவ்வொருவராக இடறி விட்டு பிராங்கனின் அபிமானத்தை மட்டும் வைத்துக் கொண்டு வளருகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் ஒரு மூத்த வரைவாளனை அவனது பணிகளை தான் செய்வதாக எடுத்துக் கொள்கிறான். அவனை வேலையில் கவனம் செலுத்தாமல் இருக்க ஊக்குவிக்கிறான். பீட்டரை போல நல்ல நண்பன் உண்டா! வேலை செய்யாமல் இருப்பவனுக்கு சம்பளம் எதற்கு என்று அடுத்த சில மாதங்களில் அவனை நீக்கி விடுகிறார் பிராங்கன். பீட்டர் அந்த இடத்துக்கு வந்து விடுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பாளர். பிராங்கனிடம் நிறைய உறவாடும் பீட்டர், வாடிக்கையாளரை சந்திப்பது, நிறுவனத்துக்கு புதிய திட்டங்களைக் கொண்டு வருவதிலும் பங்கெடுக்கிறான். வீடு ஒன்று கட்ட விரும்பிய ஒரு பணக்கார பெண்மணியிடம் பேசும் போது தலைமை வடிவமைப்பாளரை புகழ்ந்து சொல்கிறான். அவர்தான் பிராங்கன் நிறுவனத்தில் எல்லா வேலைகளையும் செய்கிறார். ஆனால் பேரும் பணமும் பிராங்கனுக்குப் போகிறது. அவருக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் அவரது உண்மையான திறமை வெளியில் தெரிய வரும் என்று விருப்பமில்லாமல் பேசுவது போல சொல்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பெண்மணி வேலையை தலைமை வடிவமைப்பாளருக்கு நேரடியாக கொடுக்கிறார். அவர் தனி நிறுவனம் ஆரம்பித்து போகிறார். 'நான் நினைத்ததை விட மோசமான பொறுக்கி நீ' என்று பீட்டரிடம் சொல்லி விட்டுப் போகிறார் அவர். பீட்டருக்கு அதெல்லாம் பொருட்டே இல்லை. நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பாளராக பதவி உயர்வு பெறுகிறான். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நிறுவனத்தின் ஒரு பங்காளராக சேர்ந்து விடலாம் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். நிறுவனத்தின் இன்னொரு பங்காளர் ஹேயர் பெயரளவில் மட்டும்தான். அடுத்த இலக்கு அவர்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டிட வடிவமைப்பில் தனது உருவாக்கத்தில் நம்பிக்கை இல்லாத பீட்டர் ரோர்க்கிடம் போய் அவனது கருத்துக்களையும் உதவிகளையும் பெற்றுக் கொள்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;ரோர்க் காமரூனின் அலுவலகத்தில் அவருடன் வேலை செய்கிறான். இரண்டு பேருக்கும் இடையில் ஆழ்ந்த நட்பு உருவாகிறது. ஆனால், புதிய வேலைகள் எதுவும் வருவதில்லை. கடைசியாக முயற்சித்த ஒரு வங்கி கட்டிடப் பணிக்கு வரைபடங்களை உருவாக்க இரவு பகலாக வேலை செய்து சமர்ப்பிக்கிறார்கள். அதுவும் தரப்படாமல் போகிறது. காமரூன் தளர்ந்து போகிறார். மாரடைப்பு வந்து தொழிலிலிருந்து ஓய்வு பெற நேர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஆண்டுகளில் ரோர்க் காமரூனின் பயிற்சியின் கீழ் கட்டிட வடிவமைப்பைப் பற்றி தேர்கிறான். 'நான் வேண்டுமானால் சிபாரிசு கடிதம் தருகிறேன். என்னை கண்டு கொள்ளாமல் இருந்தாலும், அந்த நாய்கள் நான் எழுதினால் உன்னை வேலைக்கு சேர்த்துக் கொள்வார்கள்' ரோர்க் அதை மறுத்து விட்டு தானே ஏதாவது தேடிக் கொள்வதாக சொல்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;காமரூன் ஓய்வு பெற்றதைப் பற்றி அறிந்து, ரோர்க்கை பார்க்க வருகிறான் கீட்டிங். பிராங்கனின் நிறுவனத்தில் ரோர்க்கை சேரச் சொல்கிறான். ரோர்க்கும் ஒத்துக் கொள்கிறான். ஏதாவது ஒரு இடத்தில் வேலை பார்க்க வேண்டும். எதுவும் பொருட்டில்லை என்று சொல்கிறான். தனது சாதனைகளை காண்பித்து ரோர்க்கை அடிபணியச் செய்யலாம் என்று வந்த பீட்டருக்கு இப்போதும் தான் நினைத்த மன நிறைவு கிடைக்கவில்லை. கட்டிட வடிவமைப்பு எதையும் செய்ய மாட்டேன். கட்டிடம் கட்டும் இடங்களுக்குப் போவது, அலுவலகத்தில் வரை படங்கள் வரைவது போன்ற பணிகள் மட்டும்தான் செய்வேன் என்ற  நிபந்தனையுடன் ரோர்க் பிராங்கனின் நிறுவனத்தில் பீட்டருக்குக் கீழ் வேலையில் சேர்கிறான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36234289-8317328553406892409?l=bookimpact.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookimpact.blogspot.com/feeds/8317328553406892409/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36234289&amp;postID=8317328553406892409' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/8317328553406892409'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/8317328553406892409'/><link rel='alternate' type='text/html' href='http://bookimpact.blogspot.com/2010/03/fountain-head-by-ayn-rand.html' title='The Fountain Head - by Ayn Rand'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36234289.post-7381246348911177577</id><published>2010-02-20T08:09:00.003+05:30</published><updated>2010-02-20T08:14:21.335+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்கி'/><title type='text'>பொன்னியின் செல்வன் - தியாகத்தின் சிகரம்</title><content type='html'>தமிழில் கதை படிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் எல்லோரும் பேரை எடுத்தாலே உருகிப் போகும் படைப்பு பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வனைப் பற்றிப் புகழ்ந்து புதிதாக எதுவும் சொல்ல புதிய சொற்களைத்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அவ்வளவு பேசவும் எழுதவும் செய்து விட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;1.&lt;br /&gt;'சேந்தன் அமுதன் உண்மையிலேயே தன் வயிற்றில் பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளைதான் என்பதை அறிந்ததும் செம்பியன் மாதேவி ஒரு புறத்தில் எல்லையற்ற ஆனந்தம் அடைந்தார். அவர் உடம்பெல்லாம் சிலிர்த்துப் பூரித்தது. கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் பொழிந்தது. "மகனே!" என்று கூவிச் சேந்தன் அமுதனைக் கட்டித் தழுவிக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. ஆயினும், அந்த ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டார். அந்த உண்மை வெளியானால், அதிலிருந்து ஏற்படக் கூடிய குழப்பங்களை எண்ணி ஒரு புறம் பீதி கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"உலகில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளும் இறைவனுடைய குழந்தைகளே" என்று கருதக் கூடிய உயர் ஞான பரிபக்குவத்தை அவருடைய உள்ளம் அடைந்திருந்தபடியால், பெற்ற பிள்ளையிடம் தாய்க்கு ஏற்படக் கூடிய பாசத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள அவரால் முடிந்தது. "அரண்மனையில் வாழ்ந்தால் என்ன? குடிசையில் வளர்ந்தால் என்ன? இந்த நிலையில்லா மனித வாழ்வின் சுகபோகங்கள் எல்லாம் வெறும் மாயை அல்லவா! உலக வாழ்வை நீத்த பிறகு அடைய வேண்டிய கதி அல்லவோ முக்கியமானது? என் பதி அரச போகங்களை வெறுத்துச் சிவபெருமானுடைய இணையடி நிழலில் திளைத்து வாழ்க்கை நடத்தியபடியால் அவருக்குப் பிறந்த பிள்ளை இவ்விதம் குடிசையில் வாழ்ந்து இறைவனுக்குத் தொண்டு செய்யும் பேறு பெற்றான் போலும்!" என்றெல்லாம் அடிக்கடி எண்ணி மனதை உறுதிப்படுத்திக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;பிறந்ததுமே இறந்து விட்டதாக நினைத்திருந்த தான் பெற்ற மகன் உயிரோடுதான் இருக்கிறான். கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்து வளர்ந்து வருகிறான். தனக்கு மிக அருகிலேயே வசித்து வருகிறான். என்று தெரிந்ததும் ஒரு தாய் எப்படி நடந்து கொண்டார் என்ற மேலே சொன்ன பகுதி தமிழர் நாகரீகத்தின் உயர்நிலைக்கு ஒரு சான்று. வரலாற்றில் நடந்தது எவ்வளவு, கல்கியின் கற்பனையில் சேர்ந்தது எவ்வளவு என்று விவாதித்தாலும், இரண்டுமே இந்த மண்ணில் பிறந்தவர்களின் உள்ளப் போக்குகள்தான்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;2. "தாயே! நான் தங்கள் வயிற்றில் பிறந்த பாக்கியசாலி என்பதைச் சில காலமாக அறிந்திருக்கிறேன். உலகம் போற்றும் புண்ணியவதியான தாங்கள் ஒரு நாள் என்னை 'மகனே!' என்று அழைக்க வேண்டும் என்று தவம் செய்து கொண்டிருந்தேன். தங்களுடைய மகன் என்ற சொல்லுக்குத் தகுதியாவதற்குப் பிரயத்தனம் செய்து வந்தேன். அல்லும் பகலும் சிவபெருமானுடைய திருவடிகளைத் தியானித்துக் கொண்டிருந்தேன். தாங்களே என்னை அழைக்கா விட்டாலும் நானே தங்களிடம் வருவதாகத் தானிருந்தேன். ஆனால், இந்த இராஜ்யத்தின் உரிமை விஷயம் தீரட்டும் என்று காத்திருந்தேன். தங்களை 'அன்னை' என்று அழைக்கும் உரிமையைத்தான் நான் வேண்டினேன். இராஜ்யத்துக்கு உரியவர் யார் என்று நிச்சயமான பிறகு தங்களிடம் வந்து தாய் உரிமை கோர விரும்பினேன்"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;சோழப்பேரரசின் ஆட்சிப் பொறுப்புக்கு தனக்கு உரிமை இருக்கிறது, அதுவும் முதல் உரிமை என்று தெரிந்த ஒரு இளைஞர் பேசும் பேச்சு மேலே. இராஜ்ய உரிமையை எல்லோரும் பேசித் தீர்த்து வேறு யாரிடமாவது ஒப்படைத்த பிறகு வந்து தனது பிறப்பு உறவைத் தேடிக் கொள்ளலாம் என்று இருந்தாராம். இப்படிப் பட்ட மனிதர்கள் வாழ்ந்ததால்தான்  சோழ வளநாடு உலகெங்கும் தன் புகழ் பரப்பி ஒளிர்ந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;3.  "இங்கே ஒருவர் இருக்கிறார். அவர் என்னை விட பிராயத்தில் மூத்தவர். இந்தச் சோழ சாம்ராஜ்யத்துக்கு என்னை விட அதிக உரிமை அவருக்கு நிச்சயமாக இருந்த போதிலும், அவர் அதைக் கோரவில்லை. நான் முடிசூட்டிக் கொண்டு சிங்காதனத்தில் அமர்வதைப் பார்த்து மகிழச் சித்தமாக இங்கு வந்திருக்கிறார். என் உயிரினும் இனியவரான என் நண்பரைக் காப்பாற்றினார். இந்தச் சோழ குலத்துக்கு நேர்வதற்கு இருந்த பெரும் விபத்து நேரிடாமல் தடுத்தார். இப்படிப்பட்ட சிறப்பான காரியம் எதுவும் நான் இதுவரையில் இந்நாட்டுக்குச் செய்தேனில்லை. ஆகையால் இந்த மணிமகுடத்தை மகான் கண்டராதித்தரின் குமாரரும், என் சிறிய தந்தையுமான மதுராந்தகத் தேவரின் தலையில் சூட்டுகிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;அருள்மொழித்தேவரின் இந்த செயலைக் குறித்து கல்கியை விட வேறு யார் சிறப்பாக சொல்லி விட முடியும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அருள்மொழிவர்மன் திருமுடி சூட்டிக் கொள்ள வேண்டுமென்று இராஜ்யத்தின் மக்கள் விரும்பினார்கள். உற்றார் உறவினர் விரும்பினார்கள். அக்காலத்தில் மிக்க வலிமை பெற்றிருந்த சோழப் பெரும்படையின் வீரர்கள் அனைவரும் விரும்பினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாறு எல்லாவித ஆதரவும் அனுகூலங்களும் அருள்மொழிவர்மனுக்கு இருந்தும், அவன் சாம்ராஜ்யத்தை உத்தம சோழனுக்கு அளித்துப் பட்டம் கட்டுவித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;உலக சரித்திரத்திலும், காவிய இதிகாசங்களிலும் இதற்கு ஒப்பான அன்னொரு அரும்பெரும் செயலைக் காணுதல் அரிது.&lt;br /&gt;&lt;br /&gt;அசோக சக்கரவர்த்தி கலிங்கநாட்டுப் போரில் மகத்தான வெற்றி அடைந்த பிறகு, "இனி யுத்தமே வேண்டாம்"  என்று முடிவு செய்ததைத்தான் அருள்மொழிவர்மனின் தியாகத்துக்கு இணையாகக் கூறலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;தமிழக வரலாற்றில் மிகச் சிறந்து ஆட்சி புரிந்து நான்கு திசையிலும் தன் புகழ் பரப்பி மறைந்த இராஜ இராஜ சோழனின் மேன்மைக்குக் காரணம் இதுவல்லவா!&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36234289-7381246348911177577?l=bookimpact.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookimpact.blogspot.com/feeds/7381246348911177577/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36234289&amp;postID=7381246348911177577' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/7381246348911177577'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/7381246348911177577'/><link rel='alternate' type='text/html' href='http://bookimpact.blogspot.com/2010/02/blog-post_20.html' title='பொன்னியின் செல்வன் - தியாகத்தின் சிகரம்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36234289.post-3476389727347461481</id><published>2010-02-17T08:33:00.004+05:30</published><updated>2010-02-17T09:23:17.300+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தழுவல்'/><title type='text'>The Ugly Duckling</title><content type='html'>வாத்து அம்மா அடை காத்து அடை காத்து களைத்து போயிருந்தது. இன்றைக்கு முட்டைகள் எல்லாம் பொரித்து விட வேண்டும். உண்மையிலேயே ஒவ்வொன்றாக பொரிக்க ஆரம்பித்தன. ஒரே ஒரு முட்டை மட்டும் மற்றவற்றை விட கொஞ்சம் பெரிதாக, மஞ்சள் கலந்த வெள்ளையாக இருந்தது. அது மட்டும் இன்னமும் கல்லுக்குண்டாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'இது ஏதோ வான் கோழி முட்டை போல இருக்கிறது' வாத்து அம்மாவைப் பார்க்க வந்திருந்த நெட்டை கழுத்து அக்கா சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;'அப்படி எல்லாம் இல்லை,  கொஞ்சம் பெருசா இருக்கு அவ்வளவுதான். இன்னும் கொஞ்ச நேரம் உட்கார்ந்தா இதிலிருந்தும் அழகான வாத்துக் குஞ்சு வந்து விடும்'  இப்படிச் சொல்லி விட்டு ஒரு பெருமூச்சுடன் இன்னும் அடைப்பாக உட்கார்ந்து கொண்டது. பொறுமைக்கு பலனும் கிடைத்தது. கடைசி முட்டையும் உடைந்து குஞ்சு ஒன்று வெளியில் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'உஃப், இது என்ன இப்படி ஒரு வாத்துக் குஞ்சு.' பெரிதாக, பழுப்படித்த நிறத்தில், அசிங்கமாக இருந்தது. உண்மையிலேயே இது வான் கோழிக் குஞ்சுதானோ!&lt;br /&gt;&lt;br /&gt;'சரி, சரி எல்லோரும் வாங்க! குளத்தில் நீந்தி களத்துக்குப் போகலாம். ரெடி, 1,2,3 எல்லாம் குதிங்க' அம்மா பேசிக் கொண்டே தனது புதிய குடும்பத்தை குளத்துக் கரையிலிருந்து தண்ணீருக்குள் இறக்கியது. அசிங்கமான வாத்துக் குஞ்சும் நன்றாகவே நீந்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;'இவனும் நம்ம வாத்துக் குஞ்சுதான். எவ்வளவு நல்லா நீந்துகிறான். என்ன கொஞ்சம் நாளில், மத்தவங்களைப் போல அழகாக வளர்ந்து விடுவான்.'&lt;br /&gt;&lt;br /&gt;புதிய வாத்துக் குடும்பம் அம்மாவைத் தொடர்ந்து களத்தில் ஏறியது.&lt;br /&gt;&lt;br /&gt;'தண்ணியை நல்லா உதறிக் கொள்ளுங்க. நடக்கும் போது ஒருத்தரை ஒருத்தர் தள்ளாம பதவிசா நடங்க. அதோ அங்கே மூலையில உட்கார்ந்திருக்கே அதுதான் நமக்கெல்லாம் மூத்த வாத்து பாட்டி. போய் வணக்கம் சொல்லிக்கோங்க' அம்மா பேசிக் கொண்டே குஞ்சுகளை வழி நடத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;'இது என்ன புதிய கூட்டம், இருக்கறவங்களுக்கே இடம் போதாது, சாப்பிடவும் தள்ளுமுள்ளா இருக்கு. இதுங்களையும் எப்படி சேர்த்துக்கறது' சில அடாவடி குரல்கள் எழுந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் வாத்துப் பாட்டிக்கு திருப்திதான். 'நல்ல ஆரோக்கியமான வாத்துக் குஞ்சுகள். நல்ல இடமா பார்த்து மேயப் போங்க. ஏதாவது மீன் தலை கிடைச்சா, எனக்குக் கொண்டு தாங்க' என்று ஆசீர்வதித்து விட்டு, 'அந்த பெரிய குஞ்சு மட்டும் ஏன் இவ்வளவு அசிங்கமா இருக்கு!'&lt;br /&gt;&lt;br /&gt;'அவன் கொஞ்சம் கூடுதல் நேரம் முட்டைக்குள் இருந்ததால் பெருசாகி விட்டான். நாள் போக போக மத்தவங்களைப் போல அழகாக வளர்ந்து விடுவான்' என்று அம்மா சமாதானம் சொல்லி விட்டு எல்லா குஞ்சுகளையும் அழைத்துச் சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த புதிய கூட்டத்தைச் சேர்த்துக் கொள்வதில் எல்லோருக்கும் ஒத்த மகிழ்ச்சி இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;'இவனைப் பார், என்ன ஒரு அவலட்சணம். எல்லாவற்றையும் விட அதிகமா சாப்பிடவும் போறான்.' என்று சொல்லிக் கொண்டு அசிங்கமான வாத்துக் குஞ்சின் மீது பாய்ந்து கொத்த ஆரம்பித்தது வாத்து தடியன். அம்மா ஒரு சிலிர்ப்பு சிலிர்த்து தடியனுக்கு ஒரு அடி வைத்து துரத்தி வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'ஆமாமா, மத்தவங்க கூட பரவாயில்லை. இவன் சாப்பிட்டே நம்மை எல்லாம் அழித்து விடுவான்' தடியனின் கூட்டாளிகள் கூக்குரலிட்டன. கோபத்தில் தலையைத் திருப்பிக் கொண்டு போனது அம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக அசிங்கமான வாத்துக் குஞ்சின் வாழ்க்கை ஆரம்பித்தது. களத்து விலங்குகளுக்கு உணவு கொண்டு வரும் சிறுமி கூட, நெல் கொண்டு வந்த கூடையால் அசிங்க வாத்துக் குஞ்சுக்கு ஒரு மொத்து மொத்தினாள் . விவசாயியின் நாய் ஒரே வாயில் விழுங்கி விடுவது போல இளித்துக் கொண்டு துரத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவின் காதில் விழாத போது, வாத்துக் குஞ்சின் சகோதர சகோதரிகள் கூட அதைப் பழித்தன. 'இவனால்தான், நமக்கெல்லாம் கெட்ட பேர். இவன் மட்டும் எங்காவது போய் தொலைந்து விட்டால், எவ்வளவு நல்லா இருக்கும்!'&lt;br /&gt;&lt;br /&gt;அசிங்கமான வாத்துக் குஞ்சும் கண்ணில் நீர் முட்டியது. 'இந்தக் களத்தில் யாருக்குமே எனக்குப் பிடிக்கவில்லை. என் கூடப் பிறந்தவர்கள் கூட என்னை வெறுக்கிறார்கள். நான் வேறு எங்காவது போய் பிழைத்துக் கொள்ள வேண்டியதுதான்.'&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவிடம் கூடச் சொல்லிக் கொள்ளாமல், ஒரு நாள் களத்தின் மேற்குப் பக்கத்தில் இருந்த காட்டுக்குள் ஓடிப் போய் விட்டது அசிங்கமான வாத்துக் குஞ்சு. காட்டில் புதிய செடி கொடிகள், மிருகங்களைப் பார்த்து கண் பூத்துப் போனது. காட்டுக்கு அந்தப் பக்கம் இருந்த குளத்தில் குதித்து ஆனந்தமாக நீந்தியது. அங்கு ஏற்கனவே இருந்த காட்டு வாத்துக் கூட்டம் இந்த அசிங்கமான வாத்துக் குஞ்சைப் பார்த்ததும் ஓடி வந்து கொத்தி விரட்ட ஆரம்பித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருந்து தப்பி ஓடி ஓடி ஒரு புதரருகில் ஒதுங்கி இருந்தது. நன்கு பசித்தது. இருட்டவும் ஆரம்பித்தது. 'இந்த பெரிய உலகத்தில் எங்கு போவது, எப்படி வாழ்வது' என்று புரியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தது வாத்துக் குஞ்சு.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று 'பூம், பூம், டுமீல்' என்று சத்தம். வெலவெலத்துப் போய் புதருக்குள் நன்கு பதுங்கிக் கொண்டது. பறவை வேட்டையாடுபவர்களின் துப்பாக்கிகள் பேசின. காட்டு வாத்துக்கள் வசித்த குளத்தை நோக்கி சுட்டுக் கொண்டு போனார்கள். தலை பிழைத்தது புண்ணியம் என்று அங்கிருந்து வேக வேகமாக ஓடியது வாத்துக் குஞ்சு.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த முதல் இரவு என்றுமே மறக்க முடியாதது. இரவு விலங்குகளின் விதவிதமான சத்தங்கள், நடுக்கும் குளிர், நிம்மதியாக தூங்கக் கூட இடம் இல்லாமல் களைத்து சலித்துப் போய் சோர்ந்து சரிந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் பகலவனின் வெளிச்சம் கசியும் வேளையில் எழுந்து பார்த்தால், முன்னால், பெரிய ஏரி ஒன்று பரந்து விரிந்திருந்தது. செந்நிற சாயம் தீட்டி வானம் குடை விரித்திருந்தது. கண்களுக்கு இதமான காலைக் காட்சிகள், அவ்வளவு பெரிய ஏரியைப் பார்த்ததும் ஒடுங்கியிருந்த மனம் மலர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்தமாக ஓடி தண்ணீரில் குதிக்கப் போகும் சமயத்தில் வானத்திலிருந்து ஒரு வெண்ணிற பறவைக் கூட்டம் இறங்குவதைப் பார்த்தது. அழகான தேவதைகள் போன்று வெண்மையான அன்னப் பறவைகள், கூட்டமாக ஏரியில் இறங்கி நீர் விளையாட ஆரம்பித்தன. அவற்றைப் பார்த்ததும் அசிங்கமான வாத்துக் குஞ்சின் மனதில் இனம் புரியாத உணர்வுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;'இந்தப் பறவைகள் போல நாமும் பறக்க முடிந்தால் எப்படி இருக்கும்? இவஙக நம்மையும் ஒரு பொருட்டா நினைச்சு பேசக் கூட மாட்டாங்க. தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்ட அழகு அன்னங்கள் எங்கே, பிறந்த இடத்தில் கூட வெறுக்கப்படும் அவலட்சண வாத்துக் குஞ்சு நான் எங்கே! ஒரு ஓரமா நின்று பார்த்து மகிழ்ந்து கொள்வோம்!'&lt;br /&gt;&lt;br /&gt;நேரம் போனதே தெரியவில்லை. அந்த தெய்வீகப் பறவைகளைப் பார்த்துக் கொண்டே வெயில் ஏறும் வரையில் கழித்து விட்டது வாத்துக் குஞ்சு. அன்னப் பறவைகள் எழுந்து பறந்து போன பிறகுதான், தான் எங்கிருக்கிறோம், நிலைமை என்ன என்பது உறைத்தது வாத்துக் குஞ்சுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;பரந்து விரிந்த நண்பர்களற்ற  உலகில் அதன் பயணம் தொடர்ந்தது. எங்கெங்கோ போய், யார் கண்ணிலும் படாமல் பதுங்கிப் பதுங்கி வயித்துப் பாட்டைப் பார்த்துக் கொண்டு தன்னந்தனியனாக அந்த கோடை காலத்தைக் கழித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வாய் விட்டுப் பேசக் கூட உற்றாரோ நட்போ இல்லாமல் நாட்கள் நகர்ந்தன. மழைக் காலம் வரப் போகிறது. முதல் மழை விழுந்த போது வாத்துக் குஞ்சுக்கு 'இது என்ன புதிய கலாட்டா' என்று கலவரம் ஏற்பட்டது. ஓடோடிப் போய் ஒரு ஓட்டு விட்டின் சரிப்பில் நின்று மழையிலிருந்து ஒதுங்கிக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வீட்டில் ஒரு வயதான பாட்டி வசித்து வந்தார். ஒரு பூனையும், ஒரு கோழியும் வளர்த்து வந்தார் பாட்டியம்மா. மழையில் கலங்கிப் போயிருந்த வாத்துக் குஞ்சுக்கு அந்த வீட்டில் இடம் கிடைத்தது. புதிதாக வந்த வாத்துக் குஞ்சை கோழிக்கும் பூனைக்கும் பிடிக்கவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கோழி தினமும் ஒரு முட்டையிடும். பூனைக்கு முதுகை வளைத்து கோபுரம் போல் நிற்கத் தெரியும். அதனால் இரண்டு பேரும் உலகத்திலேயே திறமை வாய்ந்தவர்கள் என்று தீர்மானம் செய்திருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'உனக்கு முட்டை போடத் தெரியுமா!'&lt;br /&gt;'உடலை நெளித்து கோபுரம் போல நிற்க முடியுமா!'&lt;br /&gt;&lt;br /&gt;'இல்லை என்றால் பேசாம அந்த மூலையில் போய் உட்காரு' என்று ஒதுக்கி வைத்து விட்டன பூனையும் கோழியும்.&lt;br /&gt;&lt;br /&gt;பழகிப் போன ஒன்றான தனியனான நாட்கள் தொடர்ந்தன. காலையில் மழை நின்று குளிர்ந்த காற்று வீசியது.&lt;br /&gt;&lt;br /&gt;'வெளியில் போய் நீந்தலாமா!' என்று தயக்கமாக ஒரு ஆலோசனையை முன் வைத்த வாத்துக் குஞ்சைக் கடுப்பாக பார்த்தன பூனையும், கோழியும்.&lt;br /&gt;&lt;br /&gt;'என்ன ஒரு காட்டுமிராண்டி நீ. நீந்தணுமாம் நீந்த! உன்னை எல்லாம் உள்ளே விட்டதே தப்பு. பேசாமல் ஓடிப் போய் விடு. முட்டை போடவும் தெரியாத உடலை வளைச்சு கோபுரமா நிக்கவும் தெரியாது. இப்போ வந்து நீந்தணும்னு புலம்பல். ஓடு ஓடு, இனிமேல் இந்தப் பக்கமே எட்டிப் பார்க்காதே'&lt;br /&gt;&lt;br /&gt;'இந்த உலகத்தை என்னால புரிந்து கொள்ளவே முடியாது' என்று சோகத்துடன் வெளியேறியது அசிங்கமான வாத்துக் குஞ்சு.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த சில நாட்களில் பருவ மழை  தன் கடமையைச் செய்ய ஓய்வெடுக்க உலர்ந்த இடமே இல்லாமல் போய் விட்டது. சாப்பிடுவதற்கும் ஒரு புழு கூடக் கிடைப்பது அரிதாகி விட்டது. எவ்வளவு நேரம்தான் நீந்திக் கொண்டே இருப்பது!&lt;br /&gt;&lt;br /&gt;குளத்தின் கரை உடைந்து வயல் காடெல்லாம் தண்ணீர் நிரம்பி விட்ட நாட்களில், பசியிலும் உடல் களைப்பிலும் சோர்ந்து போய் விழுந்து விட்டது வாத்துக் குஞ்சு.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல வேளையாக அந்த வழியாகப் போன விவசாயி மயங்கிக் கிடந்த வாத்துக் குஞ்சை எடுத்து தனது துண்டில் பொதிந்து வீட்டுக்குக் கொண்டு போனார். வீட்டு அம்மா, வாத்துக் குஞ்சின் இறகுகளைத் துடைத்து, சூடான கஞ்சி புகட்டினாள். அந்த இதமான சூழலில் உணவு வயிற்றுக்குள் போனதும் புத்துயிர் பிறந்தது அசிங்கமான வாத்துக் குஞ்சுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக் குழந்தைகளுக்கு ஒரே கொண்டாட்டம். அசிங்கமான வாத்துக் குஞ்சை கையில் எடுத்து விளையாடப் போட்டி போட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நட்பு என்பதே பார்த்தறியாத அசிங்கமான வாத்துக் குஞ்சு கலவரத்தில் அங்குமிங்கும் ஓடியது. மேசையின் மீது வைத்திருந்த தயிர்ப் பாத்திரத்தை தட்டி விட்டு வீடெல்லாம் தயிரை சிதற அடித்தது. குழந்தைகள் உற்சாகத்தில் கூக்குரல் இட்டார்கள். ஓடி ஓடி, வாசல் வழியாக வீட்டுக்கு வெளியேயே வந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;'எங்கு போனாலும், நமக்கு நிம்மதி இல்லை' என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே தண்ணீரில் மூழ்கிக் கிடந்த வயக்காட்டுக்குள் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;தண்ணீர் வடியும் வரை எப்படியோ உயிரைக் காப்பாற்றிக் கொண்டு வாழ்ந்தது. மழைக் காலம் முடிந்து தெளிவான வானம் தென்பட ஆரம்பித்த நாட்களில் தனது பயணங்களை மீண்டும் ஆரம்பித்தது. முன்பொரு நாள் தேவதைப் பறவைகளைப் பார்த்த ஏரிக் கரை நோக்கி அதன் கால்கள் தானாக நடந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;'இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதை விட, அந்தத் தெய்வீகப் பறவைகள் முன்பு போய் நின்று, அவர்கள் என்னைக் கொத்திக் கொன்றாலும் நல்லதுதான்' என்று முடிவு செய்து கொண்டது. அதிக நேரம் காத்திருக்க தேவையில்லாமல், அன்னப் பறவைக் கூட்டம் சீக்கிரமாகவே ஏரியில் இறங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;வேக வேகமாக நீந்தி அவற்றின் முன் போய் சேர்ந்தது நமது நண்பன். 'அவலட்சணமான, யாருக்கும் பிடிக்காத என்னை கொத்திக் கொன்று விடுங்கள்' என்று மனதுக்குள் சொல்லியபடியே கண்களை இறுக மூடிக் கொண்டு அன்னங்களின் முன் நீந்தி சேர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'ஹே! நீயும் எங்களில் ஒருவன். எங்க கூட சேர்ந்துக்கோ, நாம எல்லோரும் வானத்தில் உயரப் பறந்து போகலாம்' என்று யாரோ சொல்வதைக் கேட்டு கண்களைத் திறந்து பார்த்தது. தண்ணீரில் தனது உருவத்தையும் பார்த்தது. அந் த அசிங்கமான வாத்துக் குஞ்சு அழகான அன்னப் பறவையாக வளர்ந்து விட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தனது புதிய நண்பர்களுடன் நீரில் விளையாடி விட்டு தனது சிறகுகளை விரித்து வானத்தில் உயர உயரப் பறந்து போனது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36234289-3476389727347461481?l=bookimpact.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookimpact.blogspot.com/feeds/3476389727347461481/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36234289&amp;postID=3476389727347461481' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/3476389727347461481'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/3476389727347461481'/><link rel='alternate' type='text/html' href='http://bookimpact.blogspot.com/2010/02/ugly-duckling.html' title='The Ugly Duckling'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36234289.post-4489339185107029113</id><published>2010-02-13T09:07:00.000+05:30</published><updated>2010-02-13T17:59:36.118+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><title type='text'>அசல்</title><content type='html'>தல போல வருமா என்று பாட்டுடன் முடிந்த படத்தை வடபழனி கமலா திரையரங்கில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் நல்ல விஷயங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;1. கமலா திரையரங்கை புதுப்பித்து அழுக்கில்லாமல் பளபளப்பாக ஐந்து நட்சத்திர தரத்தில் செய்திருக்கிறார்கள்.&lt;br /&gt;2. திரையரங்கின் முன்பு கூட்டம் அதிகமாக இல்லை. இணையத்தில் முன்பதிவு செய்து விட்டு கணினி முன் உட்கார்ந்திருக்கும் ஊழியரிடம் சீட்டு வாங்கிக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;3. பெரிய திரை, திரை முழுவதும் அகலமாக படம்.&lt;br /&gt;4. பாரிஸ் (பிரான்சின் தலைநகரம்), மும்பை என்று சொல்லப்படும் நகரம் என்று பணக்காரத்தனமாக கண்ணுக்கு இதமான காட்சிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;5. உயர் தரத்தில் பணம் பண்ணுகிறவர்கள் எப்படி polished ஆக கொலை, கொள்ளை செய்து கொள்கிறார்கள் என்று உறுத்தாமல் பார்க்க முடிகிறது.&lt;br /&gt;6. கோரமான அடிதடிகள், ரத்தச் சிதறல்கள் இல்லாமலேயே பதட்டப்பட வைத்து விடும் சில காட்சிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;வேறு என்ன?:&lt;br /&gt;&lt;br /&gt;பள பள  காகிதத்தில் பொதியப்பட்ட Bull shit இந்தத் திரைப்படம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36234289-4489339185107029113?l=bookimpact.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookimpact.blogspot.com/feeds/4489339185107029113/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36234289&amp;postID=4489339185107029113' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/4489339185107029113'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/4489339185107029113'/><link rel='alternate' type='text/html' href='http://bookimpact.blogspot.com/2010/02/blog-post.html' title='அசல்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36234289.post-5426190853722315875</id><published>2010-01-13T21:01:00.002+05:30</published><updated>2010-02-17T13:14:16.786+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வலைத்தளம்'/><title type='text'>ஸ்லாஷ்டாட்</title><content type='html'>முதன் முதலில் சொந்தமாக கணினி வாங்கியது 1997ல். எச்டிஎம்எல் கற்றுக் கொள்ள ஆரம்பித்து C++ படிக்கலாம் என்று ஆரம்பிக்கும் போது போய் விழுந்தது திறவூற்று மென்பொருள் உலகில். திறவூற்று மென்பொருள் உலகின் ஒரு முக்கிய தளம் ஸ்லாஷ்டாட் என்ற விவாதக்களம்.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட வலைப்பதிவுகள் போன்ற அமைப்புதான். 1997ல் ராப் மால்டா என்ற அமெரிக்க கணினியியல் மாணவன் தான் படிக்கும் கணினித் துறை செய்திகளைத் தொகுத்து ஒரு இடத்தில் போடுவதற்காக தளம் ஒன்றை ஆரம்பித்தான். அவரது நெருங்கிய நண்பர்களில் சிலருடன் அதைப் பகிர்ந்து கொள்ளவும் செய்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்திகளுக்கான சுட்டி, அதைக் குறித்த படித்தவரின் கருத்து நான்கைந்து வரிகள். கிட்டத்தட்ட நம்ம சற்றுமுன் வடிவில்.&lt;br /&gt;&lt;br /&gt;படிக்க வருபவர்களும் தமது பின்னூட்டங்களை இணைக்கும் வசதி செய்து கொடுத்தான். வாய்வழியாகவே சேதி பரவி படிப்பவர்களின், பின்னூட்டம் அளிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக கும்மிப் பின்னூட்டங்கள் வர ஆரம்பித்தன. ஒரு சில நம்பகமான நண்பர்களுக்கு மட்டும் மட்டுறுத்தல் வசதி செய்து கொடுத்தார். மட்டுறுத்தல் என்றால் நீக்கி விடுதல் இல்லை. பின்னூட்டத்துக்கு மதிப்பெண் அளிப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் பரவலாக ஆட்கள் வர ஆரம்பிக்கவே மட்டுறுத்தலையும் தானியக்கமாக பலருக்கும் பகிர்ந்தளிக்கும் முறையை உருவாக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது வரை பெரும்பாலான நிரல் மாற்றங்கள் உருவாக்கங்கள் கமாண்டர் டேக்கோ என்ற பெயருடன் விவாதங்களில் கலந்து கொள்ளும் ராப் மால்டாவே செய்து வந்தார். தளத்தின் பிரபலம் அதிகமாகி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போனது. நண்பர்கள் சிலரும் தளத்தை நிர்வகிக்க உதவி செய்யலாயினர்.&lt;br /&gt;&lt;br /&gt;டாட்காம் பரபரப்பில் பல மில்லியன் டாலர்கள் கொடுத்து இந்தத் தளத்தை வாங்க ஒரு நிறுவனம் முன்வந்தது. இப்போது சில கைகள் மாறி விஏசிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்தின் கையில் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் தளத்தின் இயல்பை மாற்றி விடாமல் தானே வழிநடத்த தன்னிச்சை வேண்டும் என்ற நிபந்தனையுடன் ராப் தொடர்ந்து நடத்தி வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தினமும் 20 செய்திகள் வெளியாகும். ஒவ்வொரு செய்திக்கும் நூற்றுக் கணக்கான பின்னூட்டங்கள் கிடைக்கின்றன. அந்தப் பின்னூட்டங்களை மட்டுறுத்தி -1, 0, 1, 2, 3, 4, 5 என்று மதிப்பெண் கிடைக்கிறது. +4க்கு மேல் கிடைத்து பின்னூட்டங்கள் மட்டும் படிக்க வேண்டும் என்று அமைத்துக் கொள்ள முடியும். எல்லா பின்னூட்டங்களையும் பார்க்க வேண்டுமானால் -1லிருந்தே எடுத்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;2002ல். தனது அப்போதைய நண்பிக்கு இந்தத் தளத்தில் ஒரு செய்தியாக தன்னைத் திருமணம் செய்து கொள்ளும் படி கேட்டார் ராப் மால்டா. அந்தப் பெண்ணும் தளத்திலேயே ஒரு பின்னூட்டமாக அதை ஏற்றுக் கொண்டார். அந்த இடுகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னூட்டங்கள் வந்தன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36234289-5426190853722315875?l=bookimpact.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://slashdot.org' title='ஸ்லாஷ்டாட்'/><link rel='replies' type='application/atom+xml' href='http://bookimpact.blogspot.com/feeds/5426190853722315875/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36234289&amp;postID=5426190853722315875' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/5426190853722315875'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/5426190853722315875'/><link rel='alternate' type='text/html' href='http://bookimpact.blogspot.com/2008/02/blog-post.html' title='ஸ்லாஷ்டாட்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36234289.post-3572858398459357992</id><published>2010-01-13T08:26:00.000+05:30</published><updated>2010-01-13T14:39:38.102+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆங்கில நாவல்'/><title type='text'>Of Human Bondage - W Somerset Maugham</title><content type='html'>Of Human Bondage, நான் முதல் முதலில் படித்த ஆங்கில classic. 1991ல் சென்னையில் அமெரிக்க தூதரக நூலகத்தில் உறுப்பினாரவுடன் படித்த புத்தகங்களில் ஒன்று என்று நினைக்கிறேன். பள்ளியில் படிக்கும் போது ஆங்கில நூல்கள் எதுவும் படிக்க முடிந்ததில்லை. சென்னைக்கு வந்து கல்லூரியில் படிக்க ஆரம்பித்த பிறகுதான் ஆங்கிலத்தில் சரளமாக படிக்க முடிந்திருந்தது. அப்படிப் பார்க்கும் போது, ஆங்கிலத்தில் முழுமையாகப் படித்த முதல் நூல்களில் ஒன்று இந்த Of Human Bondage.&lt;br /&gt;&lt;br /&gt;'எந்தப் புத்தகத்தையும் படிக்க ஆரம்பித்து விட்டால் ஒரு வரி விடாமல் படித்து விட வேண்டும், கடைசிப் பக்கம் வரை படித்து விட வேண்டும்' என்று எழுதாத கோட்பாடு ஒன்று என் மனதில் உண்டு. தாங்கவே முடியாத அளவு போரடித்த ஓரிரண்டு நூல்களைத் தவிர எல்லாவற்றையும் அப்படித்தான் படித்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;Of Human  Bondage முழுவதுமே அழுத்தமான நிகழ்வுகளாக இருக்கும். கதையின் நாயகனுக்கு, பிறவியிலேயே ஒரு பாதம் ஊனம்.  கதையின் முதல் பக்கங்களில் அவனது தாய் இறந்து விடுகிறாள். கதை ஆரம்பிக்கும் முன்பே தந்தை இறந்து விடுகிறார். பள்ளியிலும், கல்லூரியிலும் கால் ஊனத்தினால் மற்ற சிறுவர்களைப் போல இயல்பான வாழ்க்கை இல்லாமல் போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அவனை வளர்க்கும் அங்கிள் (அப்பாவின் சகோதரர்) கொடுக்கும் அல்லது கொடுக்க முடியாத வழிகாட்டல்களை தாண்டி, மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடிக்காமலேயே பல்கலைக்கழகம் போவதை கைவிட்டு, ஜெர்மனி போகிறான். ஒரு ஆண்டுக்குப் பிறகு திரும்பி வந்து, கணக்காளர் வேலை பயிற்சியில் அமர்கிறான். ஒரே ஆண்டில் அது ஒத்து வராது என்று தெரிந்து பாரிசுக்கு ஓவியம் பயில போகிறான். ஓரிரு ஆண்டுகளில் அதுவும் தனக்கு வசப்படாது என்று புரிந்து லண்டன் திரும்பி தனது தந்தையைப் போல மருத்துவப் படிப்பில் நுழைகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னைக் காதலிக்காத ஒரு பெண்ணை பைத்தியமாக காதலிக்க ஆரம்பிக்கிறான். அவளுக்காக நிறைய செலவழிக்கிறான். அவள் இவனை கைவிரலில் ஆட்டி, தனக்கு வேண்டியதை சாதித்துக் கொள்கிறாள்.  அவள் தன்னை சீரழித்துக் கொண்டே போக, அந்தப் பெண்ணின் மீதான ஆசை, படிப்படியாக வடிந்து போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தந்தை விட்டுப் போன பணத்தை படிப்பு முடியும் முன்பு கரைத்து விடுகிறான். பட்டினி, வறுமை, கடையில் வேலை பார்த்தல், அன்பான குடும்பம் ஒன்றின் நட்பு. வயதான அங்கிள் இறந்ததும் கொஞ்சம் காசு கிடைக்க, மருத்துவப் படிப்பை முடிக்கிறான். இனிமேல் உலகமெல்லாம் சுற்ற வேண்டும் என்று கனவு காண்கிறான். நட்பான குடும்பத்துடன் விடுமுறையைக் கழிக்க கிராமப்புறம் போகும் போது, அவன் மீது அன்பைப் பொழியும் குடும்பத்தின் மூத்த பெண்ணிடம் மனதை பறி கொடுத்து விட்டதை உணர்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவளைத் திருமணம் செய்து கொண்டு, கடலோரக் கிராமத்தில் மருத்துவப் பணி செய்து வாழ முடிவு செய்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;கதையின் போக்கில் மகிழ்ச்சியோ உற்சாகமோ கிடையாது. மருத்துவக் கல்லூரியில் படிக்கும் போது நட்பு கொள்ளும் குடும்பத்துடன் உறவாட ஆரம்பித்த பிறகுதான், மனதை வருடிக் கொடுக்கும் நிகழ்வுகள் படிக்கக் கிடைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக பிடித்த கதைகளை பல தடவை படித்துக் கரைத்துக் குடித்து விடுவது எனது வழக்கமாக இருந்தாலும், சில ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகத்தை சொந்தமாக வாங்கி வைத்திருந்தாலும், படிப்பதற்கு மனமே வரவில்லை. என்றாவது ஒரு நாள் படிக்கலாம் என்று அடுக்கி வைத்திருந்த புத்தகங்களில் ஒன்றாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தாண்டு + வார இறுதி விடுமுறைகளில் மாலை வேளைகளில் இந்தப் புத்தகத்தை படிக்க ஆரம்பித்து முடித்தேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36234289-3572858398459357992?l=bookimpact.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://en.wikipedia.org/wiki/Of_Human_Bondage' title='Of Human Bondage - W Somerset Maugham'/><link rel='replies' type='application/atom+xml' href='http://bookimpact.blogspot.com/feeds/3572858398459357992/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36234289&amp;postID=3572858398459357992' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/3572858398459357992'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/3572858398459357992'/><link rel='alternate' type='text/html' href='http://bookimpact.blogspot.com/2010/01/of-human-bondage-w-somerset-maugham.html' title='Of Human Bondage - W Somerset Maugham'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36234289.post-3951976978789818762</id><published>2009-11-22T17:03:00.002+05:30</published><updated>2009-11-22T17:09:38.559+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படைப்பாக்கம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மலையாளம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>தசாவதாரம், ஜெகன்மோகினி, ஆதவன், பழசிராஜா</title><content type='html'>'எழுத்தாளர்கள், திரைப்படக் கலைஞர்கள், ஓவியர்கள், இசைவல்லுனர்கள் இவர்கள் எல்லோருமே தமது அறிவாலும் பயிற்சியாலும் திறமையாலும் ஒரு வித்தையைக் கைக்கொண்டிருக்கிறார்கள். அதை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பது வேறு விஷயம். திறமை உள்ளவர்கள் என்பதாலேயே அவர்கள் செய்வது எல்லாம் சரி என்று ஆகி விடாது. தமக்கு வாய்த்த வித்தையை வியாபாரமாக  மட்டும் பயன்படுத்துபவர்களின் பின்னால் நாம் போக வேண்டியதில்லை!'&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் கல்வெட்டு சொல்லும் இந்தக் கருத்து இடது சாரி, கம்யூனிசப் புரட்சி இயக்கங்களின் எண்ணத்துடன் ஒத்துப் போவது. 'உன் திறமையை மக்களுக்கு சமூகத்துக்கு பலனுள்ளதாகப் பயன்படுத்த முடியவில்லை என்றால், அந்தத் திறமை தேவையில்லை'&lt;br /&gt;&lt;br /&gt;1. எழுத்தாளர் சுஜாதாவைப் பற்றிய ஏமாற்றங்களில்தான் முதல் முதலில் கல்வெட்டின் இந்தக் கருத்தை கேட்டேன். சரியாகத்தான் பட்டது. பள்ளிப்பருவத்தின் ஆதரிச நாயகனாக ரஜினிகாந்தும், கமலஹாசனையும் விட சுஜாதாதான் இருந்தார். பொறியியல் படித்தவர், கணிணியில் வித்தகர். அறிவியலை வாசிக்கிறவர், மயக்கிப் போடும் எழுத்து நடைக்குச் சொந்தக்காரர். சுஜாதாவின் எழுத்து வெளியாகும் போது அந்தப் பத்திரிகையைச் சுற்றி ஒரு ஒளிவட்டமே தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரும் ஆகக் கூடிய விலைக்குத் தன் திறமையை விற்றுக் கொண்டிருந்திருக்கிறார். வாசகனின், தமிழ் வாசகனின் மனக் கம்பிகளை எப்படி மீட்டுவது என்ற கலையை வைத்துக் கொண்டு உணர்ச்சிக் கலவைகளைக் கலந்து எப்படி விற்கும் சரக்கைச் சமைப்பது என்பதில் வெகுவாகத் தேர்ந்திருக்கிறார். ஆனந்த விகடனில் தொடராக வந்த பிரிவோம் சந்திப்போம், என் இனிய இயந்திரா, ஜீனோ தொடர்கள் அவற்றின் ஓட்டத்திலேயே படித்தவை. குமுதத்தில் விக்ரம் - திரைப்படத்துக்கு முன்னோட்டமாக தொடராக வந்தது. தூண்டில் கதைகள், மத்யமர் கதைகள் என்று சிறுகதைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;வைரங்கள் என்று ஒரு கதை மிகவும் பாதித்தது. கல்கியில் தொடராக இருள் வரும் நேரம்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி நாட்களில் தேடித் தேடிப் படித்த எழுத்து அவரது. நூலகங்களிலும், புத்தகக் கடைகளிலும், பழைய புத்தகக் கடைகளிலும் சுவில் ஆரம்பித்து ஜாவில் தொடர்ந்து தாவில் முடிந்த பெயருடன் இருக்கும் எழுத்துக்களை எல்லாம் படித்து முடித்து விட வேண்டும் என்ற தாகம் அப்போது. பிறிதொரு காலத்தில், பிறிதொரு பணியில் அவருடன் சேர்ந்து பணியாற்றவும் வாய்ப்பு கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக இளைஞர்களுக்கு கணினிகளையும் உயர் அறிவியலையும் தமிழில் அறிமுகப் படுத்தியவர் என் வரலாற்று அடிக்குறிப்பு மட்டுமே அவருக்கு மிஞ்சியிருக்கும் என்று இப்போது தோன்றுகிறது. இருந்த திறமைக்கு சமூகத்தையே புரட்டிப் போட்ட படைப்புகளை உருவாக்கியிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;2. இரண்டாவதாக கமல்ஹாசன் எனப்படும் கமலஹாசன்.&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞர் தொலைக்காட்சியில் தசாவாதாரம் திரைப்படம் காட்டிய நாளில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு முன்பு சிதம்பரத்திலிருந்து புதுச்சேரி வரும் பேருந்தில் அந்தப் படத்தின் முதல் ஒரு மணி நேரத்தைப் பார்த்திருந்தேன். விட்ட இடத்திலிருந்து கலைஞர் தொலைக்காட்சியில்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு பணம், இவ்வளவு திறமை, இத்தனை ஆண்டு திரைப்பட அனுபவம். இவ்வளவையும் தசாவதாரம் போன்ற மலிவான கற்பனையில் பார்வையாளனை முட்டாளடிக்கும் நோக்கில் திரைப்படமாக செய்வது எவ்வளவு பெரிய வீணடிப்பு!&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு அடுத்த 10 நாட்களில் ஏதோ செலுத்தல்களில் சந்திரன் திரையரங்கில் ஜெகன் மோகினி திரைப்படம் பார்க்க முடிந்தது. fountainheadல் கல் குவாரி நகரிலிருந்து திரும்பி நியூயார்க் வரும் டொமினிக், முதல் கூட்டமாக elseworth Toohey நடத்தும் ஒரு கூட்டத்திற்குப் போவதற்குக் காரணமாக, 'நீந்தப் போனால், கொஞ்ச கொஞ்சமாக தண்ணீரில் கால் வைத்து போவது எனக்குப் பிடிக்காது. ஒரேயடியாக குதித்து தண்ணீரில் நனைந்து விட வேண்டும். இந்த உலகுக்குள் திரும்பி வர, அதனை முழுமையாகப் பிரதிபலிக்கும் ஒரு இடத்திற்கு வருவதுதானே சரி' என்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;பல ஆண்டுகளாக திரையரங்குக்குப் படம் பார்க்கப் போவதைத் தவிர்த்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனியாகப் போன முதல் படம் இந்த ஜெகன்மோகினி. நமீதாவிடம் 'தான் உலகநாயகி, தன்னை எல்லோருக் கொண்டாட வேண்டும், தான் எல்லோரையும் விட தலை சிறந்தவர்' என்ற நினைப்பு இல்லை. மற்றபடி ஜெகன்மோகினி தசாவாதாரம் போலவே பெரும் செலவில், நவீனத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி பொழுது போகும் படி எடுக்கப்பட்டிருந்தது. குறைந்த பட்சம், தசாவதாரத்தில் பெண்களை இழிவு படுத்துவது போல் ஜெகன்மோகினியில் ஆண்கள் இழிவுபடுத்தப்படவில்லை என்று சமாதானப்பட்டுக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;3. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இன்னொரு திரைப்படம். ரயிலுக்குக் காத்திருக்கும் 3 மணி நேரத்தில் ஒரு திரைப்படத்துக்கு  சீட்டு வாங்கினால் - ஆதவன். இடைவேளை போட்டதும், மீதி இருக்கும் நேரத்தை ஊருக்குள் உலவாவிக் களிக்கலாம் என்று வெளியே வந்து விட்டதால் தப்பித்தேன். இடைவேளை வரை சகிக்கும் படி இருந்தது அதன் பிறகு இன்னும் கொடுமை என்று விமரிசனங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சூரியா - கொஞ்சம் விழித்துக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;4. 'எதை எடுத்தாலும் குறை சொல்லிக் கொண்டே இருந்தா எப்படி? நீங்க என்னதான் வேண்டுகிறீர்கள்? உலகம் எந்த வழியில் போக வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இதற்கெல்லாம் மாற்றுத் திட்டம் ஒன்று உங்களிடம் இருக்கிறதா'&lt;br /&gt;&lt;br /&gt;சுற்றுப்புழச்சூழல், தொழில்நிறுவன ஆதிக்கம் என்று எல்லா திட்டங்களையும் எதிர்த்துக் கொண்டிருக்கும் போராளிகளைக் குறித்துப் பேசும் போது அவர்களுக்கு ஆதரவாக பேசி எழுதி வரும் முன்னணி பத்தி எழுத்தாளரிடம் இப்படிக் கேட்டபோது, 'நான் எதுக்கு மாற்றுத் திட்டம் யோசிக்க வேண்டும்? ஆட்சியில் இருப்பவர்கள் யோசிக்கட்டும். அவர்களது திட்டங்களைக் குறை கண்டு நடுத்தர வர்க்த்தின் மனசாட்சியாக இருப்பதுதான் என்னுடைய பங்கு' என்று சொல்லி விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை கேள்வியை நானும் கேட்டுக் கொள்ள வேண்டுமே! எல்லாக் கலைஞர்களையும், எல்லா அரசியல்வாதிகளையும் குறை சொல்லிக் கொண்டே இருந்தால் போதுமா? என்ன மாற்று, எப்படி இருக்க வேண்டும் என்று ஏதாவது அடையாளம் கண்டு கொள்ள வேண்டாமா?&lt;br /&gt;&lt;br /&gt;5. அப்படித் தேடிப் போன திரைப்படம் பழசிராஜா. இன்றைக்கு ஞாயிற்றுக் கிழமை காலை, டெக்கான் குரோனிக்கிள் நாளிதழில் பழசிராஜாவின் திரைவிமரிசனம். வரலாற்றுப் பின்னணியில் நடந்ததைச் சொல்லும் ஒரு திரைக்காவியம், நிச்சயம் பார்க்க வேண்டியது என்று முடித்திருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வீரபாண்டிய கட்டபொம்மனும், கப்பலோட்டிய தமிழனும் ரசிக்கப்பட்ட காலம் மாறி விட்டது. உன்னைப்போல் ஒருவனும், தசாவதாரமும், சிவாஜியும் ரசிக்கப்படும் இந்த நாளில் வரலாற்றுப் படம் எப்படி எடுபடும்? அதுவும் மலையாள இயக்குனரின் நிதானமான இயக்கத்தில், நிதானமாக நடிப்புகளில் ஒரு படம் தமிழ்நாட்டில் என்ன பாடு படும்? என்று மெலிதாக ஒரு எண்ணம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;11.15க்கு தொடக்க நேரம் என்று போட்டிருந்தாலும், 10 நிமிடம் முன்னதாகத்தான் உள்ளே விட்டார்கள். உடனேயே படமும் ஆரம்பித்து விட்டார்கள்.  முதல் அரை மணி நேரத்துக்கு மேல் கதவு திறந்து திறந்து மூடி பகல் வெளிச்சத்தை அரங்குக்குள் பாய்ச்சிக் கொண்டே இருந்தது. காட்சிகளும் நிதானமாக, வசனங்களுடனும், உருக்க முயற்சிக்கும் காட்சிகளுடனும் எரிச்சலூட்டுவது போலவே நகர்ந்தன. இரண்டரை மணி நேரத்துக்கு மேல் ஓடும் திரைப்படம். நடந்த வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஒரு திரைப்படத்தில் நாடகத்தனமான காட்சிகள் நிறைத்து விட முடியாதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;காந்தி திரைப்படத்திலும் ஜாலியான் வாலாபாக் படுகொலை, தண்டி உப்பு சத்தியாக்கிரகத்தில் காவல் பிரம்படி என்ற சில காட்சிகள் மட்டும்தான் தூக்கத்தை விரட்டின, முதல் முறை திரைப்படம் பார்க்கும் போது. இங்கும் சண்டைக்காட்சிகள் மட்டும்தான் விறுவிறுப்பைக் கொடுத்தன. பழசிராஜா தன்னைப் பிடிக்க வந்த படையினரை தண்ணீர் தட்டில் மனைவி கொண்டு வந்த சுருள் கத்தியால் தாக்கி அழிக்கும் காட்சியில்தான் உயிர் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சண்டைக் காட்சிகள், ஒளி(ந்து) போர் காட்சிகள், கோட்டையைத் தாக்கித் தகர்க்கும் காட்சிகள் என்று போர்க் காட்சிகளை அவ்வளவு தத்ரூபமாக சித்தரித்திருக்கிறார்கள். திட்டமிடலும், உழைப்பும், செய்நேர்த்தியும் ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சி விடும் தரத்தில் இருக்கின்றன. போர்க்கைதிகளை, வஞ்சகமாகப் பிடித்த எதிரிகளை கலகக்காரர்கள் என்று வெள்ளையர்கள் தூக்கிலிடும் காட்சிகள் 'ஆதவன் போயிருக்கலாமே' என்று சலித்துக் கொண்டிருந்த இளைஞர்களைக் கூட அமைதியாக்கி இருந்தன.&lt;br /&gt;வெள்ளையர்களையும் பலவகையினராக, சாதாரண மனிதர்களாகக் காட்டியிருக்கிறார்கள். உதவி ஆணையர் நோஞ்சானாக இளைஞராக, பெண்நண்பியுடன் கோட்டயம் வருகிறார். ஆளுனர் குண்டாக அந்தக் கால பவுடர் அடித்த பொய் முடியுடன் (wig), போர்த் தளபதி குரூரமாக நடவடிக்கைகள் எடுத்துக் குடித்துக் கொண்டாடுகிறார், ஆணையரின் நண்பி வெள்ளைப் படைகளின் அடாவடிகளைக் கண்டித்து அவரை விட்டு படகேறிப் போய் விடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வசனங்களும் காட்சி நகர்தல்களும் அரங்கில் கிண்டல் குரல்களுக்கு அவ்வப்போது வரவேற்பு அளித்தாலும் திரைப்படத்தின் தாக்கம் பார்த்த அனைவரையும் ஆழமாகப் பாதித்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலத்தில் காந்தி, தமிழில் மணிரத்தினத்தின் இருவர், இப்போது மலையாளம்/தமிழில் பழசி ராஜா. குறைந்தது இன்னும் நான்கைந்து முறை பார்த்து கட்டம் கட்டமாக உணர வேண்டிய திரைப்படம்.&lt;br /&gt;&lt;br /&gt;தோன்றிற் புகழொடு தோன்றுக என்று தொடங்கும் குறளுக்கு, 'தமது திறமையை சமூகத்துக்கு வளம் சேர்க்கும் வகையில் பயன்படுத்துங்கள். அப்படி இல்லாதவர்கள் கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருப்பதே உத்தமம்' என்று கொஞ்சம் வளைத்துப் பொருள் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கமல்ஹாசன், படத்துக்கு குரல் கொடுத்ததோடு இல்லாமல் நான்கைந்து முறை பார்த்திருக்கவும் செய்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். இது போன்று உங்கள் திறமைகளை வெளிப்படுத்த விருப்பம் இல்லா விட்டால், சும்மா இருந்து விடுங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36234289-3951976978789818762?l=bookimpact.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookimpact.blogspot.com/feeds/3951976978789818762/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36234289&amp;postID=3951976978789818762' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/3951976978789818762'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/3951976978789818762'/><link rel='alternate' type='text/html' href='http://bookimpact.blogspot.com/2009/11/blog-post.html' title='தசாவதாரம், ஜெகன்மோகினி, ஆதவன், பழசிராஜா'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36234289.post-1122789121487442250</id><published>2009-09-08T07:33:00.001+05:30</published><updated>2009-09-08T07:35:50.038+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='களஞ்சியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>டிராகன்</title><content type='html'>சீனாவைப் பற்றி சில தகவல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;உணவு:&lt;/b&gt;&lt;br /&gt;சீன உணவு என்பது நம்ம ஊரில் மிகவும் பிரபலம். செட்டிநாடு, தந்தூரி என்ற வரிசையில் உள்ளதில் மூத்தது சீன உணவு. கேள்விப் பட்டிருப்பது போல இங்கு நாம் சீன உணவு என்று சாப்பிடுவதற்கும் அங்கு ஊர்களில் சாப்பிடுவதற்கும் பெரிய தொடர்பு கிடையாது. அது மட்டுமில்லாமல் நாடு பெரிய நாடு. இந்தியாவை விட ஒன்றரை மடங்கு பெரியது. மக்கள் நெருக்கம் மிகுந்த கிழக்குப் பகுதியில் மட்டும் 10-12 பெரிய மாகாணங்கள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் ஒரு தனி கலாச்சாரம் என்று சொல்லி விடலாம். தெற்கே குவாந்தோங்ஙில் சாப்பிடும் சாப்பாட்டுக்கும், கிழக்கே சாங்காயில் சாப்பிடும் சாப்பாட்டுக்கும், வடக்கே பெய்ஜிங்ஙில் சாப்பிடும் சாப்பாட்டுக்கும் பொதுவாக எதுவும் சொல்ல முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அரசியல்&lt;br /&gt;&lt;/b&gt;அரசும் நானே, நீதிமன்றமும் நானே, வங்கியும் நானே, தொழில்களும் நானே, கட்சியும், ஊடகங்களும் நானே என்று எல்லாவற்றையும் வியாபித்து நிற்பது சீனக் கம்யூனிஸ்டு கட்சி. கொஞ்சம் கொஞ்சமாக, தொழில்களில் வெளிநாட்டு தனியார் நிறுவனங்களை வர விட்டிருக்கிறார்கள். ஊடகங்கள், நீதிமன்றங்கள், அரசு அமைப்புகள், கட்சி அமைப்புகள் என்று இன்னமும் கம்யூனிஸ்டு கட்சியின் ஏக அதிகாரம்தான் கொடி கட்டிப் பறக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நான்கு புத்திசாலி கிழவர்கள் கூடி கடந்த காலத்தையும், பழைய தலைவர்களின் படிப்பினைகளையும், இன்றைய நிகழ்வுகளையும் உற்று நோக்கி சொல்லும் வழியில்தான் நாடு செல்ல வேண்டும். எந்த நாலு கிழவர்கள் என்பதில் பல போட்டா போட்டிகள் உண்டு, உள் குத்துகள் உண்டு. அந்த கிழவர்களும் குமரர்களுமாக கிட்டத்தட்ட 10 கோடி பேர் உறுப்பினர்களாக இருக்கும் கட்சிதான் நாட்டின் அகல நீளங்களில் பல்வேறு அமைப்புகளை ஆக்கிரமித்துக் கொண்டு ஆட்சி செய்து கொண்டிருக்கிறத&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மொழி&lt;br /&gt;&lt;/b&gt;'சீன மொழியா, அதை எப்படி படிக்கிறது, ரொம்ப கஷ்டமாமே!' என்று சொல்லாத வேற்று நாட்டினர் கிடையாது. 'அப்படி சிறப்பான சிக்கல் எதுவும் கிடையாது. தமிழ் தெரிந்த ஒருவர் ஆங்கிலம், இந்தி அல்லது செருமன் படிப்பதற்கு மேற்கொள்ளும் அதே அளவு முயற்சியில் சீனத்தையும் கற்றுக் கொள்ளலாம்'. இதில் எழுத்து வடிவம் சித்திர எழுத்துக்களாக இருந்தால், வாக்கிய அமைப்புகள் எளிதாகிப் போகின்றன. பேசுவதற்கு நான்கு வெவ்வேறு மாத்திரைகளிலான உச்சரிப்புகள் இருந்தால், எழுத்தைப் பார்த்தே பொருளை புரிந்து கொள்ளும் வசதி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாடு முழுவதும் ஒரு சில கிலோமீட்டர்களுக்கு வேறுபடும் பேச்சு வழக்குகள். யாங்க்ட்சே நதியின் இரண்டு புறமும் இருக்கும் கிராமங்களில் பேசப்படும் மொழி ஒருவருக்கொருவர் புரியாத படி இருக்கலாம். ஆனால், எழுதப் படிக்கத் தெரிஞ்சா பொழைச்சுக்கலாம். எல்லோருமே ஒரே வடிவத்தில்தான் எழுதுகிறார்கள். இப்போதெல்லாம் உச்சரிப்பைச் சொல்லிக் கொடுக்க ரோமன் எழுத்துக்களில் பின்யீன் என்ற முறையையும் பின்பற்றுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;உள்கட்டமைப்பு&lt;br /&gt;&lt;/b&gt;'சீனாவா, என்னா ரோடு, என்னா ரயிலு, என்னா பெரிய விமான நிலையம்' என்று மலைக்கும் அளவுக்கு பெரிய திட்டப்பணிகளை முடித்துக் காட்டி விடுகிறார்கள்.  மாற்றங்களை ஏற்படுத்தி அதை நடைமுறைப்படுத்திக் காட்டுவதில் அவர்களுக்கு நிகர் அவர்கள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலே சொன்ன, சாலை போடும் நிறுவனமும், அதற்கு நிதி அளிக்கும் வங்கியும், ஒப்புதல் அளிக்கும் அரசாங்கமும், நிலம் விற்கும் ஊராட்சியும் ஒரே கட்சியை சேர்ந்ததாக இருக்கும் போது என்ன பெரிய சாதனை. எல்லாம் கட்சிக்குள் பேசி முடிவு செய்து கொள்வார்கள். அவர்கள் முடிவின் வழியில் உங்க வீடோ அல்லது கழுத்தோ இருந்தால் ஒரே இடியாக இடித்துப் போட்டு விட்டுப் போய் விடுவார்கள் அவ்வளவுதான். ஒரு கிராமத்துக்காக ஒரு குடும்பத்தை பலி கொடுக்கலாம் என்ற வேத நீதியை முழுமையாக கடைப்பிடிப்பவர்கள் அந்த கம்யூனிஸ்டுகள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மனித உரிமை&lt;br /&gt;&lt;/b&gt;தப்பு செய்து மாட்டிக்கிட்டா, கட்சியிலோ, ஆட்சியிலோ அல்லது சட்டைப் பைக்குள்ளோ சரியான பிடி இல்லாவிட்டால் கைது, விசாரணை, தீர்ப்பு, தண்டனை எல்லாம் முடிந்து ஒரே வாரத்தில் தூக்கில் போடப்பட்டு விடலாம். தப்பு செய்யாமல் கூட மாட்டினால் அதே கதியில் போய் சேர்ந்து விடலாம். அரசாங்கத்தின் வன்முறை விளிம்பு நிலை மனிதர்களின் மீது பாய்வதை பார்த்து பதறும் நம்ம ஊர்க்காரர்கள் அங்கே போனால் பதறுவதற்குக் கூட இடைவெளி விட மாட்டார்கள். ஒரே சீவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுதான் மனித உரிமை. சுருக்கமாக முடித்து விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தொழிலாளர்கள்&lt;br /&gt;&lt;/b&gt;கொடுக்க வேண்டியதைக் கொடுத்து விட்டால், கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்து விட்டால், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணித்து வேலைக்குச் சேர்ந்திருக்கும் சிறுவர் சிறுமியரை எந்திரங்கள் போல நடத்திக் கொள்ளலாம். மணி அடித்தால் சோறு, அடுத்த மணி அடித்தால் வேலை, அடுத்த மணியில் தூக்கம், மூன்றடுக்கு படுக்கைகளாக, நம்ம இரயில் பெட்டியில் தூங்கும் பெட்டி அளவில் இருக்கும் அறையில் ஆண்டு முழுவதும் வாழ்ந்து கொள்ள வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை புத்தாண்டு விடுமையின் போது பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஊருக்குப் போகலாம். அங்கு பட்டினிக்கு இன்னும் விடை இல்லை என்றால் திரும்பி வந்து இன்னொரு ஆண்டு உழலலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தொழிலாளர்களின் கூடுதல் மதிப்புகளை எல்லாம் உறிந்து கொண்டு போகிறவர்கள் தைவானிலிருந்தும், ஆங்காங்கிலிருந்தும் வந்து கடை போட்டு ஆலை நடத்தும் முதலாளிகள். அவர்கள் பங்குச் சந்தையிலும், மக்காவின் சூதாட்ட விடுதிகளிலும், ஆங்காங்கின் கேளிக்கை விடுதிகளிலும், செலவளிக்கவும் உதவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மதம்&lt;br /&gt;&lt;/b&gt;கடவுளும் நாமே என்று சொன்னக் கட்சி எல்லா மதங்களையும் கழுத்தைத் திருகிப் போட்டது. போன பத்திருபது ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சம் வணிகம் சார்ந்த மதங்களை அனுமதித்திருக்கிறார்கள். மீதி எல்லாம் கலாச்சாரம் மட்டும்தான். கடவுளின் பெயரால் மக்களை ஏய்க்கும் கும்பல்களை அறவே ஒழித்து விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோருக்கும் பசிக்கு உணவு கிடைக்கிறது, கட்டாயப் பள்ளிக் கல்வி இலவசமாகவே கிடைக்கிறது. அடிப்படை மருத்துவ வசதி கிடைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பெரிதிலும் பெரிது கேள்&lt;br /&gt;&lt;/b&gt;என்று சொன்ன அவ்வையை காது கொடுத்து கேட்டவர்கள் இந்த சீனர்கள்தான். நம்ம ஊரில் பெரிய காலணித் தொழிற்சாலையில் ஒரு நாளைக்கு 2000 சோடிகள் செய்கிறார்கள் என்றால் அங்கு 20,000 சோடிகள் செய்யும் தொழிற்சாலை இருக்கிறது. புத்தகக் கடைகள், கடைத்தெருக்கள், மின்சாதனப் பொருள் கடைகள், தங்கும் விடுதிகள், ஒலிம்பிக்ஸ் என்று எதை எடுத்தாலும் பெரிதாக சாதித்துக் காட்டும் வல்லமை அந்த மக்களிடம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;==========&lt;br /&gt;இப்படி சீனாவைப் பற்றித் துணுக்குகளாக, கட்டுரைகளாக, செய்திகளாக, சொந்த அனுபவங்களாக பல விஷயங்களை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்கிறோம். நான் 1997 முதல் 2001ம் ஆண்டு வரை சீனாவின் சாங்காய் நகரில் வசித்து பணி புரிந்த நாட்களில் அருகில் இருந்து 'என்னதான் நடக்கிறது' என்று தலை கால் புரியாமல், யோசித்து யோசித்து, நாலரை ஆண்டுகள் கண்களை விரித்துக் கொண்டு மலங்க மலங்க விழித்துக் கொண்டு சுற்றி நடப்பதை புரிந்து கொள்ள தேடித் தேடிப் படித்து, கேட்டு புரிந்து தெரிந்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சீனாவைப் ஏன் புரிந்து கொள்ள வேண்டும்? அப்படிப் புரிந்து கொள்வதை எப்படி அணுக வேண்டும்? என்று பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து, உழைத்து 'டிராகன்' எழுதி வெளியிட்டிருக்கிறார் செந்தில்நாதன். பல தளங்களில் விபரங்களுடன், நான்கு பரிமாணங்களையும் சேர்த்து சீனாவை ஒரு சராசரி தமிழ் வாசகருக்கு விவரித்திருக்கிறார். கையில் எடுத்துப் படிக்க ஆரம்பித்த ஒன்றரை நாட்களில் முடித்து விட்டேன்.&lt;br /&gt;==========&lt;br /&gt;&lt;br /&gt;சீனாவுக்குப் போக வேண்டும். அல்லது ஒரு சீன நிறுவனத்துடன் வணிகம் செய்ய வேண்டும். அல்லது, சீன வணிகருடன் போட்டி போட வேண்டும் என்பவர்கள்&lt;br /&gt;அங்கு வாழும் மக்கள் எப்படி சிந்திக்கிறார்கள், அவர்களைச் செலுத்துவது என்ன, அவர்களின் பின்னணி என்ன, அவர்கள் எப்படிப்பட்ட வீட்டில் வசிக்கிறார்கள், எதற்குப் பயப்படுகிறார்கள், எதை விரும்புகிறார்கள் என்றெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்கண்டு இதழில் வருவதைப் போல கல்கண்டுகளாக படிக்காமல் முழுமையான ஒரு விவரிப்பாக தெரிந்து கொள்ளும் விதமாக டிராகன் உருவாகியிருக்கிறது. the definitive guide என்று ஒரு பொருளைப் பற்றி ஆங்கிலப் புத்தகங்கள் வெளியாவதைப் போன்று, சீனாவுக்கான The definitive guide என்று டிராகன் புத்தகத்தை சொல்லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தம் 475 பக்கங்களில், தமிழில் சீனாவைப் பற்றிய முழுமையான ஒரு சித்தரிப்பை கொடுக்கிறது புத்தகம். சீனாவைப் பற்றிப் பேசும் பல ஆங்கில நூல்கள் சாதிக்காத, சீன அரசின் கையேடுகள் தந்து விடாத, முழுமையான சித்திரம் இந்த நூலில் கிடைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நூறு பக்கங்களில் சீனாவின் 4000 ஆண்டு வரலாற்றை வரைந்து காட்டி விட்டு அடுத்த 100 பக்கங்களில் 1980 வரை கொண்டு வந்து விடுகிறார் ஆசிரியர். அவ்வளவும் தெரிந்தவர்கள்தான் அடுத்த 30 ஆண்டுகளை புரிந்து கொள்ள முடியும். 'சீனாவைப் பார்' என்று வாதிட்டுக் கொண்டிருக்கும் நாம் சீனாவின் வரலாற்றுப் பாதைதான் இன்றைய நிலைமைக்குக் காரணம் என்பதை மறந்து விடக் கூடாது. அதைத் தெளிவாக விளக்கி விட்டு 1980 வரையிலான வரலாற்றுக்கு புத்தகத்தின் பாதியை ஒதுக்கியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;திரையரங்கில் பழைய கறுப்பு வெள்ளை படம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது இடைவேளையில் 70mm அளவில் ஆலிவுட் படத்தின் முன்னோட்டம் காட்டினால் எப்படி உணர்வோம். அந்த உணர்வு அடுத்த 200 பக்கங்களில். கடந்த 30 ஆண்டுகளில் சீனா உலகை அளந்த கதை, மூச்சைப் பிடித்துக் கொண்டு கண்கள் விரியப் படித்துக் கொண்டே போகும் அளவுக்கு விறுவிறுப்பாக சொல்லப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியில் ஒரு பகுதியாக இந்திய, சீன உறவுகள் பற்றிய வரலாறு.  சீனாவின் ஏகாதிபத்திய கனவுகள் என்று கொஞ்சம் அரசியல் சாயம் பூசப்பட்ட அவதானங்களும், காலக்கண்ணாடி காட்சியமைப்பும் என்று நூல் நிறைவு பெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் எழுதும் ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி. பிறமொழிக் கலப்பை வேண்டுமென்றே செய்பவர்களுக்கு மாற்றாக, வலிந்து வலித்து தூய தமிழ் எழுதுபவர்கள் ஒரு புறம். நல்ல தகவல்களை சொல்ல வந்து மொழி நடையால் நான்கு பக்கங்களுக்கு மேல் படிக்க ஒட்டாமல் ஓட்டி விடுபவர்கள் என்று இருந்தால் தமிழன்னை கைவிரலில் நடனமாடினாலும் குப்பைகளை அள்ளிக் குவிப்பதிலேயே ஈடுபட்டிருக்கும் 'கலைஞர்கள்' என்று இன்னொரு பக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறமொழிக்கலப்பில்லாமல் ஆனால் இயல்பான தமிழ் சொற்களில் சலிக்காத தமிழ் நடையில் கனமான விஷயங்களை சொல்ல முடியும் என்று காட்டுகிறது டிராகன் புத்தகம். தமிழில் கதைகள், கவிதைப் புத்தகங்கள், அரசியல் கட்டுரைகள், பாடப் புத்தகங்கள் இவற்றைத் தாண்டி அறிவை வளர்க்கும் புத்தகங்களுக்கான ஒரு முன்னோடியாக டிராகன் அமையும் என்ற பெருவிருப்பத்தோடு, இந்தப் புத்தகம் பலரையும் போய்ச் சேர வேண்டும் என்று வேண்டுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்னன் ஐயா பார்த்தால் தலையில் குட்டும் சின்னச் சின்ன குறைபாடுகள் அடுத்த பதிப்பில் மேம்பட்டு விடும். பின்யீங் வடிவங்களை இன்னும் கொஞ்சம் செம்மைப் படுத்தி ஒரு பட்டியலாக பின்னொட்டியில் தரலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36234289-1122789121487442250?l=bookimpact.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookimpact.blogspot.com/feeds/1122789121487442250/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36234289&amp;postID=1122789121487442250' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/1122789121487442250'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/1122789121487442250'/><link rel='alternate' type='text/html' href='http://bookimpact.blogspot.com/2009/09/blog-post.html' title='டிராகன்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36234289.post-4307996144264442400</id><published>2009-05-22T13:31:00.007+05:30</published><updated>2009-05-22T14:10:12.468+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமெரிக்கன்'/><title type='text'>அப்பல்லோ 13</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_eg4SGUh5cBE/ShZkaU8c8QI/AAAAAAAABhg/Yl-SxSskZks/s1600-h/Apollo_13-insignia.png"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 398px;" src="http://2.bp.blogspot.com/_eg4SGUh5cBE/ShZkaU8c8QI/AAAAAAAABhg/Yl-SxSskZks/s400/Apollo_13-insignia.png" alt="" id="BLOGGER_PHOTO_ID_5338564811755942146" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நீல் ஆம்ஸ்ட்ராங் ’அப்பல்லோ 11’ செயல்திட்டத்தில் நிலவை அடைந்து, அதன் தரையில் கால் வைத்தது நம் எல்லோருக்கும் தெரியும். அதற்கு அடுத்த அப்பல்லோ 12க்கும் அடுத்த ’&lt;a href="http://en.wikipedia.org/wiki/Apollo_13"&gt;அப்பல்லோ 13&lt;/a&gt;’க்கு நடந்த விபத்து ஒரு சிலருக்குத்தான் இப்பொழுது நினைவிருக்கும். ”வெற்றிகரமான தோல்வி” என்று அழைக்கப்படும் இந்த திட்டம், அமேரிக்க விண்வெளி சரித்திரத்தில் ஒரு முக்கியமான கட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;பூமியிலிருந்து கிளம்பி மூன்றாவது நாள் பிரயாணத்தின் பொழுது, ஆக்ஸிஜன் டாங்குகளில் வெடிப்பு ஏற்பட, பிரச்சனை ஆரம்பமானது. விண்கலத்தின் கமாண்டர் &lt;a href="http://en.wikipedia.org/wiki/Jim_Lovell"&gt;ஜேம்ஸ் லோவல்(James A. Lovell) &lt;/a&gt;பின்னாளில் மிகப் பிரபலமடைந்த அந்த வார்த்தைகளை கூறினார், “Houston, we've had a problem".&lt;br /&gt;&lt;br /&gt;ஆக்ஸிஜனையும் ஹைட்ரஜனையும் இணைத்து கலத்துக்கு தேவையான நீரும், மின்சாரமும் உற்பத்தி செய்யப்படும். இப்பொழுது ஆக்ஸிஜன் சப்ளை காலியாவதால், முக்கியத் தேவையான மின்சாரம் பற்றாக்குறையானது. மின்சாரப் பற்றாக்குறை முதலாவதாக தலைதூக்க, பிரயாணிகள் முக்கியத் தாய்க்கலமான “ஒடிஸி”யை(Odyssey) shutdown செய்து விட்டு, நிலவில் இறங்குவதற்கு உபயோகிக்கும் கலமான ”அக்வாரிஸ்”(Aquarius) கலத்திற்குள் நுழைந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில், செயல்திட்டத்தின்படி நிலவில் கலத்தை இறக்க முடியாது. பூமியில் நாஸா விண்வெளி நிலையத்தில், அப்பல்லோ 13 திட்டத்திற்காக இதுவரை வேலை செய்த அனைவரும்  தட்டியெழுப்பப்படுகின்றனர். பூமிக்கும் நிலவுக்கும் இடையே கிட்டத்தட்ட முக்கால்வாசி தூரத்தில் மூன்று உயிர்கள் விண்வெளியில் மாட்டிக் கொண்டிருக்கின்றன. அப்படியே ராக்கெட்டை இயக்கி கலத்தை திருப்பி பூமிக்கு திருப்பி விடலாமா?&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_eg4SGUh5cBE/ShZhg-adS8I/AAAAAAAABhQ/LrQNCM1LQYg/s1600-h/Apollo13_-_SM_after_separation.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 197px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_eg4SGUh5cBE/ShZhg-adS8I/AAAAAAAABhQ/LrQNCM1LQYg/s320/Apollo13_-_SM_after_separation.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5338561627431979970" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆக்ஸிஜன், கலத்தின் எரிபொருளுக்கும் தேவை. நடுவழியில் கலத்தை திருப்பினால், செலவாகும் எரிபொருள், கடைசி நேர எரிபொருள் பற்றாக்குறையை ஏற்படுத்திவிடும். அதனால் கலத்தை, நிலவை நோக்கியே பயணிக்க தீர்மானிக்கின்றனர். இதன் மூலம், நிலவின் ஈர்ப்பு சக்தி, கலத்தை, நிலவை சுற்றி திருப்பிவிடும் சுற்றுப்பாதையில்(&lt;a href="http://en.wikipedia.org/wiki/Free_return_trajectory"&gt;free return trajectory&lt;/a&gt;) கலம் நுழைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நிலவைச் சுற்றிக்கொண்டு, கலம் பூமியை நோக்கி திரும்பியதும், நிலவின் ஈர்ப்பிலிருந்து விடுபட அக்வாரிஸ்(Lunar Module - Aquaris) கலத்தின் ராக்கெட்டுகளே எரிந்தன. தாய்க் கலத்தின் ராக்கெட்டுகள் எந்த நிலையில் இருக்கிறதோ என்று பயம்!&lt;br /&gt;&lt;br /&gt;பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை. மின்சாரச் சிக்கனம் மிகக் கடுமையாக கடைபிடிக்கப்பட்டது. கலத்தினுள்ளே விளக்குகளிலிருந்து, கலத்தை வெப்பமாக்கும் ஹீட்டர் வரை அனைத்தும் அணைக்கப்படுகின்றன - கணிணியும் சேர்த்து. பூமியுடனான ரேடியோ தொடர்பு மட்டுமே உயிருடன் இருக்கிறது. கலத்தினுள்ளே தாங்க முடியாத குளிர். இருக்கிற மின்சார சக்தியை கொண்டு பூமிக்கு பத்திரமாக திரும்ப முடியுமா என்று சந்தேகம். மின்சார சாதனங்கள் அணைக்கப்பட்டதால், கழிவுகளை கலத்திலிருந்து வெளியேற்ற முடியாது. அதனால், இனிமேல் கழிவுகள் கூடாது என்று பூமியிலிருந்து ஆணை கிளம்பியது. No Ones and Twos!!&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_eg4SGUh5cBE/ShZgmvCy83I/AAAAAAAABhA/0xtYbYMu7CM/s1600-h/Apollo_13_Original_Crew.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 400px; height: 336px;" src="http://1.bp.blogspot.com/_eg4SGUh5cBE/ShZgmvCy83I/AAAAAAAABhA/0xtYbYMu7CM/s400/Apollo_13_Original_Crew.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5338560626873791346" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அக்வாரிஸ் கலம் நிலவில் இறங்குவதற்கு மட்டுமே உருவாக்கப்பட்டிருந்ததால், பிரயாணிகள் சுவாசித்த பின் வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றுவதற்கான வசதி, இரண்டு பேருக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. இப்பொழுது இருப்பதோ மூன்று பேர். என்ன செய்வது? பூமி விஞ்ஞானிகள், கலத்திலிருக்கும் பொருள்களை கொண்டே கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றும் கருவியை செய்யும் முறையை கண்டுபிடித்து, பிரயாணிகளுக்கு சொல்லச் சொல்ல கருவி கலத்தில் தயாரிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;விபத்தில் நடந்த வெடிப்பில், அதிக வெப்பம் தாங்கும் கூடு(Heat Sheild) பாதிக்கப்பட்டதாக சந்தேகித்தனர். அப்படி பாதிக்கப்பட்டிருந்தால், பூமியின் காற்று மண்டலத்தில் நுழைந்தபின், ஏற்படும் அபரிமிதமான உராய்வினால் ஏற்படும் வெப்பத்தை தாங்கமுடியாமல் பிரயாணிகள் இறக்க நேரிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு தடைகளையும் தாண்டி இறுதியில் பிரயாணிகள் இருந்த கூடு, கடலில் பத்திரமாக இறங்கியது. செயல்திட்டத்தின்படி நிலவை அடைய முடியவிட்டாலும், பிரயாணிகளை பத்திரமாக பூமிக்கு கொண்டு வந்ததால் இந்த சம்பவம் வெற்றிகரமான தோல்வி என்று அழைக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சம்பவங்களையெல்லாம் அப்பல்லோ 13 திட்டத்தின் கமாண்டர் ஜேம்ஸ் லோவல் தனது புத்தகமான "&lt;a href="http://en.wikipedia.org/wiki/Lost_Moon"&gt;Lost Moon&lt;/a&gt;" என்ற புத்தகத்தில் விரிவாகவும், துல்லியமாகவும் விவரித்திருக்கிறார். அந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, 70களில் அப்போதைய தினமணி ஆசிரியர், தமிழில் இந்த வரலாற்று சம்பவத்தை புத்தகமாக எழுதினார். அந்த புத்தகத்தின் விலை அப்பொழுது ரூ.2.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சம்பவத்தை Ron Howard என்ற ஹாலிவுட் டைரக்டர் 1995ல் திரைப்படமாக எடுத்தார் - ஜேம்ஸ் &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_eg4SGUh5cBE/ShZhhLJy0GI/AAAAAAAABhY/Gc2gp6o4Hsg/s1600-h/Apollo13soundtrack.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 240px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_eg4SGUh5cBE/ShZhhLJy0GI/AAAAAAAABhY/Gc2gp6o4Hsg/s320/Apollo13soundtrack.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5338561630851747938" border="0" /&gt;&lt;/a&gt;லோவலின் உதவியோடு. &lt;a href="http://en.wikipedia.org/wiki/Tom_Hanks"&gt;Tom Hanks&lt;/a&gt;  லோவலாக நடித்தார். திரைப்படத்துக்காக கொஞ்சம் டென்ஷன், சென்டிமெண்ட் சேர்த்திருக்கிறார்கள். இருந்தாலும் அற்புதமாக படமெடுத்திருக்கிறார்கள். லோவல் பிரயாணத்துக்கு கிளம்பும் நேரத்தில், அவர் மனைவியின் திருமண மோதிரம் பாத்ரூம் குழாய்க்குள் விழுவது, நம்மூர் தாலி சென்டிமெண்டை நினைவுபடுத்துகிறது. ஆனாலும் அது உண்மையில் நடந்த சம்பவம் என்று லோவல் உறுதிப்படுத்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;விஷயம் தெரிந்த ஆசாமிகள், ஒருசில தொழில்நுட்ப விவரணைகள் தவறாயிருந்தாலும் இந்தப் படத்தில் கூறப்படும்/காட்டப்படும் தொழில்நுட்ப விவரங்கள் மிகப் பெருமளவு துல்லியமாக இருப்பதாகக் கூறுகின்றனர். இந்தப் படத்துக்கு இரு ஆஸ்கர் அவார்டுகளும் கிடைத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_eg4SGUh5cBE/ShZgm5fOBgI/AAAAAAAABhI/Xlam6BDQ8hU/s1600-h/Apollo_thirteen_movie.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 236px; height: 350px;" src="http://2.bp.blogspot.com/_eg4SGUh5cBE/ShZgm5fOBgI/AAAAAAAABhI/Xlam6BDQ8hU/s400/Apollo_thirteen_movie.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5338560629677360642" border="0" /&gt;&lt;/a&gt;படத்தை எடுத்து முடித்ததும், டைரக்டர் Howard ஒரு test preview showக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த ஷோவை பார்த்தவர்களில் ஒருவர் எழுதிய கமெண்ட் “அப்பட்டமான ஹாலிவுட் படம். உண்மையில் இப்படி நடந்தால் விண்வெளி வீரர்கள் உயிருடன் தப்பிக்க முடியாது”, என்பது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்பல்லோ 13 திட்டத்தின் விவரங்கள் பற்றி அறிய - &lt;a href="http://en.wikipedia.org/wiki/Apollo_13"&gt;http://en.wikipedia.org/wiki/Apollo_13&lt;/a&gt;&lt;br /&gt;அப்பல்லோ 13 திரைப்படம் பற்றிய விவரங்கள் - &lt;a href="http://en.wikipedia.org/wiki/Apollo_13_%28film%29"&gt;http://en.wikipedia.org/wiki/Apollo_13_(film)&lt;/a&gt;&lt;br /&gt;படத்தில் காட்டப்பட்ட தவறான தொழில்நுட்ப விவரங்கள் எவை என அறிய - &lt;a href="http://www.moviemistakes.com/film75"&gt;http://www.moviemistakes.com/film75&lt;/a&gt; , &lt;a href="http://www.moviemistakes.com/film75/page2"&gt;http://www.moviemistakes.com/film75/page2&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36234289-4307996144264442400?l=bookimpact.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookimpact.blogspot.com/feeds/4307996144264442400/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36234289&amp;postID=4307996144264442400' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/4307996144264442400'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/4307996144264442400'/><link rel='alternate' type='text/html' href='http://bookimpact.blogspot.com/2009/05/13.html' title='அப்பல்லோ 13'/><author><name>யோசிப்பவர்</name><uri>http://www.blogger.com/profile/11448882321151780638</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/-41MU05rD3NQ/TivKhrHfAAI/AAAAAAAABvM/1Rt6Kbr7c9M/s220/DSC00304.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_eg4SGUh5cBE/ShZkaU8c8QI/AAAAAAAABhg/Yl-SxSskZks/s72-c/Apollo_13-insignia.png' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36234289.post-5652574943785546882</id><published>2009-05-11T21:24:00.002+05:30</published><updated>2009-05-11T21:28:42.877+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆங்கில நாவல்'/><title type='text'>அருந்ததி ராய்</title><content type='html'>The God of Small things என்று தலைப்புக் கொடுக்க மனம் வராமல் அதை எழுதியவரின் பெயரையே தலைப்பாகக் கொடுத்திருக்கிறேன். ஒரு புத்தகம் ஏதாவது விருது பெற்றதும் அதற்கு ஒரு தனிப் புகழ் கிடைத்து விடுகிறது. புக்கர் பரிசு கிடைக்கா விட்டால், புத்தகக் கடையில் இப்படி ஒரு தலைப்பில் இப்படி ஒருவர் எழுதிய புத்தகத்தைத் திரும்பிக் கூடப் பார்த்திருக்க மாட்டேன். அதே போலத்தான் ஆஸ்கர் விருது பெற்று விட்ட திரைப்படங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1990களின் இறுதிகளில் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு, இருபுறமும் இறக்கைகள் கட்டிக் கொண்டு பறந்து கொண்டிருந்த நாட்களில் ஏதோ ஒரு விமான நிலைய புத்தகக் கடையில் இந்தப் புத்தகத்தை வாங்கினேன். படிக்க ஆரம்பித்ததும் இதுக்கு என்ன விருது என்றுதான் தோன்றியது. விடாப்பிடியாகப் படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் பாதி புத்தகத்துக்கு மேல் போக முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கையில் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'தலைசிறந்த கதைகளில் ரகசியம் எதுவும் இருப்பதில்லை. அத்தகைய கதைகளை நீங்கள் ஏற்கனவே கேட்டிருந்தாலும் மீண்டும் கேட்க விரும்புவீர்கள். கதையின் எந்தக் கட்டத்திலும் நுழைந்து ஒட்டிக் கொள்ளலாம். கதகளி கலைஞர்கள் அதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள்.'&lt;br /&gt;&lt;br /&gt;அதை அருந்ததி ராயும் புரிந்து கொண்டு தனது கதைக்கு கொண்டு வந்திருக்கிறார். கதையின் முதல் அத்தியாயத்திலேயே என்னென்ன நடந்தது, எதைப் பற்றிப் படிக்கப் போகிறோம் என்று அறிவுப்புகள், எச்சரிக்கைகள் கிடைத்து விடுகின்றன. அம்மு விவாகரத்து ஆகி அம்மா வீடு வருவது, சோஃபி மோள் தண்ணீரில் மூழ்கி இறந்து விடுவது, எஸ்தா அபிலாஷ் தியேட்டரில் ஆரஞ்சு லெமன் டிரிங்க் ஆளிடம் படுவது, எஸ்தா, rahel இருவரின் வாழ்க்கையும் இலக்கில்லாமல் போவது என்று எல்லாமே முதலிலேயே தெரிந்து விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகு விபரங்கள்தான். இந்த நாவலுக்கு விமரிசனம் எழுதிய எல்லோருமே குறிப்பிடுவது details. கேரளாவின், சிரியன் கிருத்தவ, மேல்தட்டு குடும்பம் ஒன்றின் பார்வையில் உலகின் இண்டு இடுக்குகள் எல்லாம் உயிர் பெறுகின்றன. கதா பாத்திரங்கள் எதுவும் எதற்குள்ளும் ஒளிந்து கொள்ள முடிவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கதை சொல்வது ஆசிரியரா அல்லது ரஹேலா என்று குழப்பம் வருவது குறைவாகவே இருக்கிறது. பெரும்பாலான இடங்களில் ரஹேலின் சின்ன வயது உலகப்பார்வைவை, வளர்ந்து 31 வயதில் அனுபவப் பார்வையுடன் கலந்து கதை சொல்லப்படுகிறது. குடும்பம் கோட்டயத்துக்குக் காரில் போகும் போது வியட்நாமில் நடக்கும் சண்டையைப் பற்றியும் நாட்டின் பெயர் குறிப்பிடாமல் தொட்டுச் செல்கிறார் கதை சொல்லி. 31 வயது ரஹேல் 7 வயதில் நடந்த சம்பவங்கள் எப்படி அன்றைய கதாபாத்திரங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று உருவகித்து சொல்வது போலக் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன பெரிய கதை! குழந்தைகள் வயிற்றுக்கு இல்லாமல் வாடுகிறார்களா! படிப்பதற்கு வசதியில்லையா? சமூகத்தால் கொடுமைப்படுத்தப்படுகிறார்களா? அப்படி எதுவும் இல்லை. மிகவும் நுண்ணிய ஒரே ஒரு குடும்பத்தில் மட்டும் நடந்திருக்கக் கூடிய சம்பவங்களின் தொகுப்பு. கேரள சமூகத்தின் ஒரு குறுக்கு வெட்டை இந்தக் கதைக் கண்ணாடியில் படம் பிடித்துக் காட்டுகிறார் அருந்ததி ராய். செம்மீன் திரைப்படத் தாக்கம், வெளிநாட்டில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் தாக்கம், தொழிற்சங்க இயக்கம், நம்பூதிரி பாடின் தலைமையில் கம்யூனிஸ்டு அரசு ஏற்பட்டது, மத அரசியல்கள், வேதிப் பொருட்களால் ஆறுகள் மாசு படுவது, தீண்டாமை.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்தா நடந்து போகும் போது முதலில் 'அவர்களது தாத்தா தீண்டத்தகாதவர்களுக்காக கட்டிக் கொடுத்த பள்ளிக் கூடம்' என்று சொல்லி விட்டு அடுத்தடுத்து மற்ற காட்சிகளை விவரித்து விட்டு, இன்னொரு பள்ளியைக் குறிப்பிட்டு 'அது தீண்டத்தகுந்தவர்களுக்கு' என்று சொல்லும் சொற்கூர்மை நாவல் எங்கும் விரவிக் கிடக்கிறது. தீண்டத் தகுந்த காவல் அதிகாரிகள், தீண்டத்தகாத பறவனை மிதித்தே உடைக்கும் போது சாட்சிகளாக எஸ்தாவும், ரஹேலும் மட்டும் இருக்கிறார்கள். அவன் செய்த தவறு, தீண்டத் தகுந்த அம்முவுடன் உறவு வைத்துக் கொள்வது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ரகசிய உறவு வெளிப்பட்ட பிற்பகலில் அம்மு குழந்தைகளை வார்த்தைகளால் நோகடித்து துரத்தி விடகுழந்தைகள் வீட்டை விட்டு ஓடிப் போகத் தீர்மானிக்கிறார்கள்.  இலண்டனில் வந்திருக்கும் அவர்கள் மாமா சாக்கோவின் இங்கிலாந்து (முன்னாள்) மனைவி மூலமான குழந்தை சோஃபி மோளும் சேர்ந்து கொள்கிறாள். முன்னிருட்டே நேரத்தில் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த படகில் ஏறி ஆற்றைக் கடக்க முயற்சிக்கும் போது படகு கவிழ்ந்து விடுகிறது. எஸ்தாவும், ரஹேலும் வழக்கம் போல நீந்தி அக்கரை சேர்ந்து விடுகிறார்கள். சோஃபி மோளுக்கு நீந்தத் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;டட்டடாய்ங் என்று இசை எழுப்பாமல், பெரிய பதற்றம் இல்லாமல் சோஃபி மோள் ஆற்றோடு போய் விடுகிறாள். மற்ற இரண்டு குழந்தைகளும் அக்கரையில் ஒரு கைவிடப்பட்ட வீட்டு திண்ணையில் படுத்துத் தூங்குகிறார்கள். அதுதான் அவர்கள் ஓடிப் போக வைத்திருந்த இடம்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாச்சி வெளுத்தாவை திட்டி காரித்துப்பி அனுப்ப, அவனும் ஆற்றை நீந்திக் கடந்து அதே வீட்டுக்கு வருகிறான். அம்முவை அறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பேபி அத்தை கொடுத்த புகாரின் பேரில் தீண்டக் கூடிய காவலர்கள் படகேறி அடுத்த நாள் காலையில் அக்கரை வந்து வெளுத்தாவை மிதித்து துவைத்து குற்றுயிராக்கி விடுகிறார்கள். சோஃபி மோளின் பிணம் ஆற்றில் கிடைக்கிறது. வெளுத்தா குழந்தைகளைக் கடத்தியதாக எழுதி கேசை முடிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் குழந்தைகள் சரியில்லை என்று எஸ்தாவை கொல்கத்தாவுக்கு அனுப்பி விடுகிறார்கள். ரஹேலின் படிப்பை மட்டும் அம்மாச்சி பார்த்துக் கொள்வாள். அம்மு வேலை தேடி போகிறாள். 'நல்ல வேலை கிடைத்து நாம மூணு பேரும் சேர்ந்து இருக்க அளவுக்கு வருமானம் ஏற்பட்டதும் உங்களை அழைத்துக் கொள்கிறேன்' என்கிறாள். அது நடக்காமலே போய் அம்மு 31 வயதில் ஒரு லாட்ஜில் செத்துப் போகிறாள். எஸ்தா பள்ளிப் படிப்போடு  நிறுத்தி விட்டு பேசாமல் அமைதியாகி விடுகிறான். ரஹேல் தில்லியில் வரைகலைப் பட்டம் படிக்கப் போய், ஒரு அமெரிக்கரை திருமணம் செய்து அமெரிக்கா போய் விடுகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்தாவின் தந்தை ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயரப் போவதால் எஸ்தாவைத் திருப்பி அனுப்புகிறார். எஸ்தா திரும்பி வந்து விட்டதை பேபி அத்தை ரஹேலுக்குக் கடிதம் எழுதித் தெரிவிக்க ரஹேல் ஊருக்கு வந்து சேருகிறாள். ஊரில் வந்த பிறகு அவள் திரும்பிப் பார்ப்பதாக கதை வளர்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36234289-5652574943785546882?l=bookimpact.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookimpact.blogspot.com/feeds/5652574943785546882/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36234289&amp;postID=5652574943785546882' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/5652574943785546882'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/5652574943785546882'/><link rel='alternate' type='text/html' href='http://bookimpact.blogspot.com/2009/05/blog-post.html' title='அருந்ததி ராய்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36234289.post-5685903862538788308</id><published>2008-09-08T15:08:00.007+05:30</published><updated>2008-09-08T15:51:15.421+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமெரிக்கன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>ஆல் யூ ஸோம்பீஸ் - All you Zombies - Robert.A.Heinlein</title><content type='html'>சமீபத்தில் கூகிளில் பாரடாக்ஸ்(&lt;span style="color:#cc0000;"&gt;Paradox - முரண் கூற்று&lt;/span&gt;) என்று தேடியபோது, இந்த சிறுகதையை பற்றி தெரிய வந்தது. டைம் டிராவல் கதைகளில் இயல்பாகவே இந்த பாரடாக்ஸ்கள் தலைகாட்டும். உண்மையில், அதுதான் அந்த கதைகளின் சுவாரஸ்யத்தை கூட்டும். அப்படிபட்ட கதைகளில் உச்சகட்ட பாரடாக்ஸ் கதைகளை எழுதியவர் &lt;span style="color:#006600;"&gt;ராபர்ட்.ஏ,ஹேன்லீன்&lt;/span&gt;. அப்படி அவர் எழுதியவற்றில் ஒன்றுதான் "&lt;span style="color:#006600;"&gt;ஆல் யூ ஸோம்பீஸ்&lt;/span&gt;". எனக்கு பிடித்திருந்தது. கதையை விவரிப்பது கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும் சுருங்கச் சொல்ல முயல்கிறேன். அதற்குமுன், சஸ்பென்ஸ் உடையாமல் ஒரிஜினல் கதையை படிக்க விரும்புபவர்கள் &lt;a href="http://ieng9.ucsd.edu/~mfedder/zombies.html"&gt;இங்கே சொடுக்கிப்&lt;/a&gt; படிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc6600;"&gt;கதைச் சுருக்கம் :-&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1945ல் ஒரு பெண் குழந்தை(&lt;span style="color:#000099;"&gt;ஜேன்&lt;/span&gt;) அநாதை ஆசிரம வாசலில் விடப்படுகிறது. ஜேன் வளர்ந்து வாலிப பருவத்தை அடையும் பொழுது 1963ல் டிரிஃப்டர்(&lt;span style="color:#990000;"&gt;Drifter&lt;/span&gt;) என்று அழைக்கப்படும் வாலிபனை சந்தித்து காதலில் விழுகிறாள். ஆனால் அந்த வாலிபன் அவளுக்கு முன்பின் தெரியாதவன். சிறிது நாட்கள் அவளுடன் இருந்து விட்டு காணாமல் போகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;1964ல் ஜேனுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. பிறந்த சிறிது நேரத்தில் அதுவும் காணாமல் போகிறது. பிரசவத்தின் பொழுது மருத்துவர்களுக்கு ஜேனுக்கு ஆண்,பெண் இரு பாலுறுப்புகளும் இருப்பது தெரிய வருகிறது. பிரசவத்தில் ஏற்படும் சிக்கலால், ஜேனின் பயனில்லாத பெண் உறுப்புகளை நீக்கிவிட்டு, அவளை ஆணாக மாற்றிவிடுகிறார்கள் மருத்துவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று ஆணாகி விட்டதால் சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சந்திக்க முடியாமல் "அவன்" குடிக்க ஆரம்பிக்கிறான். அவனும் தன் காதலனைப் போன்ற டிரிஃப்டர் ஆகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி அவன் வாழ்க்கை போய் கொண்டிருக்கும் பொழுது 1970ல் ஒரு பாருக்கு செல்கிறான். அங்கேயிருக்கும் மதுவிற்பனையாளனிடம்(&lt;span style="color:#990000;"&gt;Bartender&lt;/span&gt;) போதையில் தன் கதையை சொல்கிறான். மது விற்பவன், அவனை கைவிட்டுச் சென்ற பழைய காதலனை கண்டுபிடிக்க உதவுவதாக சொல்கிறான். அதற்கு பதிலாக அவன் "டைம் டிராவலர்ஸ் கார்ப்பரேஷனில்" உறுப்பினராக சேர வேண்டும் என்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒப்பந்தப்படி மது விற்பவன், அவனை அழைத்துக் கொண்டு டைம் மெஷினில் 1963க்கு சென்று அவனை இறக்கி விடுகிறான். அங்கே டிரிஃப்டர் முன்பின் அறிந்திறாத ஒரு அநாதைப் பெண்ணின் மேல் காதல்வயப்படுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் டிரிஃப்டரை 1963ல் இறக்கி விட்ட மது விற்பவன், ஒன்பது மாதங்கள் முன்னோக்கிச் சென்று 1964ல் ஒரு ஹாஸ்பிட்டலிலிலிருந்து, குழந்தை ஒன்றை திருடிக் கொண்டு, அதை 1945ல் ஒரு அநாதை இல்ல வாசலில் விட்டு விடுகிறான். அதன் பின்னர் 1963க்கு வந்து டிரிஃப்டரை அழைத்துக் கொண்டு 1985க்கு சென்று டைம் டிராவலர்ஸ் கார்ப்பரேஷனில் அவனை சேர வைக்கிறான். அங்கே டிரிஃப்டர் சிறிது காலம் வாழ்ந்து 1993ல் மது விற்பவனாக மாறி, தன்னுடைய இருப்பை உறுதி செய்யும் பொருட்டு 1970க்கு டிரிஃப்டரை சந்திக்க செல்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;தலை சுற்றுகிறதா?!:-D&lt;br /&gt;&lt;br /&gt;மது விற்பவன், தனது இருப்பை உறுதி செய்யும் குறிக்கோளை வெற்றிகரமாக முடித்து, படுக்கையில் ஓய்வெடுக்க செல்வதோடு கதை முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது ஒரு கேள்வி. ஜேனின் தந்தை யார்? தாய் யார்? தாத்தா பாட்டி யார்யார்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;கதை எப்படியிருக்கிறது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_eg4SGUh5cBE/SMT0jPcXQqI/AAAAAAAABC0/_Wu6K_Kvm1U/s1600-h/loop.gif"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5243584752444195490" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_eg4SGUh5cBE/SMT0jPcXQqI/AAAAAAAABC0/_Wu6K_Kvm1U/s400/loop.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36234289-5685903862538788308?l=bookimpact.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookimpact.blogspot.com/feeds/5685903862538788308/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36234289&amp;postID=5685903862538788308' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/5685903862538788308'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/5685903862538788308'/><link rel='alternate' type='text/html' href='http://bookimpact.blogspot.com/2008/09/all-you-zombies-raobertaheinlein.html' title='ஆல் யூ ஸோம்பீஸ் - All you Zombies - Robert.A.Heinlein'/><author><name>யோசிப்பவர்</name><uri>http://www.blogger.com/profile/11448882321151780638</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/-41MU05rD3NQ/TivKhrHfAAI/AAAAAAAABvM/1Rt6Kbr7c9M/s220/DSC00304.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_eg4SGUh5cBE/SMT0jPcXQqI/AAAAAAAABC0/_Wu6K_Kvm1U/s72-c/loop.gif' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36234289.post-4924968508912953706</id><published>2008-06-30T13:31:00.003+05:30</published><updated>2008-12-12T00:42:02.174+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆங்கில நாவல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஷிட்னி ஷெல்ட்டன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாவல்'/><title type='text'>The Doomsday Conspiracy</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_cXy91K5_Avs/SGiU6TzvuSI/AAAAAAAAAFQ/DYpFanuNOnM/s1600-h/Doomsday_Conspiracy.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_cXy91K5_Avs/SGiU6TzvuSI/AAAAAAAAAFQ/DYpFanuNOnM/s320/Doomsday_Conspiracy.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5217583897779353890" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆங்கில எழுத்தாளர்களில் மிகப் பிரபலமான எழுத்தாளரான &lt;a href="http://bookimpact.blogspot.com/2008/01/blog-post_16.html"&gt;சிட்னி ஷெல்டன்&lt;/a&gt; எழுதிய புத்தகமே இந்த டூம்ஸ் டே கொன்ஸ்பைரசி. வழமை போல சிட்னி ஷெல்டன் எம்மை கதை மூலம் ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கும் அழைத்துச் செல்கின்றார். அதுவும் மின்னல் வேகத்தில் ஐரோப்பாவை சுற்ற வைக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாலை 4.00 மணிக்கு அழைப்பு ஒன்றைப் பெறும் கொமான்டர் பெல்லாமி அவசரம் அவசரமாக NSA (National Security Agency) இயக்குனரைச் சந்திக்குமாறு பணிக்கின்றனர். இங்கு இவருக்கு ஒரு பணி வழங்கப்படுகின்றது. இந்தப் பணியை செவ்வனே பெல்லாமி நிறைவேற்றிய பின்னர் தன்னை கொலைசெய்யவும் உயர்மட்டத்தில் முயற்சி நடக்கின்றதை அறிகின்றார். சில வேற்று கிரக வாசிகள் பற்றிய இரகசியத்தை மறைக்க உலக நாடுகள் நடத்தும் நாடகத்தில் பெலாமியை இழுத்து விடுகின்றனர். இதில் இவர் பாத்திரம் முடிந்ததும் அவரைக் கொலை செய்ய முயல்கின்றனர். இதில் இருந்து பெல்லாமி தப்பி ஒடும் கதைதான் இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போர்ன் திரைப்படம், புத்தகம் வாசித்திருந்தால் அதில் கிடைக்கும் அதே திருப்தியும் பர பரப்பும் இந்தப் புத்தகத்திலும் கிடைக்கும். சிட்னி இரசிகர்களுக்கு விருந்து போடக்கூடிய புத்தகம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36234289-4924968508912953706?l=bookimpact.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookimpact.blogspot.com/feeds/4924968508912953706/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36234289&amp;postID=4924968508912953706' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/4924968508912953706'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/4924968508912953706'/><link rel='alternate' type='text/html' href='http://bookimpact.blogspot.com/2008/06/doomsday-conspiracy.html' title='The Doomsday Conspiracy'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_cXy91K5_Avs/SGiU6TzvuSI/AAAAAAAAAFQ/DYpFanuNOnM/s72-c/Doomsday_Conspiracy.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36234289.post-3174426934056072226</id><published>2008-03-28T17:28:00.001+05:30</published><updated>2008-12-12T00:42:02.427+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை வரலாறு'/><title type='text'>ஒரு யோகியின் சுயசரிதம்.</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_1j4aM72YRWI/R-uubN7giMI/AAAAAAAAAwA/LUK5BrC2oBs/s1600-h/Paramhansa-Yogananda.png"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_1j4aM72YRWI/R-uubN7giMI/AAAAAAAAAwA/LUK5BrC2oBs/s400/Paramhansa-Yogananda.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5182427578838845634" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;font color=red&gt;செ&lt;/font&gt;&lt;/strong&gt;ன்ற ஆண்டு அக்டோபர் மாதம் மயிலை சிட்டி சென்டருக்குச் சுற்றுலா சென்றிருந்த போது வாங்கிய ஒரு புத்தகம் தான் 'ஒரு யோகியின் சுயசரிதம்'. பரமஹம்ஸ யோகானந்தரின் வாழ்க்கை வரலாறு இந்நூல்.&lt;br /&gt;&lt;br /&gt;சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்ததில் இருந்து இது போன்ற இளந்துறவிகளின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதில் ஆர்வம் இருந்து வந்தது. இந்நூல் யோகானந்தராலேயே இயற்றப்பட்டு இருப்பதால் அவருடனே வாழ்ந்து நாமும் வளர்வதாக உணர முடிகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;மஹா அவதார் பாபாஜி பற்றி முதன்முதலில் எழுத்து வடிவில் இவர் தான் முதலில் வெளிக் கொணர்ந்தவர் என்கின்றனர். பாபாஜி, லாஹிரி மஹாஸயர், குரு யுக்தேஸ்வரர் மற்றும் பல சாதுக்களையும் சன்னியாசிகளையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். அவர்களது வாழ்வின் அற்புதங்கள் நம்மை திகைப்பின் எல்லைக்குள் இழுத்துச் செல்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வின் நிலை, இறப்பிற்குப் பிறகான வாழ்க்கை, இந்த வாழ்வின் அர்த்தம் என்ன, எதற்காக நாம் இங்கு வந்திருக்கின்றோம் என்ற ஆதிகால கேள்விகளுக்கு எல்லாம் யோகானந்தர் எளிமையாக கூறும் பதில்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினி அனைவர்க்கும் படிக்க சிபாரிசு செய்யும் இரண்டு புத்தகங்களில் இதுவும் ஒன்று. மற்றொன்று The Himalayan Masters.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இந்நூலைப் பற்றிய மதிப்புரை எழுத என்னால் இயலாது.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்களே படித்துப் பாருங்களேன்.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகம் : ஒரு யோகியின் சுயசரிதம்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தக வகை : வாழ்வுக் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர் : பரமஹம்ஸ யோகானந்தர்.&lt;br /&gt;&lt;br /&gt;கிடைக்குமிடம் : உங்கள் அபிமான நூல் விற்பனையகங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பதிப்பகம் : &lt;a href="http://www.yssofindia.org/"&gt;யோகதா சத்சங்க இயக்கம், ராஞ்சி.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இணையம் : &lt;a href="http://www.crystalclarity.com/yogananda/contents.html"&gt;Autobiography of a Yogi &lt;/a&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36234289-3174426934056072226?l=bookimpact.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookimpact.blogspot.com/feeds/3174426934056072226/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36234289&amp;postID=3174426934056072226' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/3174426934056072226'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/3174426934056072226'/><link rel='alternate' type='text/html' href='http://bookimpact.blogspot.com/2008/03/blog-post.html' title='ஒரு யோகியின் சுயசரிதம்.'/><author><name>இரா. வசந்த குமார்.</name><uri>http://www.blogger.com/profile/07425763148451413962</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_1j4aM72YRWI/Sz8z0oovqGI/AAAAAAAACIs/nbz6yxx540I/S220/mogli.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_1j4aM72YRWI/R-uubN7giMI/AAAAAAAAAwA/LUK5BrC2oBs/s72-c/Paramhansa-Yogananda.png' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36234289.post-2926337580705350569</id><published>2008-01-16T17:50:00.000+05:30</published><updated>2008-01-16T18:00:24.727+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமெரிக்கன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஷிட்னி ஷெல்ட்டன்'/><title type='text'>ஷிட்னி ஷெல்ட்டன்</title><content type='html'>&lt;a href="http://thatstamil.oneindia.in/images36/sidneyshelton.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 139px; CURSOR: hand; HEIGHT: 144px" height="185" alt="" src="http://thatstamil.oneindia.in/images36/sidneyshelton.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;1911 ல் அமெரிக்காவில் பிறந்தவர்தான் எங்கள் ஷிட்னி ஷெல்ட்டன். திரைப்படங்கள், தொலைக்காட்சிச் தொடர்கள் போன்றவற்றிற்கு திரைக்கதை, வசனம் எழுதியதன் மூலம் பிரபலமான இவர் தனது 50வது வயதின் பின்னர் எழுதிய நாவல்கள் உலகை இவரை நோக்கிப் பார்க்க வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர் எழுதிய நாவல்களில் உலகப் புகழ் பெற்றது...&lt;br /&gt;1. மாஸ்டர் ஒப் த கேம்&lt;br /&gt;2. ரேஜ் ஒப் ஏன்ஞல்ஸ்&lt;br /&gt;3. தி அதர் சைட் ஓஃப் த மிட் நைட்&lt;br /&gt;&lt;br /&gt;இவர் ஒரு ஜூத இனத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் தாயார் ருசிய யூத இனத்தையும் தந்தை ஜேர்மன் ஜூத இனத்தையும் சேர்ந்தவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உலக யுத்தம் II ல் விமான ஓட்டியாகப் பணியாற்றினார் என்பதையும் குறிப்பிட வேண்டும். Dooms day conspiracy எனும் நாவலில் இதன் தாக்கத்தைக் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;The Naked Face எனும் முதலாவது நாவலை 1969 ல் எழுதினார். அடுத்த நாவல் The Other Side of Midnight விற்பனையில் சாதனை படைத்ததோடு, பல விருதுகளையும் பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் நாவல்கள் ஒரு சாதூரியமான ஒரு பெண் பாத்திரத்தை நோக்கியே அல்லது சுற்றியே நடக்கும். ரமணிச்சந்திரனைப் போல இவருக்கும் பெண் வாசகிகளே அதிகம். திரைப்படங்களில் இல்லாத சுகந்திரம் நாவல் எழுதுவதில் கிடைப்பதால், நாவல் எழுதுவதையே தான் விரும்புவதாக கூறியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;2005 ல் வெளி வந்த The other side of me, என்ற சுயசரித்தின்படி 17ம் வயதில் தற்கொலை முயற்சி செய்த போதும் அவரது தந்தையால் காப்பற்றப்பட்டாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை சிறப்பான எழுத்தாளர் 2007ல் நியூமோனியாவால் பாதிக்கப்பட்டு இறையடி சேர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் எழுதியுள்ள நாவல்கள்...&lt;br /&gt;• The Naked Face (1970)&lt;br /&gt;• The Other Side of Midnight (1973)&lt;br /&gt;• A Stranger in the Mirror (1976)&lt;br /&gt;• Bloodline (1977)&lt;br /&gt;• Rage of Angels (1980)&lt;br /&gt;• Master of the Game (1982) – வாசித்தாகி விட்டது&lt;br /&gt;• If Tomorrow Comes (1985)&lt;br /&gt;• Windmills of the Gods (1987)&lt;br /&gt;• The Sands of Time (1988) – வாசித்தாகி விட்டது&lt;br /&gt;• Memories of Midnight (1990)&lt;br /&gt;• The Doomsday Conspiracy (1991) – வாசித்தாகி விட்டது&lt;br /&gt;• The Stars Shine Down (1992)&lt;br /&gt;• Nothing Lasts Forever (1994)&lt;br /&gt;• Morning, Noon and Night (1995) – புத்தகம் வாங்கியாச்சு, ஆரம்ப்பிக்கணும்&lt;br /&gt;• The Best Laid Plans (1997)&lt;br /&gt;• Tell Me Your Dreams (1998)&lt;br /&gt;• The Sky is Falling (2001)&lt;br /&gt;• Are You Afraid of the Dark? (2004)&lt;br /&gt;• Catoplus Terror&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;வாசித்த புத்தகங்களின் விமர்சனம் விரைவில்!!!!&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36234289-2926337580705350569?l=bookimpact.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookimpact.blogspot.com/feeds/2926337580705350569/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36234289&amp;postID=2926337580705350569' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/2926337580705350569'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/2926337580705350569'/><link rel='alternate' type='text/html' href='http://bookimpact.blogspot.com/2008/01/blog-post_16.html' title='ஷிட்னி ஷெல்ட்டன்'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36234289.post-600494148427726339</id><published>2008-01-05T18:01:00.000+05:30</published><updated>2008-01-05T18:00:41.088+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாவல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>ஜேஜே சில குறிப்புகள்</title><content type='html'>நேற்றைக்கு ஜேஜே சில குறிப்புகள் நூலை இன்னொரு முறை முழுதாகப் படித்து முடித்து விட்டேன். நண்பர் அதியமான் அந்தப் புத்தகத்தைக் கொடுத்து கண்டிப்பாகப் படியுங்கள் என்று சொன்ன போது, சில பக்கங்கள் படித்து விட்டு மூடி வைத்து விட்டேன். 'அதைப் படித்துப் புரிந்து கொள்வதற்கு சில சிறப்புத் தகுதிகள் தேவை போலிருக்கிறது, எனக்கு இன்னும் அவை இல்லை, அவை கிடைத்து பிறகு படித்துக் கொள்கிறேன்' என்று அவருக்கு மடலும் போட்டு விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் புளியமரத்தின் கதை என்று நாவலை படிக்க வாய்த்தது. அதன் தாக்கத்தில் சுந்தரராமசாமியின் எழுத்துக்கான தாகம் வந்து விட்டது. ஜேஜே சில குறிப்புகளைப் படிக்க ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'இது நாவலா, வரலாற்றுக் கட்டுரையா, தத்துவ நூலா, வாழ்க்கை வரலாறா என்று கேட்டால், எதுவுமே இல்லை என்றுதான் சொல்வேன். அப்படி எந்த வரையறைக்கும் உட்படாத ஒரு படைப்பு' என்று டால்ஸ்டாய் போரும் அமைதியும் குறித்து எழுதியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சுந்தரராமசாமிக்கு மாறுபட்ட பிரச்சனை. நூலின் முகப்பில் A Novel என்று போட்டு, முன்னுரையில், மதிப்புரையில் இது ஒரு நாவல் என்று அடித்துச் சொன்னாலும்,  படிக்கும் போது நாவல் என்று மனம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;தன்னிலை ஒருமையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளராக விரும்பும் ஒருவர் சொல்லிச் செல்வதாக அமைவதால், அந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமிதான் என்று உருவகம் எளிதாக வந்து விடுகிறது.&lt;/li&gt;&lt;li&gt;அறிமுகம் இல்லாத மலையாள இலக்கிய உலகை பின்னணியாகக் கொண்டு பெயர்களையும் இடங்களையும் சொல்லிச் செல்வதால் அவை உண்மை என்றே கொண்டு படித்துப் போக முடிகிறது.&lt;/li&gt;&lt;li&gt;மலையாள எழுத்தாளர்கள், விமரிசகர்கள் என்று பெயரைக் குறிப்பிடும் போது அடிக்குறிப்பாக அவர்களைப் பற்றிய விளக்கங்களைக் கொடுப்பது உண்மையிலேயே ஒரு வாழ்க்கை வரலாற்றை எழுதுவதாகத்தான் படுகிறது.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ol&gt;இவ்வளவுக்குள்ளும் புதைந்திருப்பது ஒரு நாவல்தானாம். அப்படி உணர்ந்து படிக்க முடிந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள். எனக்கு இன்னும் ஒரு முறை படித்தாலும், பாலு திருவனந்தபுரத்துக்குப் போவதும், எழுத்தாளர் மாநாட்டில் கலந்து கொள்வதும், சாராம்மாவை சந்திக்க முயற்சிப்பதும் உண்மையில் நிகழ்ந்தவை போலவே இருக்கும் என்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது முறை முழுமையாகப் படிக்கும் போது ஜேஜேயின் குறிப்புகள் என்னுடைய நாட்குறிப்புகள் போல தெரிய ஆரம்பித்தன. ஒரு படைப்பின் வெற்றி அதைப் படிப்பவர் தன்னை அதில் பொருத்திக் கொள்ள முடிவதுதான். இனம், மொழி, நாடு, காலம் வேறுபட்டாலும் மனிதர்கள் மாறுவதில்லை. அடிப்படையில் நாம் எல்லோரும் ஒன்றுபடுகிறோம். அந்த ஒருமைக்கு உருக்கொடுத்து படிப்பவர்களை தனது கதை மாந்தர்களின் உள்ளோடு இணைய வைத்து விடுபவை உயர் படைப்புகள்.&lt;br /&gt;&lt;br /&gt;டால்ஸ்டாயின் கெவின் அல்லது பீட்டர், மார்கரெட் மிச்செலின் ஸ்கார்லெட், டிக்கென்சின் டேவிட் காப்பர்பீல்டு என்று காலத்தை வென்ற படைப்புகளில் எல்லாம் கதை என்று தெரிந்தும் கதை மாந்தர்களின் மனதுக்குள் புகுந்து கொள்ள முடியும். அதே சாதனையை இன்னும் முழுமையாக, கதை என்றே சந்தேகிக்க முடியாமல், நம்மை ஜேஜே வுடனும், பாலுவுடனும் ஒன்ற வைத்து விடுகிறார் சுந்தரராமசாமி.&lt;br /&gt;&lt;br /&gt;ஜேஜேயின் வாழ்க்கை வரலாற்றை முற்றிலும் சொல்வதாகவும் அமையவில்லை. அங்கொன்று இங்கொன்றுமான தெளித்து செல்லும் விபரங்களிலிருந்து நாம் ஓவியத்தை முழுமைப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். நவீன ஓவியக் கலையில் உருவத்தை முழுமையாகக் காட்ட மாட்டார்கள், சுவைஞர்களின் கற்பனைக்கு முழு இடம் கொடுத்து விடுவார்கள். அப்படி கற்பனை சிறகடித்துப் பறக்க வைக்கும் படைப்பு சுந்தர ராமசாமியினுடையது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜேஜேயின் எழுத்துப் பாணியைக் குறித்து பாலு புலம்புவது.  வேட்டை நாயைப் போல தாவித் தாவிப் போகுமாம். உண்மை என்பது வேட்டை நாய், படைப்பு அதன் கால் தடம் போல, நாம் தடத்தைப் பார்க்கும் போது நாய் போய் வெகு நேரம் ஆகியிருக்கும், கால் தடங்களை மட்டும் தடவிக் கொண்டிருந்தால் நாயை கோட்டை விட்டு விடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுதான் சுந்தர ராமசாமியில் எழுத்துக் குறிக்கோளோ! தீ என்று எழுதினால் வாசகருக்கு சுட்டு விட வேண்டும் என்று லா சா ராமாமிருதம் சொல்லியிருந்ததாகப் படித்திருக்கிறேன். தனது எழுத்து, படிப்பவரை எப்படிப் பாதிக்க வேண்டும் என்று சுந்தர ராமசாமியும் முனைந்து சிந்தித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் ஊரில் வாழ்ந்து மறைந்து சுந்தரராமசாமியை சந்திக்காமலேயே முப்பது ஆண்டுகள் வாழ்ந்து விட்டேன் நானும். புத்தக வாசிப்பில் பைத்தியமாகத் திரிந்த எனக்கே தமிழின் உன்னதமான படைப்பாளிகளில் ஒருவரை ஒரு சில கிலோமீட்டர் தொலைவுகளுக்குள் இருந்தும் பார்க்க வாய்க்காதது தமிழ் இலக்கிய உலகின் அவலம் என்றுதான் சொல்ல வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36234289-600494148427726339?l=bookimpact.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookimpact.blogspot.com/feeds/600494148427726339/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36234289&amp;postID=600494148427726339' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/600494148427726339'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36234289/posts/default/600494148427726339'/><link rel='alternate' type='text/html' href='http://bookimpact.blogspot.com/2008/01/blog-post.html' title='ஜேஜே சில குறிப்புகள்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36234289.post-4682452172228946029</id><published>2007-10-31T06:39:00.000+05:30</published><updated>2007-10-31T06:41:42.953+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கு.அழகிரிசாமி'/><title type='text'>கி. ராஜநாரயணன் தொகுத்த கு.அழகிரிசாமி சிறுகதைகள்</title><content type='html'>சென்ற தலைமுறையின் குறிப்பிடத்தக்க எழுத்தாளரான கு.அழகிரிசாமி எழுதி சிறந்த கதை சொல்லி கி. ராஜநாரயணன் தொகுத்த இப்புத்தகத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட கதைகள் உள்ளன. எளிய நடையில் மனித மணங்களை வெளிச்சமிட்டு காட்டும் இதில் ஒரு சில கதைகள் படித்து பல மாதங்கள் ஆகியும் மனதை விட்டு அகல மறுக்கின்றன, நேசமான பெண்ணின் ஆறுதல் வார்த்தைகளைப்போல. காதலியின் எல்லா உடைகளும் பிடித்திருந்தாலும் அதில் சில எப்பொதும் நம் கண்முன் நிற்கும் அல்லவா? அதுபோல இதில் எனக்கு மிகவும் பிடித்த அய்ந்து கதைகளை குறிப்பிடுகிறேன். இரன்டு பெண்கள் என்னும் கதை ஒரு வாலிபன் அழகில்லாத பெண்ணுடன் பழகும்போது கண்டுகொள்ளாத சமூகம் ஒரு அழகு பெண்ணுடன் பழகும்போது கொதிப்பதை பற்றியது. மகன்களுடன் ஒத்து வராமல் தன் மகன் வயதையொத்த ஒருவருடன் 
